வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பூமிகூட சோற்றுருண்டையாக சுருங்கிப் போகும்



அன்புமிக்க தோழனே வணக்கம், நலம். நாடுவதும் அதுவே.

சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்டக் குழுக்களில், சில தோழர்கள் மலை போல் வேலைகள் குவிந்து கிடப்பதாக உணர்ந்தனர். நமது இயக்கம் வேலைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறதா? என்றும் சிலர் கேட்கின்றனர். சமூகத்தில் நாம் முடிக்க வேண்டிய பணிகள் முடியாமல், கேடு கெட்ட முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின்கால நீடிப்பு இருக்கிற வரை ”வேலைகள் ஓயப்போவதில்லை.’’

தடைகள் இருக்கின்றன

தகர்க்கச் சொல்லுங்கள்!

துயரங்களும் துன்பங்களும்

தோன்றக் கூடும்

அழிக்கச் சொல்லுங்கள்!

இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்கள்

இன்புறவே இயலாது!

தவறு என கண்டதை

மன்னிக்காதீர் ஏனெனில்

அவை திரும்பவும்

நேர்ந்து அதிகமாகக் கூடும் பின்

நமது மாணவர்கள்

நாம் மன்னித்ததற்காக

நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

-யெங்கனி யெவ்டுஷென்கோ

என்ற ருஷ்ய தேசத்து கவிஞனின் வரிகள், நம்காலத்துப் பணிகளை அறிந்து எழுதப் பட்டதைப் போல் உணர முடிகிறது. ஆம். இன்பத்தின் விலை மதிப்பிடற்கரியது, உயர்ந்தது, எளிதில் கிடைக்காத ஒன்று, அதைப் பெற கடின உழைப்பு தேவை. தனி மனிதனின் இன்பமல்ல நாம் வேண்டுவது, சமூகத்தின் இன்பம், அது பெரும் கூட்டமென திரண்டு சாதிக்க வேண்டியது.காட்டாற்று வெள்ளம் யாருக்கும் பெரிதாக பயன்தராது. அழிவைத் தரும். நாம்காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுக்க விரும்பவில்லை. நின்று நிலையாக ஓடி, பயிர் செழிக்க, விளைய, அறுவடையாகக் குவிய, அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்தர வேண்டுமென்ற நோக்கத்தில் ஓடுகிற பரந்த ஆறு.

எனவே, வேலைகள் குவிவது தவிர்க்க இயலாது. இன்பம் என்கிற போது, தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஊடகங்கள் நித்தியானந்தர்களையும் இதரகாவியுடையணிந்தகாமுகர்களையும் அம்பலப்படுத்துகிறது. பின் பரவசப்படுத்தி, சதை வியாபாரத்திற்கு தங்களை தயார்படுத்தி சிற்றின்பம்காண்கிறார்கள். இதில் பெண்களின் முக சுளிப்பையும், அருவருப்பையும் சம்பாதிக்கிறார்கள் நாம் சமூகத்தினையும், நமது அமைப்பையும் நேசிப்பவர்கள். எனவே, நித்தியானந்தர்களுக்கு, பிரணாப் முகர்ஜிகள் பட்ஜெட் படிக்கிறபோது, வழங்கும் சலுகைகளை அம்பலப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என, திமிர்வாதம் பேசும் ஆட்சியாளர்களின் செல்வாக்கை சரிக்க, நமது வேலைகள் இன்னும் அதிகப்பட வேண்டியிருக்கிறது.

“கன்னியர் கடைக்கண்காட்டி விட்டால்

காதலனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்’’

என பாரதிதாசன்,காதலன் எவ்வளவு பெரிய பணியையும் விரைந்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன் எனக் கூறினார். ஷாஜஹானின், மும்தாஜ் மீதானகாதல், தாஜ்மஹாலாக உயர்ந்தது. கலைஞர் கருணாநிதியின் சிம்மாசனம் மீதானகாதல், சென்னை நகரம், இந்திய மாநிலங்களில் எழுச்சி மிக்க சட்டமன்றமாக உயர்ந்து நிற்கிறது. இருவருமே உழைப்பை. சுரண்டியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு, இரவு பகலாக சிந்திய வியர்வை, மற்றும் அவர்களின் உதிரம், பிரம்மாண்டமாகியுள்ளது. நாம் பாரதிதாசன் குறிப்பிட்டகாதலர்களாக இருந்து, உழைப்பைச் சுரண்டும் சிம்மாசன மாமலைகளை சரிக்கவும், சமப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.

“நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை,’’ இது தமிழ்நாட்டு முதுமொழி. தனது களைப்பை, அயர்வை வெளிக்காட்ட முடியாத நமது முன்னோர் நிலப்பிரபுக்களுக்கு நியாயப்படுத்துவது போலும், பண்ணையடிமைகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவும் சொன்ன முதுமொழி. இன்னும் நம் தலைமுறைக்கும் நமக்கடுத்த இளையோருக்கும் புரியாததாகவே நீடிக்கிறது. என்ன தோழர். வேலைகள் குவிகிறது, என மலைத்து நிற்கும் தோழா, எட்டு மணி நேரத்திற்கு பின்னும் உன்னைக் கசக்கும் முதலாளித்துவப்பதரை அழிக்க கூடுதல் உழைப்பும் அடுத்தடுத்த வேலைகளும் தவிர்க்க முடியாது! என திடமாகவும், உரத்தும் சொல்.

விழுப்புரம் நகரில் 12வது மாநில மாநாடு நிறைவு பெற்றதில் இருந்து, ஓடிக்கொண்டே இருப்பதாக தோழர் ஒருவர் சொன்னார். அந்த ஓட்டத்தில் நாம் வளர்ந்து இருப்பதையும், இன்னும் வளர வாய்ப்பு இருப்பதையும் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டார். அது உண்மை 2008 டிசம்பரில் சைக்கிள் பிரச்சாரம், ஜனவரியில் பொங்கல் விழா, பிப் 18 இல் மறியல், மார்ச், ஏப் மாதத்தில் தேர்தல் பணிகள், ஜூன், ஜூலையில் உறுப்பினர் பதிவு, செப் அக் இல் ரேசன்கார்டுக்கான இயக்கம், டிச 25, இல் வெண்மணி தியாகிகள் தினத்தில் தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கை, ஜனவரியில் மீண்டும் பொங்கல் விழா, பிப்ரவரியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், பிப் 12இல் 24 மணி நேரம் தலைநகர் டில்லியில் உண்ணாவிரதம் இவையனைத்தையும் சிறப்பாக்கியக் கூட்டம் நம் கூட்டம்.

உறுப்பினர் சேர்க்கைக்காக 3 நாள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து எளிமையாக நடந்து (7.5 லட்சம் ஹெலிகாப்டர் செலவு) சென்று தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலை சகோதரியுடன் வந்து பார்த்துச் செல்லும் ராகுல்காந்தியின் கட்சியில் கூட நாம் மேலே சொன்ன பட்டியல் சாத்தியம் இல்லை. அல்லது மாநில பட்ஜெட்டில் சலுகைகளை வாரி இறைத்திருப்பதாகச் சொல்லும் திமுக விலும் இது சாத்தியம் இல்லை.

நாம் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். என்றால் அதற்குகாரணம், நாம் நமது அனைத்து அமைப்புகளையும் செயல்படுத்துகிறோம். மாநிலக்குழு, மாவட்டக்குழு, பகுதிக்குழு, கிளைக்குழு ஆகிய அனைத்தையும், அனைத்தின் நிர்வாகிகளையும், ஜனநாயகப் பூர்வமாக செயல்படுத்த எடுத்த முயற்சியாகும். ஏதாவது ஓரிரு இடங்களில் இது நடக்காமல் இருக்கலாம் ஆனால், அது பொது விதி ஆக முடியாது. பொது விதியான நமது அமைப்புகளை மேலும், மேலும் செயல்படுத்துவன் மூலமே, தனிநபர் மீதான வேலைப் பளுவைக் குறைக்க முடியும். சமீபத்தில் கூடிய நமது மாநிலக்குழு, உறுப்பினர் பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் கிளை மாநாடுகளை நடத்துவது என முடிவு செய்துள்ளது. கிளைக் கூட்டங்கள் அல்லது மாநாடுகளை நடத்துவதும், அவற்றை செயல்படுத்துவதும், தனிநபர் மீதான வேலைப் பளுவைக் குறைப்பதுடன், நமது அமைப்பை மேலும் உறுதி கொண்டதாக மாற்றுகிறது. மேலும், மேலும் விரிவடைவதற்கான போராட்டங்களுக்கு விதையிடுகிறது. ஸ்தலப் போராட்டங்களும், நாம் திட்டமிட்ட பாதயாத் திரை பிரச்சார இயக்கங்களும் பெரும் உறுதுணையாக அமைகின்றன.

இன்னொரு அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்வது பலனளிக்கும் 2008 டிசம்பரில் நாம் நடத்திய சைக்கிள் பிரச்சார இயக்கம், 1052 கிளைகளில் நேரடியாக வரவேற்பைப் பெற்றதுடன், 95 ஆயிரம் தோழர்களைச் சந்திக்கவும் உதவியது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் அனுபவம், இரண்டு வகையில் அமைந்தது. ஓன்று நமது ஸ்தாபனத்தை உறுதி செய்யவும், விரிவாக்கம் செய்யவும் பயன்பட்டது. இரண்டு நாம் முன்வைத்த கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும், அரசை வலியுறுத்துவதற்கும் உதவியது. இந்த அனுபவத்தை நமது இடைக்கமிட்டிகளுக்கு விரிவாக்கம் செய்திட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதன் விளைவு தான் 354 இடைக்கமிட்டிகளிலும், தனித்தனியான பாதயாத்திரை பிரச்சார இயக்கம் என திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.

1. சேதுகால்வாய்த் திட்டத்தை விரைவாக அமல்படுத்து.

2. தமிழக அரசாணை எண் 170ஐ திரும்பப்பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடு. அரசுகாலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்.

3. சமூகப் பாதுகாப்புடனான வேலையை, மத்திய, மாநில அரசுகள் சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் அமலாக்க வேண்டும்.

4. தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய, நாள்களின் எண்ணிக்கையையும், கூலியையும் உயர்த்து.

5. வேலை உறுதிச்சட்டத்தை நகர்புறத்திற்கும் அமலாக்கிடு.

ஆகிய 5 கோரிக்கைகளை நமது கிளைகளில், பொதுமக்களிடம் பிரபலப்படுத்துவதும், அதன் மூலம் அரசுகளை நிர்பந்திப்பதுமே, பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.

இதைத் தொடர்ந்து. ஏப் 28 அன்று சென்னை நகரில் பிரம்மாண்டமாக உயர்ந்துள்ள சட்ட மன்றத்தை நோக்கி பேரணி நடத்திட மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து மிக அதிகமான எண்ணிக்கையிலான தோழர்களும், பிற பகுதிகளில் இருந்து, எல்லாக் கிளைகளும் பங்கேற்கும் வகையிலும் நமது தோழர்களைத் திரட்ட திட்டமிட்டு உள்ளோம்.

இந்தப் பணிகளுக்காக நமது கிளைமாநாடுகள், பகுதி மாநாடுகள் என்கிற ஸ்தானப் பணிகளும், அங்கே பங்கெடுக்கிற இளைஞர்களிடம் போர்க் குணத்தை உருவாக்குவதும் நிச்சயமாக உறுதுணையாக நிற்கும்.

வாழ்க்கை மனிதனுக்குத் தரப்பட்டதே

அவன்

எந்த நிலையில் இறக்க விரும்புகிறான்

என்பதை முடிவு செய்து கொள்ளவே!

மேலே சாம்பல் நிற ஆகாயம்!

தொங்கும் நட்சத்திரக் கூட்டங்கள்!

பூமியோ...

உன் வாய்க்குள் சோற்றுருண்டை ஆகிறது.

பென்ட்டி சாறி கோவ்ஸ்கி என்ற பின்லாந்து நாட்டுக் கவிஞனின் வரிகள் எதார்த்தத்தை மறைத்து குருட்டு நம்பிக்கையை விதைக்கவில்லை. தோழனே! முடிவு செய்தால், பூமி கூட சோற்றுருண்டையாக சுருங்கிப் போகும், எனில் மலை போன்ற வேலைகள் நமது கூட்டு உழைப்பில் பனி போல் உருகி விடும். நம்பிக்கை கொள்! செயலாற்று!

அரசு-வாக்குறுதி-வேலைப்பறிப்பு:



மரம் பொய் சொல்வதில்லை
வெட்டுகிறோம்.
மண் பொய் சொல்வதில்லை
மிதிக்கின்றோம்.
மந்திரி பொய் சொல்கிறார்
ஆனால் மாலையிடுகிறோம்.
_கவிஞர் கந்தர்வன்

வார்த்தைகளை நினைவில் கொண்டு, மீண்டும் கேள்விகள் கேட்க முடிவதில்லை. நினைவில் கொண்டிருப்பவர்கள், எளியவர்கள் என்ப-தால், வாக்குறுதி கொடுத்தவர்களை மீணடும் சந்திப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பின் எவ்விதம் ஒலிபெருக்கி முன், பேசிய வார்த்தை-களை நினைவில் கொள்வது. அதுவும் தேர்தல் வாக்குறுதிகள், கொடுக்-கப்படும் விதமும், வெற்றி பெற்ற பின் செயல்படுத்தப்படும் விதமும் நமது அரசியலில், முன் பின் முரணானவை. முதலாவது வாக்காளர்கள் வாக்குறுதிகளை முழுமையாகப் பரிசீலித்து, அதன் பின் வாக்களிக்கும் அளவிற்கான அரசியல் மற்றும் பண்பாட்டு முன்னேற்றத்தைக் கொண்-டிருக்கவில்லை. இரண்டாவது, அத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் நடுத்தர வர்க்கத்தில் பெரும்பான்மையோர், வாக்குச் சாவடிக்கு செல்வதே இல்லை. இந்த இரண்டு காரணங்களும், இந்-தி--யாவின் அரசியலில், முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்களின் பொய் வாக்குறுதிகளை தட்டிக் கேட்கத் தடையாக இருக்கிறது.

இலவச கலர் டிவி, செல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற தொழில்-நுட்ப கருவிகளும், 2ஏக்கர் நிலம், 1கோடி பேருக்கு வேலை, ஆண்டுக்கு லட்சம் பேருக்கு வேலை என்ற வாழ்வியல் தேவைக்கான வாக்குறுதிகளும், தேர்தலின் போது, பெரும் புழுதியை கிளப்புகின்றன. ஆனால், தேர்தல் காலத்திற்குப்பின் வாழ்வியல் தேவை குறித்த வாக்-குறுதிகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. இலவசங்களைக் கொடுப்-பதில் சில சதவிகிதம் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் வாழ்வியல் தேவை, குடும்பத்தின் தற்சார்புகளில் வேலை வாய்ப்பு மருந்துக்கும் கூட அமலாக்கப்படுவதில்லை.

‘வேலை’ என்கிற கோரிக்கை, 13 வது மக்களவைத் தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சியினாலும், 14வது மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியினாலும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இரண்டு கட்சிகளும் ஆண்டொன்றுக்கு 1 கோடிப் பேருக்கு வேலை, தருவ-தாக அறிவித்தனர். ஆனால் மேற்படி 10 ஆண்டுகளில் 2 கோடி புதிய-வர்கள், வேலை தேடி, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இணைந்துள்ளனர். 1999இல் 3.5கோடியாக இருந்த எணணிக்கை, 2009ல் 5.5 கோடியாக உயர்ந்-துள்ளது.
நமது ஆட்சியாளர்கள் இந்தியாவில் உள்ள வேலையின்மையின் சீர-ழிவைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. புரிந்த காரணத்தால் தான், தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனாலும், அதை அம-லாக்க மறுக்கிறார்கள். முதலாளித்துவம், பிரக்ஞையுடன் தான் வேலையின்மையை வளர்க்கிறது, என்பதற்கு இந்தியாவின் கடந்த கால ஆட்சிகள் உதாரணம்.

எந்தவொரு சமூகத்தில், வேலையின்மை இல்லாமல் அல்லது வேலை-யின்மை மிகக் குறைவாக இருக்கிறதோ, அந்த சமூகம், வளர்ச்சி பெற்ற சமூகம், என்று ஐ.நா.வின், மனித வளர்ச்சி குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அடிப்படையில், இந்திய வளர்ச்சியை கணக்-கிட்டால், பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதை அறியலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கையில், 123 வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்தாண்டு 138வது இடத்திற்கு பின்னோக்கித் தள்ளப்பட்டது. டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, 22 வது இடத்தில் இருந்து 33வது இடத்திற்கு வந்-தால் பல்வேறு அதிர்வுகளை வெளிப்படுத்தும் நமது ஊடக உலகம், மனித வளர்ச்சி அறிக்கை குறித்த செய்தியை, சப்தமின்றி பிரசுரித்து முடித்தது.

நமது சமூகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதற்கு இன்னும் ஒரு உதாரணத்தையும் குறிப்பிட முடியும். 2008ஆம் ஆண்டு துவக்-கத்தில் அர்ஜூன் சென் குப்தா, என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தலை-மை-யிலான குழு, ஆய்வறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்-பித்தது. அதில் “77 சதவிகித இந்திய மக்கள், அதாவது 83.6 கோடி இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20 மட்டுமே, செலவிடக் கூடிய நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. 30 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இந்திய நாடு முழு-வதும் உள்ள, இன்றைய விலைவாசி நிலைமையில், ஒரு நாளைக்கு, ஒரு நபர் ரூ. 20 மட்டுமே செலவிடுகிறார் என்பது, மிகக் குறைவான தொகை மேற்படி மனிதர்கள் போக்குவரத்து மற்றும் தேனீர் அல்லது இதர தேவைகளுக்காக செலவிடுவதும், ரூ. 20க்குள் அடங்கும். ஒரு வேளைக்கு ஹோட்டலில் சாப்பிட்டால், ரூ. 20க்கு அரை வயிறு உணவு மட்டுமே கிடைக்கும். இவ்வளவு குறைவான தொகையை மக்-கள் செலவிடுவதற்கு காரணம், சிக்கனமல்ல, வறுமை அல்லது வரு-மான பற்றாக்குறை ஆகும்.

அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் இருந்து, வருமான பற்-றாக்-குறை கொண்ட மனிதர்களும், குடும்பங்களுமே, இந்தியாவில் அதி-கம் என்பதை நாம் அறிய முடியும். வருமானப் பற்றாக்குறைக்கு காரணம் வேலையின்மை, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, அல்லது வேலையிழப்பு மற்றும் உழைப்புச் சுரண்டல் போன்றவை ஆகும். இந்தியாவில் உள்ள 85 சதவிகிதமான குடும்பங்களின் வருமானம், முறைசாராத் தொழில்களைச் சார்ந்தே இருக்கிறது. தினக்கூலி அல்லது வாரக்கூலி என்ற முறையிலேயே உள்ளது. உழைத்தால் மட்டுமே கூலி என்ற நிலையில், நிரந்தரமான வருமானத்திற்கான வாய்ப்பு இல்-லாத காரணத்தாலேயே இந்த அவல நிலை உருவாகிறது.

2004, நாடாளுமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைமை அறிவித்த, “ ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை” என்ற வாக்குறுதி, மேற்படி வருமான பற்றாக்குறையை போக்கக் கூடியதாக இருந்ததா? 2004இல் இருந்து 2009 துவக்கம் வரை எத்தனை குடும்பங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் உத்தரவாதத்தை அரசு கொடுத்-திருக்கிறது? உண்மையில் கொடுக்கவில்லை, மாறாக குறைத்-திருக்கிறது. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 2005, பிப்ரவரியில், மாநில அரசு-களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் “புதிய அரசு வேலை நியமனங்களை நிறுத்தி வையுங்கள்’’ என்பது முக்கிய ராஜ கட்டளை ஆகும். இதன் மூலம் பல்லாயிரம் பணியிடங்களை மத்திய அரசின் நேரடி பொறுப்பாலும் லட்சக்கணக்கான பணியிடங்களை, மாநில அரசு-களின் பொறுப்பிலும் பூர்த்தி செய்வது நின்று போனது.

ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியின் போது, 2002இல் வாஜ்பாய், மத்திய அரசுப் பணியிடங்களை ஆண்டிற்கு 2 சதமாகக் குறைக்கப் போவதாக அறிவித்து, அமலாக்கினார். அதையே காங்கிரஸ் கட்சியும் பின்-பற்றியது. ஐ.மு.கூ.வின் கூட்டாளியான திமுக, தனது மாநில ஆட்சி-யிலும் இதை நிறைவேற்றியது. உதாரணத்திற்கு, தமிழக உள்ளாட்சித் துறை மூலம் கிராமங்களில் துவங்குவதாக அறிவித்த, நூலகங்களில், நூலகராகப் பணியாற்ற, ஓய்வு பெற்ற ஆசிரியர், அல்லது அரசு ஊழி-யர்களை நியமிக்கப் போவதாக, அரசாணை எண் 177 மூலம் பகி-ரங்கமாக அறிவித்தது. ரூ.1000 ஊதியம் என்றும் தெரிவித்தது.

தமிழக உயர்கல்வித்துறை, அரசுக் கல்லூரிகளில் உள்ள, 3025 காலிப்-பணியிடங்களை ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நிரப்ப-லாம் என, அரசாணை எண் 274 (04.07.08) வெளியிட்டது. இப்படி நாம் அறிந்து ஆயிரம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை நிரந்தர வருமானத்தை தட்டிப்பறித்துள்ளது. சுமார் 1.75 லட்சம் பணியிடங்களை மாநில அரசிலும், இதர மாநிலங்களிலும், மத்திய அரசிலும் கணக்கிட்டால், சுமார் 30 லட்சம் பணியிடங்கள் அரசுத் துறையில் மட்டும் காலியாக இருப்பதை குறிப்பிட முடியும்.

இவையன்றி வங்கி, ரயில்வே, இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு துறை-களில் பல லட்சம் பணியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளது. உலக-மயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின், இரண்டாம் கட்ட சீர்-திருத்தம் என்ற பெயரில், விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு போன்றவை மூலம் ஆள்குறைப்பு, அரசு பொதுத்துறைகளில் மேற்கொள்ளப்-பட்டது. 1999இல், பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை “ஒரு ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கு வேலை தருவோம்’’ என்று குறிப்பிட்டது. ஆனால் 2002இல் வங்கிப்பணியாளர் தேர்வாணையம் (ஙிஷிஸிஙி) என்பதையே கலைத்துவிட்டது. 2002இல் சுமார் 99 ஆயிரம் வங்கிப் பணிடங்கள் காலியாக இருந்ததை அன்றைய, பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை குறிப்பிட்டது. 2008 நவம்பரில், சென்னை உயர்-நீதிமன்றத்தில் நடந்த பாரத் மிகு மின் நிறுவனத்திற்கும் (திருச்சி) ஐ.டி.ஐ படித்த இளைஞர்களுக்குமான வழக்கு முக்கியமானது. அதில் “ஐ.டி.ஐ படித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும், பயிற்சி பெற்ற பிறகு திறன் பெற்றவராக மாறிய தொழிலாளர்களின் திறமை-யையும், பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல’’ என்று நீதிமன்றம் குறிப்-பிட்டுள்ளது. இதன் பிறகும் அப்ரண்டிஸ் முடித்த இளை-ஞர்களை மேற்படி நிறுவனம், நிரந்தர வருமானத்துடன் பணியமர்த்த-வில்லை.

நெய்வேலி அனல் மின் நிலையம், 1957இல் துவக்கப்பட்டது. அன்-றைக்கு ஒரேயரு நிலக்கரி சுரங்கமும், ஒரேயரு மின்னுற்பத்தி நிறு-வனமும் செயல்பட்டது. மிக குறைவான மின்சாரம் அதாவது 600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ஊழியர்கள் எண்-ணிக்கை 24 ஆயிரம் என இருந்தது. ஆனால் இன்று 3 சுரங்கங்களும், 3 மின்னுற்பத்தி மையங்களும் செயல்படுகின்றன. சுமார் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், நிரந்-தரப் பணியாளர்களின் எண்ணிக்கையோ 17 ஆயிரமாக குறைந்து விட்டது. உற்பத்தியும், வேலையின் தன்மையும் அதிகரித்த சூழலில், வேலை வாய்ப்பு குறைந்து, லாபம் அதிகரித்து இருப்பது அரசு நிறு-வனத்தின் லாப வெறியை வெளிப்படுத்துகிறது. நமது ஆட்சி-யா-ளர்கள், இந்தியா 8 சதவிகித வளர்ச்சியையும், 9 சதவிகித வளர்ச்சியை- -யும் அடைந்துவிட்டது என்று குறிப்பிடுகிற புள்ளி விவரம், இளைஞர் -களுக்கான வேலை வாய்ப்பை சூறையாடியதன் மூலம் உருவானதாகும்.

மேற்கண்ட விவரங்கள் மூலம் கோடிக்கணக்கான, நிரந்தர வருமா-னம் கொண்ட மனிதர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை, கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி ஆட்சி-கள் அழித்து இருப்பதை அறிய முடியும். ஒருபுறம் வருமானப் பற்றாக்-குறையுடனும், வறுமைக்கோட்டிற்கு கீழும் மக்கள் வாழ்கிற, அதே நேரத்தில், பணக்கார அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தையும் ஊடகங்-கள் வெளிப்படுத்துகின்றன. நடைபெற உள்ள 15வது மக்களவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான, வேட்பாளர்களுக்கான நேர்காணல் பணிகளை, தமிழக அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. திமுக வில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு, எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்? என்பதை மையப்படுத்தி நடந்ததாக செய்திகள் வெளி-யாகின. பல நூறு கோடி ரூபாய்களை செலவிடும் நாடாளுமன்ற உறுப்-பினர்கள், எவ்விதத்தில், இந்திய மக்களின் ஒரு நாளைய வருமானத்தை உயர்த்துவதில் அக்கறை செலுத்துவார்கள்.

பெரும் பணக்கார அரசியல்வாதிகள் குறித்து பிப்ரவரி, 2009, இந்-தியா டுடே செய்தி வெளியிட்டு இருந்தது. முதல் 10 மக்களவை உறுப்பினர்களதும், மேலவையில் 10 உறுப்பினர்களதும் சொத்துக்களின் கூட்டுத் தொகை 1500 கோடி ரூபாய் என குறிப்பிடுகிறது. 150 பேர் பெரும் கோடீஸ்வரர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இந்த செய்தி எம்.எல்.ஏ., எம்.பி.க்களை பெரும் பணக்காரர்களாகவும், மக்களை பரிதாபத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
தற்போதைய நெருக்கடியும் வேலை பறிப்புகளும்
கட்சிகள் தேர்தலின் போது கொடுக்கின்ற வாக்குறுதிகளை, வார்த்தை-களில் இருந்து மட்டும் அமலாக்க முடியாது. கொள்கை மிக முக்கியமானது. இந்தியாவைப் பொருத்தளவில் கடந்த 22 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கை அல்லது உலகமயமாக்கல் கொள்கை, பெரும்பான்மை மக்-களுக்கு எதிரானதாகும். உலகளவிலான பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களுக்கும், இந்தியப் பெரு முதலாளிகளின் நிறுவனங்-களுக்குமான, சந்தையை நமது நாட்டில் கட்டமைப்பதற்கான பொரு-ளா-தாரக் கொள்கைகளையே, இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்றி வரு-கின்றனர். வர்த்தகச் சந்தைக்கும், பங்குச் சந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்த நமது ஆட்சியாளர்கள், உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியின் உயர்வு குறித்தோ, அல்லது உற்பத்தித் துறைகளின் மீதான முதலீடு குறித்தோ கவலை கொள்ளவில்லை. எனவே பெரும் சமூக மாற்-றத்திற்குரிய வேலை வாய்ப்புகள் பெருகும் சூழல் நமது மண்ணில் உருவாகவில்லை.

இரண்டாவதாக, நமது ஆட்சியாளர்கள் ஏற்றுமதி வளாகங்களின் மூலமான வருவாய் காரணமாக, ஜவுளித்துறையிலும், மென்பொருள் துறை-யிலும், கூடுதல் ஏற்றுமதி குறித்து சிந்திக்கத் துவங்கினர். அதே போல் தொழில் துறையிலான வேலை வாய்ப்பு அதிகரித்தது. இவை-யனைத்தும் சேர்ந்து, கடந்த 6 மாதங்களில் லட்சக்கணக்கான வேலை இழப்புகளை உருவாக்கியுளளது. 2008 டிசம்பரில் நடைபெற்ற நாடா-ளுமன்றக் கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், ஆஸ்கர் பெர்னான்டஸ், 5லட்சம் பேர் உலகப் பொருளாதார நெருக்-கடி காரணமாக வேலை இழந்ததாக, நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்-டார். தற்போதைய சூழலில், இந்தியா, உலக அளவில் ஏற்-பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பாதிப்பிற்கு ஆளாகி-யுள்ளது. இது கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளா-மல், அமெரிக்கா போன்ற நாடுகள் மீதான விசுவாசம் காரணமான பாதிப்பு ஆகும்.

இன்று அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி வளர்ந்து படிப்-படியாக, உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது. இதே போன்ற நிலை 1929லும் நிகழ்ந்து உள்ளது. 24.10.1929 அன்று நியூயார்க் நகரின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. அன்று ஒரு நாளில் மட்டும் 1,28,94,650 பங்குகள் கைமாறி உள்ளன. வால் தெரு-வில் ஏற்பட்ட இந்த மாற்றம் படிப்படியாக, உலகை பாதித்தது. இந்-தி--யாவிலும் பொருளாதார நெருக்கடியை விளைவித்தது. சென்னை மாகாணத்திலும் இதன் பாதிப்புகளை உணர முடிந்ததாக, பேரா.கா.அ.மணிக்குமார் எழுதிய, “1930களில் தமிழகம், பொரு-ளாதாரப் பெருமந்தம் ஒர் ஆய்வு’’ எனும் நு£லில் விளக்கியுள்ளார்.

வணிகம், வர்த்தகம், மற்றும் தொழில் ஆகியவற்றில் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும், மீட்கப்படாத மந்தம் நிலவுகிறது. ரயில்-வேயின் வருமானத்தைப் பார்த்தாலும் சரி, பங்குச் சந்தை வருவாயைப் பார்த்தாலும் சரி, கூட்டு நிறுவனப் பதிவாளர்களின் அறிக்கைகளைப் பார்த்தாலும் சரி, அறிவிக்கப்பட்ட இந்திய உற்பத்திகளின் விலைக் குறி-யீட்டைப் பார்த்தாலும் சரி, சில இனங்களில் தேக்கத்தின் அடை-யாளத்தையும், மற்ற இனங்களில் சரிவின் அடையாளத்தையும் நம்மால் பார்க்க முடியும். அனைத்துப் பொருட்களிலும் தொடர்ந்த விலைச் சரிவு தான், கடந்த வருடத்தின் மிகவும் ஏமாற்றமளிக்கும் நிகழ்வாகும். இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை விட, ஏற்றுமதிப் பொருட்-களில் தான் இந்த சரிவு அதிகமாக இருந்தது.

அன்றைக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தோல் தொழில் பாதிப்படைந்தது. ஜரோப்பிய கண்டத்தில் தேவைக் குறை-பாடு இருந்தமையாலும், அந்நியச் சந்தையின் நிச்சயமற்றத் தன்மை காரணமாகவும், பல தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மலாய் நாடுகளில் ரப்பரில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், ஜெர்மனியின் மலி-வான உற்பத்திப் பொருட்களின் காரணமாகவும், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட லுங்கிகள், கைக்குட்டைகள் தேங்கின. ஏற்று-மதி பாதித்தது. இதன் காரணமாக நெசவு மற்றும் அதன் தொடர்-புடைய தொழில்கள் பொருளாதார மந்தத்தால் கடுமையாக பாதிக்கப்-பட்டன. இது 1930களில், நமது இந்திய ஆட்சி, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த காரணத்தால் நிகழ்ந்த கொடுமைகள் ஆகும்.
80 ஆண்டுகள் கழிந்த பின்னரும், இந்தியாவில் மேற்படி தன்மையி-லான, பாதிப்பை உணர முடிகிறது. இப்போதும் அமெரிக்காவில் ஏற்-பட்டுள்ள நெருக்கடி இந்தியாவை பாதிக்கிறது. அதுவும் இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகள் நிறைவு பெற்றும் மாற்றம் இல்லை. என்ன காரணம் என்றால், இந்தியாவை நவீன காலனியாதிக்க நாடாக-வும், அமெரிக்காவின் விசுவாசியாகவும், மாற்றுவதில், உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை பங்களிப்பு செய்துள்ளது ஆகும்.
இப்போது, உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கோவை-யில் உள்ள ஜவுளித் தொழில்களில், 40 முதல் 50 சதம் பாதிக்கப்படும் என்றும், 25 சதவிகிதத்தினர் வேலை இழப்பர் என்றும், மார்ச் 2009 ஃபிரன்ட்லைன் ஏடு குறிப்பிடுகிறது. திருப்பூர் பனியன் தொழிற்-சாலைகள் பெருமளவு ஏற்றமதியை சார்ந்து இருக்கிற காரணத்தால், 3000 நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு படிப்-படியாக வேலை இழப்பை உருவாக்கும் என்று, பனியன் ஏற்று-மதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தெரியப்படுத்துகிறார். குஜ-ராத் மாநிலம் சூரத் நகரில், தங்க நகை ஆபரணத் தொழிலில் ஈடு-பட்டு வரும் தொழிலாளர்கள், ஏற்றுமதியில் தேக்கம் ஏற்படும் போது பாதிக்கப்படுகிறார்கள் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைத் கொடுத்த தொழில்களில் 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு வந்ததாகவும், ஏறத்தாழ 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்த-தாகவும், ஃபிரன்ட்லைன் ஆய்வு குறிப்பிடுகிறது.

மோட்டார் தொழில், வங்கித்துறை (தனியார்) ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என எல்லாத் துறைகளுமே பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இந்திய ஆட்சியாளர்கள், பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை கல்வித் துறையுடன் இணைந்தது. இந்தியாவில் நாம் என்ன கல்வி பயில வேண்டும், என்பதை பன்-னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்-களுக்கான உழைப்பாளர் சந்தையை உருவாக்கிக் கொள்ளும் இடமாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் இருந்து கிடைக்கும் மலிவான கூலி உழைப்பாளர்களால், பன்னாட்டு நிறுவனங்கள் பெருத்த லாபம் சம்பாதிக்கின்றனர். உதாரணத்திற்கு தகவல் தொழில்நுட்பத் துறையை குறிப்பிட முடியும். புதிய பொருளாதாரக் கொள்கையுடன் இணைந்து புதிய கல்விக் கொள்கையும் இந்தியாவில் திணிக்கப்பட்டது. இது பாடத்திட்டங்களிலும், மாற்றத்தைக் கொண்டு வந்தது. தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் வல்லுனர்களை அதிக அளவில் உருவாக்கும் வகையிலான, பாடத்திட்டங்கள் பெருத்தது. 85களுக்கு பின் 24 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் இளைஞர்கள் மேற்படித்-துறைகளில் பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர்.

2003 ஆம் ஆண்டு கணக்குப்படி, மேற்படி பட்டதாரிகளில், அமெ-ரிக்க பட்டதாரிகளுக்குப் போட்டியாக நிறுத்தப்பட்டனர். “இந்தியா-வில் ஒரு கால் சென்டர் ஊழியர் ஒரு மணிநேரத்திற்கு 45 ரூபாய் சம்-பளம் பெறுகிறார். அதே வேலையை ஒரு அமெரிக்கர் செய்யும் பட்சத்தில், 550 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு இந்தியப் பணியாளர் மூலம் அமெரிக்க நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் டாலர் லாபம் அதிகரிக்கிறது’’ என்று இந்தியா டுடே 2003இல் குறிப்பிட்டது. இப்படி வேலை வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், அதிகப் படியான பட்டதாரிகள், தகவல் தொழில் நுட்பத் துறையில் உரு-வாக்கப்பட்டனர். இதன் மூலம் இந்தியாவிலும், இன்ஃபோசிஸ், சத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியைப் பெற்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, இத்துறையை பாதிக்கத் துவங்கி இருக்கிறது. இன்ஃபோசிஸ் 2007_08 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டு 25 ஆயிரம் பேரை மட்டுமே பணி நியமனம் செய்ததாகத் தெரிகிறது. சத்யம் கம்ப்யூட்டரில் 14 ஆயி-ரம் பேரை நியமனம் செய்ய வேண்டியத் தேவையில், 8 ஆயிரம் பேர் நியமனத்தின் மூலம் சமாளிக்க முடிவு செய்துள்ளனர். பல பொறி-யியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ குறைந்-ததாக சொல்லப்படுகிறது. டாக்டர் அனந்த கிருஷ்ணன் போன்ற கல்வியாளர்கள், ஐ.டி துறையில் 100 பேருக்குக் கிடைத்த வேலை வாய்ப்பு 10 பேருக்கானதாக சுருங்கும் என்று குறிப்-பிடுகின்றனர். இவை சம்பளக்குறைப்புக்கும் நிர்பந்தம் செய்யும். இதன் காரணத்தை தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பணி-யில் 47 மில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே உள்நாட்டு வர்த்த-கத்தை சார்ந்து இருக்கிறது. இப்படி வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்திய மென்பொருள் தொழில்களை தாக்குவதை, எப்படி ஆட்சியாளர்கள் தடுக்கப் போகிறார்கள்?

இத்தகைய வேலைப் பறிப்புகள் குறித்து கவலை கொள்ளாமல், இந்திய வங்கித்துறை குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் பாது-காக்கப்பட்டது குறித்து, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பெருமை பேசு-கின்றனர். இந்தப் பெருமைக்கு காரணம் ஆட்சியாளர்கள் அல்ல என்-பதும் இடதுசாரிகளின் தொடர் எதிர்ப்பும், போராட்டமுமே கார-ணம், என்பதும் நாடறிந்த உண்மை. இந்தியாவிலும், ஜூலை19, 1969 அன்று தேசிய மயமாக்கிய வங்கிகளை மீண்டும் தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளின் ஆட்சியின் போது மேற்கொண்டார்கள். 1991களில் அமைக்கப்பட்ட நரசிம்மம் கமிட்டி, 1998இல் நரசிம்மம் கமிட்டி வெளியிட்ட 2வது கட்ட அறிக்கை, 2000இல் வெளிவந்த வர்மா கமிட்டி பரிந்துரைகள் ஆகியவை மிக முக்கியமான உதாரணங்களாகும். பா.ஜ.க தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது, “வங்கிகளின் பங்குகளை பகுதி, பகுதியாக பங்கு சந்தையில் விற்கவும், 33 சதவிகித பங்கு-களை மட்டும் அரசு கை வசம் வைத்துக் கொண்டால் போது-மானது, என்றும் முடிவெடுத்தனர். அதன்படி 67 சதவிகித பங்குகளை விற்பதற்கு அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தனர்’’. இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.

மீண்டும் 2004இல், செப்டம்பரில், லீலாதர் என்பவர் தலைமை-யிலான குழு சமர்ப்பித்த அறிக்கை, நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கி-களை இணைப்பது சார்ந்தது. இது ஆபத்தானது என்பதை இடதுசாரிகளும், வங்கி ஊழியர் சம்மேளனமும் அறிந்து எதிர்த்தன. ஜரோப்பாவில் 1998 இல் இதுபோன்ற இணைப்பு காரணமாக 1.3 லட்சம் பணியிடங்கள் அழிக்கப்பட்டதாகவும், 2002க்குள் 3 லட்சம் பணியிடங்கள் அழிக்கப்படும் என்றும் அன்றைய அறிக்கை கூறுகிறது. இது போல் இந்திய வங்கிகள் இணைப்பும், வேலைகளை அழிக்கும் ஆபத்து கொண்டது. 1998இல் நரசிம்மம் குழு தனது இரண்டாவது பரிந்துரையை அளித்தது. அதில் வங்கிகள் இணைப்பு மூலம், கிளை-களின் எண்ணிக்கையையும், ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய விவ-ரங்கள் அனைத்தும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வின் ஆபத்தான நடவடிக்கைகளையே வெளிப்படுத்துகிறது.
வேலை வாய்ப்பும் உரிமைப் பறிப்பும்
நமது ஆட்சியாளர்கள், தமது ஆட்சிக் குடையின் கீழ் வேலையின்மை என்ற கொடுமை இருப்பதாக ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை. வாரம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதும், அது பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்-கும் என்பதும், பத்திரிகைகளில் தமிழக முதல்வர் வெளியிடும் செய்தி, தமிழகத் தொழில் கொள்கை என்ற பெயரிலும், தமிழகத் தொழில் நுட்பக் கொள்கை என்ற பெயரிலும் அறிக்கைகளாக வெளி-யிடப்பட்டது. அதில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது குறித்து குறிப்பிட்டு இருந்தனர். அறிவிப்புகள் வெளிவந்து ஓர் ஆண்டு ஆன பின்பும், பயனடைந்தவர்களைக் கண்டறிய இயலவில்லை. கிரா-மத்தில் பேசிக் கொள்வதைப் போல், “ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கிடும் கதை’’ மற்றபடி விஷயம் இருப்பதில்லை.

ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர், பன்னாட்டு நிறுவனங்களுக்-காக, மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பந்தம் செய்வதையும், அது குறித்து பூதாகரமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு, மக்களையும், ஆட்சியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியதையும், தான் எழுதிய, “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்’’ புத்தகத்தில் குறிப்-பிட்டுள்ளார். தமிழக அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சிரித்துக் கொண்டே போடுகிற கையெ-ழுத்தை, ஊடகம் மூலம் பிரம்மாண்டப் படுத்தப்படுவதும், ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிடுவது போன்ற ஒன்று தான். இத்தகைய பிரம்மாண்டங்கள் சில வேலை வாய்ப்பை கொடுத்திருக்கும். ஆனால் அவை, “யானைப் பசிக்கு சோளப் பொரி’’ போன்றது. அத்தகைய வேலை, தொழிலாளர் நலச் சட்டத்திற்கு கட்டுப்படாது. உதாரணம், மிகச் சமீபத்தில் போராட்-டம் நடைபெற்ற ஹ¨ண்டாய் மோட்டார் தொழிற்சாலை. இங்கு வரையறுக்கப்பட்ட, தொழிலாளர் நலச்சட்டம் அமலாவ-தில்லை. வேலைப்பளு, அதிக நேரம் உழைத்தல், வார விடுமுறை இல்-லாமை (சம்பளத்துடன்) போன்றவற்றை சொல்ல முடியும்.

இரண்டாவது உதாரணம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், பஞ்சாலைகளில், கேம்ப் கூலி, சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம் என்ற பெயரில் நடைபெறும் கொடுமை. விவசாயம் ஏமாற்றுவித்தை காட்டுகிற கிராமம் மற்றும் சிறு நகரங்களில் இருந்து ஏராளமான பெண்கள் குறிப்பாக திருமணம் ஆகாத 15 முதல் 22 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் கேம்ப் கூலி முறைக்கு ஒப்பந்தம் செய்யப்-படு-கின்றனர். வேலைக்கான பெண்களை, “தகப்பன் இல்லாத, குடிகாரத் தகப்பனைக் கொண்ட, பல பெண் குழந்தைகள் உள்ள, மிகக் கொடிய வறுமையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து, நயவஞ்சக வார்த்தை-கள் மூலம் சம்பந்தப்பட்ட பெண்களை வேலைக்கு அழைத்துவரும் முக-வர்களை, பஞ்சாலை முதலாளிகள் கொண்டுள்ளனர். இத்தகைய தொழிற்கூடங்களில், உணவு, தங்கும் இடம், இலவசம் என்றும் இவை இல்லாமல் சம்பளம் பேசப்படுவதும், பின்னர் உணவிற்கும், தங்குமிடத்திற்கும், சம்பளத்தில் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. 2 அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தத்ததில் பணியமர்த்தப்படும் இத்தகைய பெண்கள், உடல் நல-மில்லை என்றாலும் வேலை வாங்கப்படும் நிலையும், பாலியல் சீண்-டல்களையும், தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் அனுபவிக்-கின்றனர். 12 முதல் 15 மணி நேரம் மிகச் சாதாரணமாக வேலை வாங்-கப்படுகின்றனர்.
மூன்றாவதாக, வேலையின்மை அதிகரித்து, வேலை வாய்ப்பு சுருங்கி-யுள்ள இக்காலத்தை முதலாளிகள் பெரும் சுரண்டலுக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பதாகும். எவ்வளவு நிதி நெருக்கடிகள் இருந்தாலும், முதலாளிகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், முதலாளி ஆட்-குறைப்பு மூலமாகவோ, சம்பளக் குறைப்பு மூலமாகவோ, தனது லாபத்தை தக்க வைத்துக் கொள்கிறார். நெருக்கடியை தொழி-லாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்து முதலாளி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். இதன் மூலம், தொழிற்சங்க உரிமை, பேரம் பேசும் உரிமை, போன்ற அனைத்தும் அழிக்கப்படுகிறது. ஏறக்குறைய முறை-சாரா தொழிலாளர்களைப் போல் நிலைமை மாறுகிறது. பிரா-விடண்ட்ஃபண்டு, கிராஜூவிடி, வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் பறிக்கப்படுகிறது. இத்தகைய நிலை, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் துவங்கி, தனி-யார் நிறுவனங்கள் வரை எல்லாவற்றிலும் காணக்கிடைக்கும் ஒன்-றாக வளர்ந்து இருக்கிறது.

உலகிலேயே மிக அதிகமான வயோதிக உழைப்பாளிகள் இந்தி-யாவில் தான் அதிகம், சிறுகடை வியாபாரிகளாக, பாதையோர வியா-பாரி-களாக, கூடையில் எடுத்துக்கொண்டு வீடு, வீடாக செல்வோராக அபார்ட்மெண்ட் வாட்ச்மேனாக, விவசாயத் தொழிலாளியாக, என்று பல்வேறு வடிவங்களில், ஆண், பெண், பேதமில்லாமல் ஒய்வு பெற வேண்டிய வயதில் உழைக்கும் அவலத்தைக் காண முடியும். ஐரோப்-பாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் கல்லறையில் எழுதி வைக்-கப்பட்ட,
நண்பர்களே, எனக்காக வருந்தாதீர்கள்
எனக்காக எப்போதும் அழவும் வேண்டாம்
ஏனெனில், நான் இனி, எப்போதும்
எதுவும் செய்யப் போவதில்லை
ஏனென்றால் நான் பிணம்.

என்ற வாசகம், நமது உழைப்பாளர்களுக்கும் பொருந்தும். சாவு மட்டுமே ஓய்வைக் கொண்டு வரும், என்ற நிலை இருக்கிறது. அந்தளவிற்கு உரிமைகளற்ற தொழிலாளர் கூட்டம், நமது நாட்டில் நிரம்பி வழிகிறது.
கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் கொள்கைகளால், பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினர், சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் ஆவர். கடந்த 15 ஆண்டுகளில், வளர்ந்த தொழில்கள் வர்த்தகம், விடுதி மற்றும் ஹோட்டல் தொழில் ஆகும்.

இதில் ஒரளவு வேலை வாய்ப்பும் அதிகரித்தது. குறிப்பாக சுய-தொழில் புரிவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் சமீபத்திய பொருளா-தார நெருக்கடி காரணமாகவும், பெரும் வர்த்தக நிறு-வனங்களின் வருகை காரணமாகவும், இத்துறையில் கிடைத்து வந்த வேலை வாய்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. “பொது நிர்வாகம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அரசு போதிய கவனம் செலுத்தாததன் காரணமாக இவற்றில் அதிகரித்து இருக்க வேண்டிய வேலை வாய்ப்பு சரிந்துள்ளது’’ என்று ஜெயதிகோஷ் உள்ளிட்ட பேராசியர்களின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஒரு புறத்தில் பன்னாட்டு வர்த்தக நிறுவனமான, வால்மார்ட் போன்றவை, இந்திய சந்தையில் நுழைவது இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்பு காரணமாக தடுக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிர்லாவின் மோர் போன்ற நிறுவனங்கள் வால்மார்ட்டிற்கு பதிலாக, சிறு வியாபாரிகளை அழித்து வருகின்றன. ஓர் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்-தகத்தை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக, ரிலையன்ஸ் ஃபிரெஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரும் வணிக வளாகங்களாக மாறு-வதன் மூலமும் வேலை கிடைக்கும், என்ற வாதம் உண்மையாக இருந்-தாலும், பல மணி நேர உழைப்பை சுரண்டிக் கொழுக்கும், பெரும் நிறுவனங்களுக்கே, இந்த வேலை வாய்ப்புகள் சாதகமாக இருக்கும்.

நிலக்குவியல்களும் சிறப்பு பொருளாதார மண்டலமும்
பெரும் நகரங்களை நோக்கி இடம்பெயரும் அவலம், உலகில் ஆசியா கண்டத்தில் அதிகம் என்றும், அதிலும் இந்தியாவே முதலிடம் பெறுகிறது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் நகர்மய மாதலில் முதலிடத்தில் மகாராஷ்ட்ராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் இருப்பதாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை குறிப்பிடுகிறது. இந்தத் தகவல், உழைக்கும் மக்களை துயரத்தில் ஆழ்த்துவதாகும். தங்குமிடம், சுகாதாரம், பொது விநியோகத் திட்-டத்தைப் பயன்படுத்துதல், கல்வி போன்ற அத்தியாவசியத் தேவை-களைப் பெறுவதில் பெரும் கஷ்டங்களைச் சந்திக்கும் நிலைக்கு தள்-ளப்-படுவர்.
கிராம சமுதாயத்தில் சிதைவும், ஏழை மற்றும் விளிம்புநிலை மக்-கள் அதிலும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளுமே. இதனால், பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். உலகமயமாக்கல், பாரம்பரிய சமூக, பொருளாதார உறவுகள் மீது தொடுத்த தாக்குதல் காரண-மாகவே, பெண்களும், குழந்தைகளும், உலக சந்தையில் விற்கப்படும் பொருளாக மாறியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை நகரில் ராஜ் தாக்கரே தலைமை-யிலான நவ நிர்மான் சேனா, நாடு முழுவதும் இருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, மராத்தியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தாக்குதல் நடத்தியது. அதே போல் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி-யில், உல்ஃபா மற்றும் இதர பிரிவினர், அங்கு வாழ்ந்து வரும் பீகார் மாநிலத்தவர் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு அவர்கள் மொழி மற்றும் இன அடையாளங்களை ஒரு புறம் முன்வைத்தாலும், இன்னொரு புறம் வேலை வாய்ப்பு பெறுவதற்கு இடம் பெயர்ந்-தவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்பதாகும். இதை நடுத்தர வர்க்-கம் நம்புவதும், இத்தகைய பிரச்சாரத்திற்கு இரையாவதும், இந்-தியத் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கான தடையாக இருக்கிறது.

மிக சமீபத்தில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, இடம்பெயர்தல் குறித்த அறிக்கையை, லண்டன் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் சமர்ப்-பித்து உள்ளது. அதில் “1950களில் பெரும் எண்ணிக்கையிலான கருப்பு இனத்தவர் வந்த போது, எதிர் புரட்சி சிந்தனையாளர்களும், அரசியல் வாதிகளும், பிரிட்டன் அழியப் போகிறது, என ஒப்பாரி வைத்தனர், அது வலது சாரி அரசியல் வாதிகளை தூக்கி நிறுத்த உதவி செய்தது’’, என்று குறிப்பிடுகின்றனர். மகாராஷ்ட்ராவிலும், அஸ்-ஸாமிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கிறது. மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும் இனவாத அல்லது அடிப்படைவாத கருத்துக்-களை மறைமுகமாக மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலும் வளர்த்து விடுகின்றனர். இது அரசின் மீதான கோபத்தை திசை திருப்பப் பயன்-படும், என காங்கிரஸ் தலைமை கையாண்ட காரணத்தினால் ஏற்-பட்ட விளைவு ஆகும்.

இந்தியாவில் முறையான நிலச்சீர்திருத்தம் நடைபெற்று இருந்தால், நகர்மயமாதலின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் இருந்திருக்கும். தமி-ழகத்தில் வீட்டிற்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப் போவதாக, 2006இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், இன்றுவரை சில ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிகப்பட்டு பரிதாபகரமான நிலையிலேயே இந்தத் திட்டம் உள்ளது. ஆனால் பயன்பாடு திமுக-வினருக்கு சாதகமாக இருந்தது என்பது அரசின் வஞ்சக குணத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சீர்திருத்தம் இடம் பெயர்தலைத் தவிர்க்கும். உள்ளுர் அல்லது கிராமப்புற உற்பத்தியை அதிகரிக்கும். கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும. புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்கும் என்று பல்வேறு வாய்ப்புகளை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனாலும் இடதுசாரிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களைத் தவிர இதர பகுதிகளில் சீரிய முயற்சி மேற்கொள்ளப் படவில்லை.

இந்தியாவில் தேபாகா, சர்மா பள்ளத்தாக்கு, புன்னப்புரா வயலார், திரிபுரா, மகாராஷ்டிரத்தில் வோர்லி இன மக்கள், தெலுங்கானா விவசாயிகள் கீழ்தஞ்சை ஆகிய பிரதேசங்களில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களும், நிலத்திற்காக உயிர் பலி கொடுத்து போராடி-யுள்ளனர். விடுதலை இந்தியாவில் நிலச்சீர்திருத்தத்திற்காக மகலனோ-பிஸ் குழு அமைத்து, “நில உச்ச வரம்பின் படி 6 கோடியே 30லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக இருக்கிறது’’. என்று 1969இல் அறிக்கை சமர்ப்-பித்தது. அதன் பின் பல்வேறு காலங்களில், பல விதமான கணக்கு-களைத் தெரிவித்தனர். 2004 ஆகஸ்ட் 19 அன்று மக்களவையில் அரசு வெளியிட்ட கணக்கின் படி, நாட்டில் 73 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஏக்கர் நிலம் இருக்கிறது, என்று பிரகடனப்படுத்தினர். அதில் 54 லட்சத்து 2ஆயிரத்து 102 ஏக்கர் விவசாயிகளுக்குப் பிரித்து கொடுக்-கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் விவசாயிகளுக்கு, 12 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம் பிரித்து கொடுக்கப்பட்டு இருக்-கிறது. அதே போல், கேரளா, திரிபுரா மாநிலங்களிலும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அரசு விவரங்களில் இருந்து கோடிக்கணக்கான ஏக்கர் நிலம், மீண்டும் தனிநபர்களால் விழுங்கப்பட்டு இருக்கிறது, என்பதை நாமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில், வெள்ளையர் காலத்-தில், பஞ்சமர் நிலம் என்ற பெயரில் 5 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்-கப்பட்டது. இந்த நிலங்கள் தலித் மக்களைத் தவிர வேறு சாதி-யினர் விலைக்கு வாங்க முடியாது. இதை 1924, 1956 ஆண்டுகளில் எடுக்-கப்பட்ட சர்வே பஞ்சமர் நிலம் என்று குறிப்பிடுகிறது. இதுவே 1986 சர்வேயின் படி மாற்றப்பட்டு, தனியார் பெயர்களில் பட்டா வழங்கப் பட்டுள்ளது. இப்படி விற்க முடியாத நிலத்தை தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்குவதற்கு அரசே துணை போயிருப்பது, தமிழ-கத்தில் நடந்துள்ளது. (ஆதாரம், கே.வரதராஜன் எழுதிய பிரசுரம்).

இன்னொரு மோசடி சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், தனியாருக்கு அரசு வழங்கி உள்ள நிலங்களாகும். குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா வீதம் வழங்கியது. பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம், ஒரு சதுர அடிக்கு ரூ, 800 வீதம் குடிமனைப் பட்டா போட்டு விநியோகித்தது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 400க்கும் அதிகமான, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு லட்சக்-கணக்கான ஏக்கர் நிலங்களை சலுகை விலையில் கொடுத்து பெரு முத-லாளிகளின் லாபத்திற்கு மத்திய அரசு துணை போய் உள்ளது. தமிழகத்திலும் இது நிகழ்ந்துள்ளது.

ஆனால் மேற்கு வங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்ட, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு காங்., பா.ஜ.க உள்ளிட்ட எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தி-யது. மேற்கு வங்கத்தில் அரசு நிலம் மிகக் குறைவாகவும், தனியார் நிலம் அதிகமாகவும் எடுக்கப்பட்டது. தனியார் நிலத்திற்கு சந்தையில் உள்ள விலை தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் உருவாக்கப்படும் தொழிற்-சாலைகளுக்கு நிலம் கொடுத்த அல்லது சம்மந்தப்பட்ட கிராமத்தினருக்கு வேலைக்கு உத்திரவாதம் தரப்பட்டது. இதற்கென சிறப்பு பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டது. ஆனால் அரசியலில் எதிரும் புதிருமாக செயல்படும் காங்கிரஸ், திரிணாமுல், பா.ஜ.க மாவோ-யிஸ்ட் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து, அதை அமைய-விடாமல் தடுத்தனர். சிங்கூரில், டாடாவின் நானோ கார் தொழிற்-சாலை அமைவதற்கு தடையாக இருந்த பா.ஜ.க குஜராத்தில் இடம் கொடுத்தது. (ஷிணிழி) குறித்து காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மாற்று அணுகுமுறையைக் கொடுத்தது, மார்க்சிஸ்ட்டுகள் மட்டுமே. இன்றைக்கும் மார்க்சிஸ்ட கட்சியின் இணையதளத்தில், மார்க்-சிஸ்ட்டு-களின் தொழிலாளர் நலன் காக்கும், கொள்கை அறிக்கையைக் காண முடியும்.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் பன்-னாட்டு முதலாளிகளையும் அனுமதித்து உள்ளனர். உதாரணத்திற்கு, மும்பை ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில், அண்மைக் காலமாக இஸ்-ரேலியர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். என்ற தகவலை ஃபைனான்-சியல் டைம்ஸ் நாளேடு, மும்பைத்¢தாக்குதல் நடைபெற்ற 26/11க்குப் பிறகு தெரிவித்து உள்ளது. ராஜ்தாக்கரே போன்றவர்கள், மராட்டியர் அல்லாத எதிர்ப்பு இயக்கத்தில், இந்தப் பிரச்சனையை ஏன் சேர்க்கவில்லை, என்பது காங்கிரஸ், பாஜக, சிவசேனை ஆகிய அனைவருக்கும் தெரியும். ஆக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு ஏற்படும் என்று சொன்னவர்கள், உலகப் பொருளாதார நெருக்-கடிக்குப் பின் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். அடிப்படையில் நிலச்-சீர்திருத்தத்தின் மூலம் உள்நாட்டு விவசாய உற்பத்தியையும், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியையும், மேம்படுத்தாமல், தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் வளர்ச்சி பெறப் போவதிலை.

வாங்கும் சக்தியும் வேலைவாய்ப்பும்

மக்களின் வாங்கும் சக்தி (றிuக்ஷீநீலீணீsவீஸீரீ சிணீஜீணீநீவீtஹ்)க்கும், வேலை வாய்ப்பு-களுக்கும், நிறைய தொடர்புகள் இருப்பதை பேரா.பிரபாத் பட்நாயக் போன்ற பொருளாதார மேதைகள் நிறையவே எழுதி உள்ளனர். இன்-றைய முதலாளித்துவத்திற்கு சாதகமான உலகமயமாக்கல் கொள்கை, விவசாய மற்றும் சிறு தொழில் உற்பத்திகளைப் பாதித்-துள்ளது. இத்தகைய தொழில்களில் ஈடுபட்டவர்களின் வேலை வாய்ப்-பையும் பறித்துள்ளது. மேற்படி சிறு தொழில்களில் ஈடுபட்-டுள்ள-வர்கள் இடம் பெயர்ந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுவதைத் தடுப்-ப-தற்கு எந்த வித நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, முதலாளித்துவத்திற்கு சாதகமான பொருளாதார அறிஞரான கெய்ன்ஸ் சுட்டிக்காட்டிய நலத்திட்ட கொள்கைகளையும் அரசுகள் கைவிட்டன. அது முதலாளிகளை மேலும் பெரு முதலாளிகளாக மாற்-றும் பணியைச் செய்தது. அது “நிதிகளின் உலகமயமாக்கலாக’’ வளர்ந்தது. உற்பத்தியைப் பெருக்கவில்லை. எனவே தான் இந்த நிதி மூலதன வளர்ச்சியை, வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்றும், வேலை இழப்பு வளர்ச்சி என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய நிதி மூல-தனத்தின் வளர்ச்சி மற்றொரு புறத்தில் வாங்கும் சக்தியை குறைக்கிற காரணத்தினால், புதிய தேவைகள் குறைந்து உற்பத்தி தேக்கம் ஏற்-படுகிறது. இப்போதைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே காரணம், என குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ள ஜ.நா.சபை, நோபல் பரிசு பெற்ற பேரா.ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையில் குழு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையில் பிரதானமான ஒன்று, அரசு தனது பொதுச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இந்தப் பரிந்துரை மிகச் சரியானது. ஏனென்றால், அமெரிக்காவின் வால்தெரு வங்கிகள் திவாலான போது, அதை மீட்க, அமெரிக்க அரசு 700 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையான கொடுத்தது. அதேபோல் இந்தி-யாவில், பங்குச் சந்தையின் சரிவைத் தடுக்க, ப.சிதம்பரம் நிதியமைச்-சராக இருந்த போது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இன்-சூரன்ஸ், வங்கி ஆகியவற்றின் லாப தொகையை, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கட்டாயப் படுத்தப்பட்டனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 7800 கோடி ரூபாய் மோசடியில் சிக்கித் திணறிய போது, இந்திய அரசே 2100 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை கொடுக்க முன் வந்தது. இந்தியாவின் பெரும் மோட்டார் தொழில் நிறுவனங்களும், இதர தொழில்களும், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போது, மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டத்துடன் முன் வந்ததை, நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகளில் இருந்து அறிய முடிந்தது.

இவையனைத்தும், சிலரின் நலனைக் காப்பவை. பெரும்பான்மையான மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த இவை உதவாது. எனவேதான் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், பொதுச் செலவை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்-தியுள்ளார்.
1980களின் துவக்கத்தில் இந்திய அரசு மேற்கொண்ட நலத்-திட்டங்கள், குறிப்பாக, கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள், பொதுச் செலவினத்தை அதிகரித்தது என்றும், மக்களின் வேலை நாட்களை பாதிக்காமல் தடுத்தது என்றும், அதன் மூலம் உற்பத்தித் தேக்கம் இல்-லாமல் ஒரளவு வளர்ச்சி கண்டது என்றும், புதிய வேலை வாய்ப்பு-களுக்கு உதவியது என்றும், பேராசிரியர்கள் சி.பி.சந்திரசேகர் மற்றும் ஜெயதி கோஷ் ஆகியோர் எழுதிய “விணீக்ஷீளீமீt tலீணீt யீணீவீறீமீபீ’’ என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. ஆனால் உலகமயமாக்கல் காலத்தில் அரசின் பொதுச் செலவினம், முதலாளிகளுக்கு துணை போவதாக அமைந்தது. இக்-காலத்திலும், சாலை, ரயில் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதை பொது மற்றும் தனியார் கூட்டணி (றிuதீறீவீநீ - றிக்ஷீவீஸ்ணீtமீ - றிணீக்ஷீtஸீமீக்ஷீsலீவீஜீ (ஜீஜீஜீ)) மூலம் நிறை-வேற்றினர். இது 80 களின் துவக்கத்தில் இருந்ததைப் போல் அல்லா-மல், நவீன தாராளவாதத்திற்கு துணை போகிற வகையில் அமைந்தது. இதன் விளைவாக ஒன்று விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நலிவுற்று மக்கள் இடம் பெயர்ந்தனர். இரண்டு, நவீன தாராளவாத அணுகு முறையின் காரணமாக எல்லாவற்றிலும் தனியாரின் ஆதிக்கம் உருவானது. மூன்று, மேற்படி இரண்டின் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொதுச் செலவினம் தடுக்கப்பட்டது. அது மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்த வில்லை.

இவையனைத்திற்கும் மேலாக, அரசு முதலீடான பொதுப் பணத்தை, அரசுத்துறை மூலமாகவே செலவிடுகிற போது, சம்மந்தப்-பட்ட பணியின், தரமும் வாழ்நாளும், தனியாரின் செயலை விட அதிக-மாக இருக்கும். நாம் மேலே குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் கூட்டணி என்ற பெயரில், தனியாரிடம் கொடுக்கப்படும் ஒப்பந்தங்கள் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் காரணமாகவும், லாபம் காரணமாகவும், தரக்குறைபாடு உடையதாக இருக்கும்.
அதே நேரத்தில் வாங்கும் சக்தியை பாதுகாக்கும் முயற்சி என்ற பெயரில் தொடர்ந்து, உழைப்பாளிகளை கடும் உடலுழைப்பு தொழி-லாளிகளாக பராமரிப்பது சரியா? பெரும் வளர்ச்சி ஏற்படுகிற போது, இடம் பெயர்தலும், சிறு தொழில்களின் அழிவும் தவிர்க்க முடியாதது, என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் நியாயம் இருக்கிறது. திறனற்ற (ஹிஸீsளீவீறீறீமீபீ) உழைப்பாளர்களை, திறன் (ஷிளீவீறீறீமீபீ) கொண்ட-வர்களாக மாற்றுவதும், நவீன உற்பத்திக் கருவிகளை கையாளும் திறன் கொண்டவர்களாகவும் மாற்றுவது அவசியம். ஆனால் இது நடைபெறவில்லை. காரணம் உலகமயமாக்கல் கொள்கை, உற்பத்தி சார்ந்த தொழில்களின் மீது முதலீடுகளை உருவாக்கவில்லை. ஆகவே தான் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான வேலை வாய்ப்பை வலியுறுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது, புதிய உற்பத்தித் துறை யூனிட்டுகள் வளர்ச்சி பெறும் என்பது, பொருளாதாரத்தின் அடிப்படை புரிதல். இதை தேவை மற்றும் விநியோகம் (ஞிமீனீணீஸீபீ ணீஸீபீ ஷிuஜீஜீறீஹ்) என்று குறிப்பிடுவர்.

தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டமும்
ஐ.மு.கூவின் அணுகுமுறையும்

கடந்த 14 வது மக்களவையின் ஆட்சியாளர்கள், இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடத்தில் இருந்தது மிகப்பெரும் நன்மையை, இந்திய மக்களுக்கு சில வகைகளில் புரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தது. தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை அமலாக்கியது, வன உரிமை மசோதாவை நிறைவேற்றியது. போன்றவை முக்கியமானதாகும். இன்று காங்கிரஸ் கட்சி, ழிஸிணிநிகி திட்டத்திற்கு உரிமை கொண்டாடலாம் அல்லது பெருமை பேசலாம். ஆனால் அதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதே உண்மை.

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசுக்கு ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்ட காலத்தில் இருந்து, இடதுசாரிகள் 10க்கும் மேற்-பட்ட கொள்கை அறிக்கைகளை (றிஷீறீவீநீஹ் ஸீஷீtமீ) முன்வைத்து பிரதமரிட-மும், சோனியாவிடமும் விவாதம் நடத்தி உள்ளனர். இதை காங்கிரஸ் தலைமை மறுக்க முடியாது. இதன் விளைவுகளின் ஒன்று தான் ழிஸிணிநிகி ஆகும். 2004 செப்டம்பரில், இது குறித்த ஆலோசணை உருவானது. பின்னர் 2005 பட்ஜெட்டில் 200 மாவட்டங்களுக்கு என விரிவாக்கம் செய்தது. அதன் பின் 2007இல் அனைத்து மாவட்-டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ழிஸிணிநிகி வை இடதுசாரிகள் முன் மொழிந்ததற்கு அடிப்படைக் காரணம். கிராமப்புற மக்கள் தங்களின் வறுமையின் காரணமாக, வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். அதி-லிருந்து மீள, 100 நாள் வேலைக்கான சட்டமும், ஏற்கனவே அரசு நிர்ணயித்துள்ள ஒரு நாளைக்கு 80 ரூபாய் கூலியும் ஒரளவு உதவி செய்யும் என்பதாகும்.

இந்திய அரசு தெரிவித்துள்ள விவரத்தின் படி, 1990களில் 184 வேலை-நாட்கள், 2000இல் 135 ஆக குறைந்து, 2007இல் 74 நாட்களாக அதல பாதாளத்தில் விழுந்தது. 2005இல் தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் நிறைவேறுவதற்கு முன் 57 நாட்களாக இருந்தது. என்பதைக் கணக்கிட வேண்டும். ஒரு நபர் ஒரு வருடத்தில் மேலே குறிப்பிட்ட குறைவான நாட்கள் மட்டுமே உழைத்து, குடும்பம் நடத்து-வதன் கொடுமையை நாம் உணர முடியும். எனவே 100 நாள் வேலை உறுதி சட்டம், ரூ, 80 கூலி, குறைந்த பட்ச மாற்றத்தை கொணரும், என இடதுசாரிகள் நம்பினர்.

இந்த நம்பிக்கை வீண் போகவிலலை. சிறு முன்னேற்றத்தை, கிராமப்-புற விவசாயத் தொழிலாளிகளிடம் ஏற்படுத்தி உள்ளது. குறைந்த பட்ச வேலை நாட்களையும், வருமானத்தையும் உத்திரவாதம் செய்துள்ளது. இடம் பெயர்தலை வட இந்திய மாநிலங்களில் கட்டுப் படுத்தி உள்ளது. என்ற வகையில் இத்திட்டம் தொழிலாளர்களுக்கு நன்-மையையும், பொதுச் சொத்துக்களான, கிணறு வெட்டுதல், கால்வாய் அமைத்தல், ஏரி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற வகையில் சமூகத்திற்கு நன்மையையும் அளித்துள்ளது.

இருந்த போதிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கு, மேற்படி சட்டத்தில் முழுமையான உடன்பாடு இல்லை. எனவே தான் நிதி ஒதுக்கீட்டினை போதுமான அளவிற்கு உயர்த்த வில்லை. மற்றொரு புறத்தில் இடதுசாரிகள், சட்டம் வரையறை செய்ய வேண்டிய, தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பற்றி வலி-யுறுத்தியது வேலை வழங்க ஒரு கிராமத்திலோ, பஞ்சாயத்து யூனியனிலோ வாய்ப்பு இல்லாத பட்சத்தில் சம்பளம் 100 நாட்கள், விண்ணப்பித்த குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என வரையறை செய்துள்ளது. 5க்கு மேற்பட்ட 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் தாய்மார்கள் வேலைக்கு வருவார்களானால், ஒரு பெண்ணை, குழந்தை-களை பராமரிக்கும் பணிக்கு அனுப்ப வேண்டும், கிராம பஞ்சாயத்-திற்கு தேவையான வேலையை, கிராம சபைக் கூட்டத்தில், உழைப்-பாளர்களின் கருத்திற்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்பன போன்ற ஜனநாயக உரிமைகள் இடதுசாரிகளின் வற்புறுத்தலால் மேற்-கொள்ளப்பட்டது. ஆனால் இந்த உரிமைகள் எங்குமே பின்பற்றப்-படவில்லை. என்பதை ராஜஸ்தான் , ம.பி., பீகார், உ.பி., ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் பிரன்ட் லைன் (ஜுன் 16, 2009) ஏட்டிற்காக ஆய்வு மேற்கொண்ட ஜான் ட்ரெஸ் குழுவினர் குறிப்-பிடுகின்றனர் ம.பி.யில் பதி என்கிற கிராமத்தில் மட்டுமே, வேலை கொடுக்-காத நிலையில், சட்டத்தின் உரிமைகளைப் பயன்படுத்தி, சில நாட்களுக்கு கூலி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் 2 இடங்களில் மட்டுமே குழந்தைப் பராமரிப்புக்கான, ஊழியர் ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளனர். என்பது ஆய்வுக்குழு அறிக்கை.

காண்ட்ராக்டர்களை அனுமதிக்கக் கூடாது என சட்டம் குறிப்பிடு-கிறது. ஆனால் பணியிடங்களில் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். மஸ்டர் ரோல் (பெயர் பதிவு) ஊழல், வங்கி கணக்கு துவங்குவதில் முறைகேடு போன்ற முறைகேடுகளைக் காணமுடிந்ததாக குறிப்-பிடுகின்றனர். தமிழகத்தில தற்போதைய தேர்தல் அறிக்கையில் திமுக, வரும் காலங்களில் ழிஸிணிநிகி க்கான வேலைத் திட்டத்தை 150 நாட்-களுக்கு உயர்த்துவோம், என அறிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு உரிய முறையில் செயலாற்றவில்லை. என்பதை மத்திய தணிக்கைக்குழு 2006 ஆண்டு பணியை தணிக்கை செய்து குறிப்பிட்டுள்ளது. 10 மாவட்-டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. என குறிப்பிட்டுள்ளது. கூலி ரூ. 40 மட்டுமே கொடுத்தனர். என்பதை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் போராடிய கிராம மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையை தமிழ்நாடு அரசு பாதுகாத்தது. ஏனென்றால் தமிழக அரசின் கொள்கை ழிஸிணிநிகி விற்கு எதிரானது. மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர். உழைத்தால் மட்டுமே கூலி என்ற வார்த்தைகள் மூலம் தொழிலாளர்களை அவமானப்படுத்தியதுடன், சட்டத்தையும் புரிந்து கொள்ள மறுத்தார். ஆண், பெண் பாரபட்சம், தலித், தலித் அல்லாதோர் பாரபட்சம் போன்றவை தமிழகத்தில் ழிஸிணிநிகி செயல்-பாட்டில் இருக்கிறது.

வேலைக்கு வராதோரின் பெயர்களை எழுதி, கூலியை திருடிச் செல்லும் காண்ட்ராக்ட் முறையும், தமிழக கிராமங்-களில் இருக்கிறது. 150 நாட்கள் உயர்த்துவோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக 100 நாட்கள் எந்தெந்த கிராமங்களில் வேலை கொடுத்தோம் என்பதை ஏன் குறிப்பிடவில்லை. இவையன்றி, திமுக கடந்த காலத்தில் நியமனம் செய்த ழிஸிணிநிகி அமலாக்கத்திற்கான, கிராமப் பஞ்சாயத்து குமாஸ்தாக்களை வேலை நீக்கம் செய்து அனுப்பிவிட்டு, தான் ஆட்சிக்கு வந்த பின், தனது கட்சியைச் சேர்ந்-தவர்-களை நியமனம் செய்தது. அப்பட்டமாக அரசு திட்டத்தில், தனது கடசியின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டது திமுக.

எல்லாவற்றிற்கும் மேலாக, ழிஸிணிநிகி யின் வெற்றி, ஒதுக்கப்படும் நிதியில் தான் இருக்கிறது. ஐ.மு.கூ. அரசு இது குறித்து போதுமான அக்-கறை செலுத்தவில்லை. உதாரணம் 5 ஆண்டுகளில் சுமார் 1.25 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போதைய பட்-ஜெட்டில் 30,100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது தேர்தல் ஆண்டு என்ற சூழலிலும், 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருந்ததில் 6 ஆயிரம் கோடியை இத்திட்டத்திற்கு குறைத்தது அக்கறை இன்மையின் வெளிப்பாடே ஆகும். ஆனால் விரல் விட்டு எண்ணுகிற எண்ணிக்கை கொண்ட முதலாளிகளின் நலனுக்காக, 30 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இப்படி முதலாளிகள் கண்ணில் வெண்ணையையும், கிராம தொழிலாளிகள் கண்ணில் சுண்ணாம்பையும் வைத்தது தான், மத்திய ஐ.மு.கூ. அரசு.

வேலையின்மையைத் தீர்ப்பதில் அரசின் பாங்கு

“வேலையில்லா திண்டாட்டம்’’ என்ற சமூக அவலம், நமது நாட்-டில் ஒழிக்கப்பட வேண்டுமானால், அரசு தீவிரமாக செயலாற்ற வேண்-டும். தற்போதைய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலிப்பணி இடங்களை பூர்த்தி செய்வதன் மூலம் சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உத்தரவாதமான வேலை வழங்க முடியும். இதன் மூலம் அரசின் பொதுச் செலவினமும் உயரும். சுமார் 35 லட்சம் குடும்பங்களின் நுகர்வுத் தன்மை, பஞ்சாலை, உணவு, மற்றும் வீட்டுத் தேவைகளின் உற்பத்தியை அதிகரிக்கும். புதிய உற்பத்தி நிறுவனங்கள் துவக்கப்பட வேண்டிய தேவை உரு-வாகும். அதன் மூலமும் வேலை வாய்ப்பு பெருகும்.

இத்தகைய அணுகுமுறை, அரசின் கொள்கை மாற்றத்தின் மூலமே சாத்தியம். புதிய பொருளாதாரக் கொள்கையும், உலகமயமாக்கல் கொள்¬-கயும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மன்மோகன் சிங் குறிப்பிட்ட “மனித முகம் பொருந்திய உலகமயமாக்கல் கொள்கை’’, என்ற பெயரில் பழைய கள்ளைப் புதிய பாட்டிலில் ஊற்றிக் கொடுத்த சம்பவமே, கடந்த 5 ஆண்டுகளில்¢ நடந்துள்ளது. இது உதவாது, அணுகுமுறை இரண்டு வகையில் மாறவேண்டும். ஒன்று அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமன விகிதாச்சாரத்தை உயர்த்தும் வகையில் இருப்பது. இரண்டு வெளிநாட்டிலிருந்து இறக்கு-மதி செய்யப்படுகின்ற நுகர்வு மற்றும் மின்னனு பொருட்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கவும், அதிகரிக்கவும் வாய்ப்பு கொடுப்பது. இந்த இரண்டு கொள்கை மாற்றங்களை இந்திய அரசு பின்பற்றுவதற்கு, நவீன தாராளமயமாக்கல், நவ காலனி-யாதிக்கத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்த விழைகின்ற, ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கிகளின் கட்டளைகளுக்கு அடிபணியக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், அமெ-ரிக்காவிற்கு பறந்து சென்று, ஜ.எம்.எப்.பின் ஆலோசனையைப் பெற்று வரும் கடமையை செய்து வரும், நிதியமைச்சரின் அனிச்சைச் செயல், அயல்துறைக் கொள்கைகளில் இருந்தே மாற்றம் பெறும். தற்போது இந்தியா அமெரிக்காவிற்கு இளைய பங்காளியாக மாற விரும்புகிறது. அமெரிக்காவிற்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகளையே, அது இந்தியாவில் திணிக்கும். உதாரணத்திற்கு “அணுசக்தி ஒப்பந்தம்’’ என்ற தொழில் நுட்ப ஒப்பந்தத்துடன், கூடவே பல வர்த்தக ஒப்பந்-தங்-கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்கள், இந்-தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சிகளை பாதிப்பதில் துவங்கி, சில்லரை வர்த்தகம் வரையிலும் பாதிக்கும் சூழலை உருவாக்கும். 2008, செப்டம்பரில் இந்திய அரசு திட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்தியா வந்து தொழில் நுட்ணீகங்கள் வெளிப்படுத்தி செய்தி வெளியிட்டன. மற்றொரு புறம் சில்லரை வர்த்தகத்தில் ஈடு-படத் துடிக்கும் வால்மார்ட் இந்தியாவிற்குள் வருவதை தடுக்கும், முழு-மை-யான முயற்சி மத்திய அரசிடம் இல்லை.

மேற்படி நிகழ்வுகளுக்கு அடிப்படை நவகாலனி ஆதிக்கத்திற்கு உடன் -படுவது ஆகும். காலனி ஆதிக்கத்திற்கு ஆட்படும் நாடு, தனது சுயேட் சையான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது, என் பது கடந்த கால அனுபவம். எனவே வேலை வாய்ப்பை உருவாக்க, உற் பத்தியைப் பெருக்க, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளுடன், அயல்துறைக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவையன்றி உள்நாட்டு அளவிலும் சில சட்டதிட்டங்களை, எளிய-வர்-களைப் பாதுகாக்கின்ற வகையில் உருவாக்க வேண்டும். இந்தியா விடுதலைப் பெற்ற காலத்தில், நேரு ஆட்சியில் இவை இருந்தது. இந்தியாவின் பாரம்பரியமான குடிசைத் தொழில்களில் ஈடுபட்ட-வர்கள் பாதுகாக்கப்படும், வகையில், இந்திய பெரு முதலாளிகள் மேற்படி தொழில்களிலும் உற்பத்தியிலும் ஈடுபடுவதில் இருந்து தடுக்கப்-பட்டனர். உலகமயமாக்கல் காலத்தில் இந்த சிறு தொழில் பாதுகாப்பு நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. உலக முதலாளி-களை மட்டும் அனுமதிக்காமல், உள்ளூர் பெரு முதலாளிகளையும் அனுமதிக்கிற போது, அரசின் ஸ்திரத் தன்மை உறுதி செய்யப்பட்டது. வளர்ச்சியின் கட்டத்தில் சிறு தொழில்கள் அழிவது தடுக்கப்பட முடி-யாததாக இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடு-பட்டுவரும் தொழிலாளர்களின் திறனை, நவீன உற்பத்திக்கு சாதக-மாக உயர்த்தி, அவர்களின் வருமானத்தை, வாங்கும் சக்தியை பாது-காக்காமல் மேற்கொள்வது, இந்தியப் பொருளாதாரத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். இதுவே இப்போது நடைபெற்று உள்ளது. எனவே ரிலையன்ஸ்,, டாடா, பிர்லா உள்ளிட்ட பெரு முதலாளிகளின் வணிகத்திற்கு, சிறு தொழில்களை பாதிக்காத கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.

மூன்றாவதாக, இந்திய அரசிற்கான நிதி வருவாயை உரு-வாக்குவதாகும். நீண்டகாலமாக குறிப்பிட்டு வரும் வருமான வரி பாக்கி 1.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பது, வாராக்கடன் பட்டிய-லில் வங்கிகள் வைத்துள்ள 1.3 லட்சம் கோடி ரூபாயை மீட்பது, சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில் உள்ள, பல லட்சம் கோடி ரூபாய் களை இந்திய அரசு கைப்பற்றுவது, போன்ற மூன்று பிரதானப் பணிகளை அரசு மேற்கொண்டால், அரசின் வரு-வாய் பெருகும். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான, முதலீடு கிடைக்கும். இத்தகைய அணுகுமுறையை கடந்த கால ஆட்சி-யாளர்களான காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி மேற்கொண்டது இல்லை. இனி மேற்கொள்ளப் போவதும் இல்லை. தற்போது அத்-வானி, சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை இந்தியாவிற்கு எடுத்து வர பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும் என்று பேசி வருகிறார். இது-வும் கடந்த கால வாக்குறுதியின் ஒரு பகுதியே. அல்லது கானல் நீரை காண்பித்து ஏமாற்றுவது போன்றதே.

நான்காவதாக, தற்போதைய தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை 200 நாட்களுக்கு உயர்த்துவது, கூலியை ரூ. 150 ஆக உயர்த்து-வது, இத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவு செய்வது போன்றவை அவசியமானதாகும்.
மேற்படி அணுகுமுறையை கடந்த கால அனுபவங்களில் இருந்து, புதிய மாற்று அரசு அமைவதன் மூலமே, மேற்கொள்ள முடியும். காங்-கிரஸ், தலைமையிலான ஐ.மு.கூட்டணி அல்லது பாஜக தலைமை-யிலான தே.ஜ.கூ. ஆகியவை மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. எனவே நோய் உருவாக்கத்திற்கு காரணமான அல்லது நோய் பரப்பும் கிருமிகளாக செயல்பட்ட காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை முறியடிப்பதும், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக மாற்று சக்திகளை தேர்வு செய்வதும், காலத்தின் தேவை, என்பதை உணர வேண்டும்.

மாற்று அணி என்பது காலத்தின் கட்டாயம்.
அதை அரியணை ஏற்றுவது நமது கடமை.
ஒவ்வொருவரும் நன்கு சிந்திப்போம்.
சிறந்த கூட்டணிக்கு வாக்களிப்போம்.
மூன்றாவது மாற்று அணியினை ஆதரிப்போம்.

2009 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்டது

சமுக பாதுகாப்புடனான வேலை

நாம் இருக்கும் நாடு நமதென்ப தறிவோம்! இப்படி இன்று எளிதில் சொல்லித் திரிய முடியுமா? மதம், சாதி, இனம், மொழி, உள்ளூர், வெளியூர் இன்னும் பல பெயர்களில் ஆயிரம் ஆயிரம் வேற்றுமைகள் தொடருகிறது. வேற்றுமை உணர்வும், வெறுப்பும் அதிகரிக்கிற போது கையில் ஆயுதங்களுடன் முதலில் நிற்பது இளைஞன் தான். இப்போது மும்பையில் வன்முறை பயங்கரத்தை நிகழ்த்தியது 18 முதல் 28 வயதுக்குள்ளான இளைஞர்கள் தான். 60 மணி நேரம் விடாது போரிட்டு, உயிரை இழந்து தாஜ் ஹோட்டலுக்குள் இனி நுழையலாம் என வழி தந்ததும், இளைஞன் தான். எல்லா இடத்திலும் இளைஞன், நல்லது, கெட்டது என விளைவுகள் பற்றிய கவலையில்லாமல் இரைந்து கிடக்கின்றான்.
எல்லா சாதனைகளுக்குப் பின்னாலும் இளைஞர்கள் இருந்ததையும், இருப்பதையும் வரலாறு சொல்கிறது. ரோமாபுரியில் அடிமை-களை கொடுமை படுத்தியதற்கு எதிரான போர் முழக்கத்தை முன்-வைத்தது ஸ்பார்ட்டகஸ் எனும் இளைஞன், இந்தியாவில் பிரிட்டி-ஷாருக்கு எதிரான போராட்டத்தை காட்டூத் தீயைப் போல் பரவச் செய்தது, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர ஆஸாத், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், குதிராம் போஸ், கல்பனா தத், சாந்தி தேவி, பீரீதிலதா, துர்கா போன்ற இளைஞர்கள் தான்.
அறிவுக் கண்ணை சரியாகத் திறந்தால் பிறவிக் குருடனும் கண்-திறப்பான் என்று பாரதிதாசன் பாடியதைப் போல், இளைஞனுக்கு நல்லவற்றை சரியான வழியில் கற்றுக்கொடுத்தால், அதற்கான வாய்ப்புகள் கொடுத்தால் நிச்சயமாக இளைஞர்களைக் கொண்ட நாடு, நல்ல எதிர்காலத்தைக் கொண்ட நாடாக அமையும். இந்தியா 54 சதம் இளைஞர்களைக் கொண்ட நாடு (15 வயது முதல் 35 வயதிற்குள் மட்டும்) மேற்படி வயதுக்குள்ளிருக்கும் இளைஞர்கள் தமிழகத்திலும் 3 கோடிப் பேர். எனவே, இந்தியா நல்ல எதிர்-காலத்தில் பயணிக்கும் வாய்ப்பினை, மற்ற நாடுகளை விட அதிகம் கொண்ட நாடு. அதற்கு முதலீடாக உள்ள இளைஞர்களை ஆக்கப் பூர்வ-மாகப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமை.
ஒரு இளைஞன் எப்போது ஆக்கப்பூர்வமாக வளருவான்? என்ற கேள்வியினை, எழுப்பிப் பார்ப்பதன் மூலமாகவே விடை காண முடியும். அரசுக்கும், இளைஞனின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்-கிறது. அரசு செலுத்துகிற அக்கறை இளைஞனை சிறந்த வழியில் வளர்ப்பதற்கான துவக்கமாக இருக்கும். கல்வி கொடுப்பதையும், வேலை பெறும் உரிமையையும் அரசு தனது பொறுப்பாக, கடமையாக ஏற்று நிறைவேற்றினால், இளைஞனின் சமூகப் பார்வை -விரிவு பெறும். நாட்டின் மீதான பற்றுதலுடனும், வளர்ச்சிக்கு கரம் கோர்க்-கும் சக்தியாகவும், இளைஞன் இருப்பான்.
இந்தியத் துணைக்கண்டம், ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்-தில் அழுத்தப்பட்டு கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தி முதல் கம்யூனிஸ்-டுகள் வரை அடிமை இந்தியாவில் கல்வியும், வேலையும் எல்லோருக்கும் கிடைக்காது. விடுதலை பெற்ற நமது சொந்த ஆட்சி-யில்தான் இது சாத்தியம், என்று முழங்கினார்கள். இந்த முழக்கம் இளைஞர்களை ஈர்த்தது. விடுதலைக்கானப் போரில் தங்களை அர்ப்பணித்தார்கள். மாணவர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளி-யில் வந்தார்கள். தொழிலாளர்கள் ஆலைகளைப் புறக்கணித்தார்கள். விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் தங்கள் சுய தேவையை மறந்து, விடுதலைக்காக உழைத்தார்கள்.
62 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஏன் இன்னும் வறுமை, கல்வி-யின்மை, வேலையின்மை? நமது சொந்த ஆட்சியாளர்களுக்கு 62 ஆண்டு-கள் போதாதா? மகாத்மாவின் வாரிசுகள் தானே காங்கிரஸ் ஆட்சியாளர்கள். 62 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையில் தானே ஆட்சி இருந்தது. இது வெறும் ஆட்சி மாற்றத்-துடன் மட்டும் முடிந்து போவதில்லை, கொள்கை மாற்றமும் தேவைப்-படுகிறது. ஆட்சி மாற்றத்துடன், மக்களை நேசிக்கிற கொள்கை மாற்றமும் உருவானால் தான், இது போன்ற பிரச்சனைகள் முழுமை-யாக தீர்க்கப்படும்.
வேலை இப்போது எப்படி இருக்கிறது?
சென்னை மாநகரப் பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும் தினசரி சம்பளம் 170 ரூபாய், வீட்டில் இருந்து கொண்டே மாதம் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம், இப்படி பல்வேறு வாசகங்கள், சுவரொட்டி-யாக ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடியும். இந் விளம்பரங்களைக் காணுவோர், இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகை இருந்தும், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லையா, என்று தான் கேள்வி எழுப்-புவர். மேற்படி விளம்பரங்களில் சிலர் பலன் அனுபவித்து இருக்க-லாம். ஆனால் பலர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள், என்பதே உண்மை. இது போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து, விண்ணப்பம் செய்து, வேலையும் பெற்று அதன் பின் பேசிய சம்பளம் கொடுக்க-வில்லை என்று புகார் செய்யும் இளைஞர் கூட்டம் அதிகரித்து வரு-கிறது. வேலை ஒப்பந்தம் செய்கிற போது, படித்த சான்றிதழ்களையும் நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்கின்றன. இதனால் ஓரளவு நல்ல வேலை கிடைக்கிற போது, சான்றிதழ்கள் பறிக்கப்பட்ட காரணத்-தினால், அதையும் இழக்கிற கொடுமை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஏமாந்து போகிற இளைஞர்கள் டி.ஒய்.எப்.ஐ அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, தங்களைக் காப்பாற்றும்படி கோருகிற, அவலம் அதிகரித்து வருகிறது. எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவிகள், தன் விதியை நினைத்து ஏமாற்றத்தையே வாழ்க்கையாகக் கொண்-டுள்ளனர்.
வேலை என்பது பலவிதமான அனுபவமாக இருந்து வருகிறது. மனித-குலம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. வேலை நேரம் முடிந்த-வுடன், வார விடுமுறை வந்தவுடன் (விடுமுறை வசதி இருப்-பவர்களுக்கு) களைப்பிலிருந்து விடுதலை, சோர்வு, இயந்திரத்தின் கட்டுப்பாடு, வேலை செய்யும் இடம், அல்லது நிர்வாகத்தின் கெடுபிடி போன்றவற்றிலிருந்து விடுதலை என்று சிலர் நம்புகிறார்கள். சிலர் இன்றைக்கும் இவ்வளவு வேலை இருக்கிறதே, என்று வீட்டுச் சுமையை எண்ணி களைப்படைவதும் உண்டு. இத்தகைய மன-வருத்தத்தைப் போக்குகிற வகையில் சொல்லப்பட்ட வரிகள் தான், வேலை செய்வது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியது, என்பதாகும். இது போன்ற வரிகள். சொல்பவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தான் பொருந்தும். நல்ல வேலை செய்பவன் புகழ்ச்சிக்கு உரியவன் ஆகிறான், யார் உடல் உழைப்பில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக இருக்கிறார்களோ, அவர்களிடம் இருந்து தான், இது போன்ற வரிகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கப் பொருளாதார அறிஞர், ஜான் கென்னத் கால்ப்ரெய்த் கூறுகிறார்.
எனவே, மனங்குளிரப் பேசி வேலை வாங்குவது என்பதும், சிரிக்க, சிரிக்கப் பேசி வேலை வாங்குவது என்பதும். சுரண்டல் சமூகத்தில் உலகம் முழுவதும் இருக்கின்ற ஒன்று, என்பதை கால்ப்ரெய்த் நினை-வூட்டுகிறார்.
இந்திய ஆட்சியாளர்களும், தமிழக ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக் குடையின் கீழ் வேலையின்மை என்ற கொடுமை இருப்பதாக ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை. வாரம் ஒரு முறை பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதும், அது பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் என்பதும், பத்திரிகையில் தமிழ் நாட்டு முதல்வர் வெளியிடும் செய்தி. தகவல் தொழில் நுட்ப கொள்கை என்ற பெயரிலும், தமிழக தொழில் கொள்கை என்ற பெயரிலும், தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். என்று மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அறிவிப்புகள் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின்னரும், பயன்பெற்றவர்களை கண்டறிய இயலவில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் ஒப்பந்தங்கள் அவ்வளவு தான். கிராமத்தில் பேசிக் கொள்வதைப் போல் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிற கதை.
ஜான் பெர்க்கின்ஸ் என்பவர், பன்னாட்டு நிறுவனங்களுக்காக மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பந்தம் போடுவதையும், அது குறித்து பூதாகரமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு, மக்களையும், ஆட்சி-யாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியதையும், தான் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் என்ற புத்தகத்தில் குறிப்-பிட்டுள்ளார். தமிழக அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தமும், அவர்கள் சிரித்துக் கொண்டே போடுகிற கையெழுத்தை, பத்திரிகைகள் பிரமாண்டப் படுத்துவதும் அப்படிப்-பட்டதே. இத்தகைய பிரமாண்டங்கள் சில வேலைவாய்ப்புகளைத் தந்திருக்கும். ஆனால் அவை யானைப் பசிக்கு சோளப் பொரி அவ்வளவே.
இன்னொரு புறம் வேலையின்மை என்பதை வரையறை செய்கிற போது, முழுக்க முழுக்க எந்த வேலையும் செய்யாதவர்களே, வேலை-யற்றவர், என்று அரசு குறிப்பிடுகிறது. இந்த வரையறையின் படி நாட்-டில் பிச்சை எடுப்பவர், சாலையில் படம் வரைந்து வைத்து அதன் மீது விழும் பைசாவை எடுத்துக் கொள்பவர் ஆகியோரும் வேலை-யில் இருப்பவர்களாக கருதப்படுகின்றனர். சி.டி.குரியன் என்ற பொருளாதார அறிஞர், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு வேளை உண்டு, வாழ்க்கை நடத்துபவர்களையும் இந்திய அரசு வேலையில் இருக்கிறார் என்று கணக்கெடுப்பு செய்திருக்கிறது, என வருத்தத்தோடு குறிப்பிட்டார். தேசிய சாம்பிள் சர்வே என்ற அமைப்பு 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 4சதமானோர் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர், என அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழகத்திலோ வெறும் 2 சதமானோர் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனக் குறிப்பிடுகின்றனர். இத்தகைய தவறான தகவல்களில் இருந்து, கணக்கெடுப்புகளும், புள்ளி-விவரங்களும் பொய் அறிக்கைகளே தவிர வேறில்லை, என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அரைவயிறு உணவோடு, தெருவில் பிழைப்பு நடத்தும் மக்களை இரக்கமற்ற முறையில், இவர்களெல்லாம் வேலையில் இருக்கிறார்கள் என்ற அறிவிப்புகள் மூலம் ஆட்சியாளர்கள் அகம் குளிர வாய்ப்பு இருக்கிறதேயொழிய, நாட்டின் கௌரவம் மதிக்கத் தக்கதாக இருக்-காது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென் குறிப்பிடுவதைப் போல், வேலை என்பது, ஒரு சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
1. வருமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
2. உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
மேற்படி முப்பரிமானங்களைக் கொண்டது தான் வேலை, என்று குறிப்பிட்டால், இந்தியாவில் உள்ள 92 சதமான மக்கள் பாது-காப்பான வேலையில் இல்லை என்றே அர்த்தமாகும். இந்திய நாடாளு-மன்றத்தில் அர்ஜூன் சென் குப்தா கமிட்டி, 83.77 சதமான மக்களின் வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.20 என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. ஆக இப்போது இந்தியாவில் உள்ள வேலை சமூக பாதுகாப்பற்ற வேலை மட்டுமே. முறைசாராத் தொழில்கள்:
உலகிலேயே அதிகமான மக்கள் பிரிவினர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு இருப்பது ஆசியா கண்டம் என்றும் அதிலும் இந்தியாவில் தான் அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இடம் பெயர்வோர், சொந்தத் தொழில் செய்வோர், கைத்-தறி, விசைத்தறி ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடி, பெரும் தொழிற்-கூடங்கள் வந்ததாலும், விவசாய வளர்ச்சி இல்லாததாலும் நிலத்தை இழந்தோர் போன்ற அனைவரும், தங்களின் வாழ்க்கைத் தேவைக்காகச் செய்யக்கூடிய அன்றாட வேலைகளே முறைசாராத் தொழில் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நேரடி அரசு ஊழியர்கள், சுரங்கம், ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ் உள்-ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வோரை விட, முறைசாராத் தொழில்களில் இருப்போரின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகம்.
உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்குப் பின், அரசுத்துறை மற்றும் தனியாரிடம் இருக்கும் அடிப்படை உற்-பத்தித் துறைகளில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட காரணத்-தினால், ஆட்குறைப்பு செய்யப்பட்டது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்-படுவதில்லை. தேவைப்படும் நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில், வேலைக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இத்தகைய காண்ட்-ராக்ட் ஊழியர்களாகத் தான், பொறியியல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் வேலை பெற முடிகிறது. இது நிரந்தரமற்றதாக இருப்பதால், தொடர்ந்து வேலை தேடுவோராகவே இளைஞர்கள் உள்ளனர்.
பஞ்சாலைகள் நசிவைச் சந்தித்துப் பின்னர் மீண்டும் முன்னேற்றம் கண்ட போது, நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக, ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிகம் நியமிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக இளம் பெண்கள், கூடுதலாகப் பணியில் அமர்த்தப்பட்டனர். சுமங்-கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம், கேம்ப் கூலி உள்ளிட்ட பெயர்-களில் பல ஆயிரம் எண்ணிக்கையிலான பெண்கள் 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டனர். இத்தொழில் கூடங்களில் உணவு, தங்குமிடம் இல்லாமல் சம்பளம் பேசப்படுவதும், பின்னர் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் சம்பளத்தில் பிடித்துக் கொண்டு மீதியைக் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. உடல் நலம் இல்லை என்றாலும் கூட வேலை வாங்குவதும், பாலியல் சீண்டல்களும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவதும் கேம்ப் கூலி முறையில் நடைபெறுகிற கொடுமைகள் ஆகும்.
உலகமயமாக்கல் கொள்கையின் காரணமாக வளர்ச்சி பெற்ற தொழில்கள் கட்டுமானம் (51 லட்சம் பேருக்கு வேலை) ஹோட்டல் மற்றும் நிதித்துறை உள்ளிட்ட சேவைத் துறை ஆகும். இவற்றில் கட்டு-மானம், ஹோட்டல் போன்றவற்றில் படிக்காத, இடம்பெயர்ந்த மக்கள் வேலை பெற்று வந்தனர். படித்த இளைஞர்கள் நிதித்துறை சார்ந்த வங்கிகளிலும், மொபைல் ஃபோன் சேவைகளிலும், வேலை பெற்றனர். அதே போல் தகவல் தொழில்நுட்பத் திறன் காரணமாக மென்பொருள் நிபுணர்களாகவும், ஙிறிளி (ஙிவீஸீமீ ஜீக்ஷீஷீநீமீ ஷீஷீக்ஷீநீவீஸீரீ) மூலமான வேலைகளையும் பெற்று வந்தனர்.
மேற்படி வேலைகளுக்கும், அரசுத் துறையில் பணியாற்றுகிற வேலைகளுக்குமான வித்தியாசத்தை நம்மில் பலர் உணரவில்லை. பாதுகாப்பான வேலை என்பதில் அரசுத்துறை முதலிடத்தில் இருக்-கிறது. அதில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல், அப்-ப-டியே விட்டு வைப்பதும், தனியார் துறைகளில் நிரந்தரமற்ற வேலை வாய்ப்பைப் பெருக்குவதும், முறை சாராத் தொழில்களில் இளைஞர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ லிணீதீஷீக்ஷீ ளிக்ஷீரீணீஸீவீணீவீஷீஸீ) இயக்குனர், உலக வேலைவாய்ப்பு மங்கி வருகிறது. மேலும் மேலும் மங்குகிறது. தொடர்ந்து உயரும் வேலையின்மையும் தகுதி குறைவு வேலைகளும், இளைஞர்களை, பெரியவர்களை, திறன் குறைந்தோரை, ஊனமுற்றோரை, சிறுபான்மை இனக்குழுவினரை, சமூகத்தில் ஓரம் கட்டுகிறது என்று குறிப்பிட்டார். இது இன்றைய இந்தியாவில் நிகழும் சம்பவங்களுடன் இணைத்துப் பார்த்தால் சரியென்றே புலப்படும்.
அரசின் கொள்கைகளும் வேலை வாய்ப்பும்:
இந்தியாவின் முதலாளித்துவ பொருளாதார மேதைகள், உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாகத் துவங்கிய போது, உற்பத்தி பெருகும் வேலையின்மை தீரும் என்றெல்லாம் கூறினார்கள். இந்த மாயை சில சாகசங்களை நிகழ்த்திக் காட்டியது. படித்த பெரும் கூட்டம் இந்த மாயையை நம்பியது. இடதுசாரிகளின் எதிர்ப்பை ஏற்கவில்லை. இடதுசாரிகள், முதலாளித்துவத்தின் அடிப்படை விளைவு வேலையின்மை, என்று கூறினர். பொருளாதார விதியின் படி, உழைப்பு சந்தையில் வேலையற்றவர்கள் அதிகம் இருப்ப-தால் தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமை வலுவிழக்கும். உண்மை ஊதிய விகிதம் சரியும். வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க உரிமைகளை கடுமையாகப் பாதிக்கும். வேலையற்றோரை, முதலாளிகள், தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். எனவேதான் வேலையின்மை என்பது முதலாளித்துவத்திற்குத் தேவைப்படுகிறது. மேலே குறிப்பிட்டபடி முறைசாராத் தொழிலாளர்-களை உருவாக்குவதும் இப்படித்தான். டி.ஒய்.எப்.ஐ உலகமயமாக்கல் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி மற்றும் வேலையிழப்பு வளர்ச்சி என்று குறிப்பிட்டது. பலர் ஏற்க-வில்லை. ப.சிதம்பரம் போன்றோர் 8- சத வளர்ச்சி, 9 சத வளர்ச்சி, பங்கு சந்தை ஏற்றம், இறக்கம் என மக்களுக்குப் புரியாத மொழிகளில் பேசிக் கொண்டிருந்தனர்.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தி, வளர்ச்சி பெற்றால், உற்பத்திக்கேற்ப வேலைவாய்ப்பு கூடும். இந்தியாவில் இது நடைபெறவில்லை. பொருளாதார விதி ஏன் இந்தியாவில் அமலாக-வில்லை என்ற கேள்வியை எழுப்பிய போது, தொழிற்சங்கங்கள் தான் காரணம் என்றனர். ஆனால், இலாபத்தின் தேவைக்காக வேலை-யில் அமர்த்துவதும், எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பு-வதும் முதலாளிகளின் அல்லது நிறுவனங்களின் விருப்பமாக நீடிக்-கிறது. மிகச் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் 1900 பேரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டதும், கிங் ஃபிஷர் விமான நிறுவனம் சம்பளக் குறைப்பு செய்ததும், இன்போசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு அறிவிப்பு செய்து, பின் சம்பளக் குறைப்பு செய்ததும் உதாரணங்களாகும்.
2001இல் இருந்து மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு 2 சதம் பேரை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை, மத்திய அரசு பணிகளில் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசுத்துறையிலும், அதேபோல் ஆசிரியர் பணியிடங்-களும் காலியாக உள்ளன. ரயில்வேயில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்ததாகவும் சில ஆயிரம் மட்டுமே சமீபத்தில் பூர்த்தியானதாகவும் தகவல்கள் உள்ளன. வங்கித் துறையில் விருப்ப ஓய்வு அடிப்படையில் வெளியேறிய ஊழியர்களின் பணியிடங்கள் சுமார் ஒரு லட்சம் காலியாக உள்ளது. இதுபோல் பல பொதுத்துறை நிறுவனங்கள் குறித்தும் தகவல்கள் உள்ளன. (ஆதாரம் 2005 பிஸினஸ் ஸ்டாண்டர்டு) சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி பாரத் மிகு மின் நிறுவனத்திடம் (ஙிபிணிலி) சில கேள்விகளை எழுப்பி தொழிலாளிக்குச் சாதகமான தீர்ப்பினை வழங்கியது. ஐ.டி.ஐ முடித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும், பயிற்சி பெற்ற பிறகு திறன் பெற்றவராக மாறிய தொழிலாளியின் திறமையும், பயன்-படுத்தப்படாமல் இருப்பது சரியல்ல, என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஙிபிணிலி ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். பொதுத்துறையே இவ்வளவு பலவீனத்துடன் இருந்தால், தனியார் துறையை யார் நிர்பந்திப்பது?
உலக வேலை நிலைமைகள் 2005 என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில், வேலை இழந்தவர்கள் மற்றும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 20 கோடிக்கும் அதிகம் எனக் குறிப்பிட்-டுள்ளது. இதில் 15 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள் எண்-ணிக்கை 14.4 சதமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய விவரம். தற்போதைய விவரங்கள் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. அமெரிக்-காவில் 2008 ஆகஸ்டில் ஒன்னரை லட்சம் வங்கி மற்றும் நிதித்-துறை ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் காரண-மாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடைகள் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் திருப்பூரில் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய நிதிச்சேவைகள், பி.பி.ஓ.; கே.பி.ஓ. நிறுவனங்கள், ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதிகள், வாகனங்கள்துறை ஆகியவை பாதிக்கப்-பட்டுள்ளன. கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் 30 சதவீத பணி-நியமனம் நடைபெறுகிறது. மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் 50 சதம் பணிநியமனம் நடைபெறுகிறது. ஜவுளி, ஆயத்த ஆடை துறை-களில் 7 லட்சம் வேலைகள் இந்தியா முழுவதும் பறிபோன தகவலை 30 நவம்பர் 2008 நாணய விகடன் பதிவு செய்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த சேவைகள் உலகளாவிய சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பணிநியமனத்தை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட பலர் பணி நியமன உத்தரவுக்காக 8 மாதங்களாக காத்திருக்கின்றனர். 100 பேருக்கு வாய்ப்புக்கிடைத்த ஐ.டி துறையில், இனி 10 பேருக்கு வேண்டுமானால் வாய்ப்புக் கிடைக்கும் என்று டாக்டர் அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வு-பெற்றுள்ள ஒபாமா, தன் கொள்கையை அறிவித்த பின்னரே ஐ.டி. துறையின் இதர பாதிப்புகள் வெளியாகும் என்றும் சொல்லப்-படுகிறது. 80 சதவீத வங்கிப் பணிகள் இந்தியாவில் பொதுத்துறையாக இருப்பதால், இந்தத் துறை தப்பியது. ஆனால் சரிவு காரணமாக 21 சதமான பணிநியமனம் குறையும் என்றும், பணி நீக்கம் அதிகரிக்கும் என்றும், நவ 2008 இந்தியா டுடே கூறுகிறது. செப். 2008இல் மோட்-டார் தொழிலின் வளர்ச்சி _6 % வீழ்ச்சியடைந்தது என பேரா.சி.பி.-சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.
உலகமயமாக்கல் கொள்கையைத் தமிழக அரசும் தீவிரமாகப் பின் பற்றத் துவங்கிய காரணத்தால், தமிழக உள்ளாட்சித்துறை துவக்கு-வதாக அறிவித்த கிராம நூலகங்களுக்கு, ஓய்வு பெற்றவர்களை நியமன-மிக்க அரசாணை எண் 177 பிறப்பிக்கப்பட்டது. தமிழக உயர்கல்வித்-துறை, அரசுக் கல்லூரிகளில் உள்ள 3025 காலிப்பணியிடங்களை ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பலாம் என அரசாணை எண் 274 (04.07.08) வெளியிடப்பட்டது. மாநில அரசு அறிவித்த வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள 250 காலிப்-பணியிடங்களை நிரப்பக் கோரி, மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மீது டி.ஒய்.எப்-.ஐ சார்பில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும், என வழிகாட்டுதல் (ஞிமிஸிணிசிஜிமிளிழி) கொடுத்தது. 20.11.07 அன்று மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை டி.ஒய்.எப்.ஐக்கு, காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடிதம் எழுதியது. ஆனால் இதுவரை செயல்படவில்லை. இந்நிலை-யில் மாநில அரசு 2.5 லட்சம் காலிப்பணியிடங்களை அரசுத்துறையில் பூர்த்தி செய்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான எந்த பொதுத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. பகிரங்கமாக என்னென்ன வழிகளில் பூர்த்தி செய்தோம் என்கிற வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாரில்லை.
2005 பிப்ரவரில், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார். அதில் நிதி நெருக்கடியினை எதிர் கொள்கிற தேவைக்காக, மாநில அரசுத் துறையில் உள்ள காலிப்-பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டாம். அறிவிக்கப்படாத வேலை நியமன தடைச்சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இதை எதிர்த்து டி.ஒய்.எப்.ஐ கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா என பல வடிவங்களில் நாடு முழுவதும் போராடியுள்ளது. இன்று வரை விடிவு இல்லை. இத்தகைய செயல்பாடுகள் மூலம், அரசும், தனியார் துறையும் நிதி நெருக்கடியில் முழ்கியுள்ளது தெளி-வாகிறது. நெருக்கடியில் இருந்து மீள வேலை வாய்ப்புகளுக்கு வழி-விடாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை மத்திய, மாநில அரசுகள் சூறையாடியுள்ளது.
இப்போது நமது ஆட்சியாளர்களிடம் அமெரிக்காவின் பொருளா-தார நெருக்கடி, இந்தியாவைப் பாதிக்குமா? என கேள்வி கேட்டால் ஆமாம். லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பதிலளிக்கிறார்-கள். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நாயகி அடி அடியென்று அடித்து விட்டு வலிக்கிறதா என்று கேட்பார், ச்ச் என்று, வலிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டுவார். பின் வடிவேலுவை குனிய வைத்து முரட்டுத் தனமாக தாக்கி விட்டு, இப்ப என்று கேட்பார், அதற்கு வடிவேலு லைட்டா என்று பதிலளிப்பார். படம் பார்க்கும் அனைவரையும் இக்காட்சி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இதே போல் தான் நமது ஆட்சியாளர்கள், ஒன்றும் செய்யாது என்று பேசி வந்தவர்கள், இப்போது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என முனு முனுக்கத் துவங்கியுள்ளனர். பாவம் இவர்களும் எவ்வளவு காலம் தான் வலிக்கா-தது போலவே நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் மன்-மோகன் சிங் மற்றும் சிதம்பரம் வகையறாக்களுக்கு வலி ஏற்பட, 18 ஆண்டு கால பிரச்சாரமும், போராட்டமும் தேவைப்பட்டிருக்கிறது.
சமூகப் பாதுகாப்புடனான வேலையின் அவசியம்
அன்றாடக் கூலி வேலை செய்பவர் துவங்கிக் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர் வரை எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம், என்ற நிலை இருப்பது ஆபத்தானது. அமெரிக்காவில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவுடன், தன் மொத்த குடும்பத்தையும் சுட்டுக் கொலை செய்து விட்டு, தானும் சுட்டு இறந்து போகும் இளை -ஞர்கள் அதிகரித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் அடக் கம். இந்தியாவிலும் தற்கொலைகள் ஆங்காங்கே அதிகரித்துள்ளது.
உலகப் பொருளாதாரச் சரிவின் தொடர்ச்சியாக, இந்திய நிறு-வனங்கள் சுமார் 10 லட்சம் பேரை வேலை நீக்கம் செய்துள்ளதாக நவம்பர் 2008 இந்தியா டுடே பத்திரிகை தெரிவிக்கிறது. குளோபல் லாஜிக் என்கிற நிறுவனம் 95 பேரை திடீரென நீக்கியுள்ளது. இவர்-களில் ஒருவர், அசோக் ஜெய்ஸ்வால் ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இப்போது வேலை நீக்க உத்தரவினால், வீட்டுக் கடனை எப்படி அடைப்பது என திண்டாடிக் கொண்டு இருக்கிறார், என இந்தியா டுடே கவலைப் படுகிறது. மாதம் ஒன்னரை லட்சம் ரூபாய் வாங்குபவரே இவ்வளவு கவலைக்கு ஆளானால், அன்-றாடம் சம்பளம் வாங்குகிற, அல்லது இந்தியாடுடே குறிப்பிட்ட ஜவுளித் துறையில் நீக்கப்பட்ட ஊழியர்கள் 7 லட்சம் பேரின் வாழ்க்கை எதிர்காலம் என்னவாகும்?
எவ்வளவு நிதி நெருக்கடிகள் இருந்தாலும், முதலாளிகள் பாதிக்கப்-படுவதில்லை. ஏனென்றால், முதலாளி ஆட்குறைப்பு மூலமாகவோ, சம்பளக் குறைப்பு மூலமாகவோ தனது லாபத்தை தக்க வைத்துக் கொள்கிறார். நெருக்கடியை தொழிலாளிகளுக்கு பகிர்ந்து கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சமூகம், முதலாளியை அனுமதிக்-கிறது. ஆனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி நிலை? ஏற்கனவே இந்திய சமூகத்தில் வேலை நிறுத்தம் கூடாது, முதலாளி-களை எதிர்க்கக் கூடாது, தொழிற்சங்கம் கூடாது, என பேசியவர்கள் கூட தங்கள் குரலை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்-ளது. தொழிற் சங்க உரிமை, பேரம் பேசும் உரிமை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம், நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை தூக்கி எறிய முடியாது, என்பது நிரூபனமாகி உள்ளது.
காண்ட்ராக்ட் என்ற பெயரில் வளர்ச்சி பெற்றுள்ள தொழிலாளர் எண்ணிக்கையும், முறை சாராத் தொழிலாளிகளாக குவிந்துள்ள கோடிக் கணக்கான தொழிலாளிகளும், தகவல் தொழில் நுட்பம், உள்-ளிட்ட பல்வேறு சேவைத் துறைகளில் பணியாற்று வோரும், தொழிற் சங்கம் அமைத்துக் கொள்ள முன் வருவதே முதல் கட்ட சமூகப் பாதுகாப்பு ஆகும். இரண்டாவது ஜவுளித்துறை உள்ளிட்ட எல்லாத் தொழில்களிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு, தொழிலாளர் நலச் சட்ட உரிமைகள் அமலாக வேண்டும். பிரா-விடண்ட் ஃபண்டு, கிராஜூவிடி, வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம் ஆகிய அடிப்படைத் தேவைகள் எல்லாத் துறையிலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், எவ்வளவு அதிக-மான சம்பளம் கொடுக்கப்பட்டாலும், நுகர்வு கலாச்சாரம் ஒவ்வொரு இளைஞனையும் வழிப்பறி செய்யாத குறையாக பணத்தை சூரையாடிச் செல்வதில் இருந்து தப்பிக்க முடியாது. மூன்றாவது ஓய்வு நேரம் மிக முக்கியமானது. 1899ஆம் ஆண்டு தோர்ஸ்டீன் வெப்லன் என்ப-வர் ஓய்வை நன்கு அனுபவிப்பர்கள் குறித்து, சுகவாசி வர்க்கத்தின் கோட்பாடு எனும் நூலை எழுதினார். ஏழைகளுக்கு தான் வேலை அவசியம். பணக்காரர்களுக்கு வேலையில் இருந்து விடுதலை என்பது பாராட்டுக்குரியது என்றார். ஏழைகளுக்கு ஒய்வு நேரம் என்பது பணச்செலவு, என வரையறை செய்தது. எவ்வளவு கொடுமையானது. 110 ஆண்டுகள் ஆன பின்னும் இதே கருத்து நமது ஊரிலும் நிலவு-கிறது. நமது மக்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்-தாலும், ஓய்வு என்பது வசதியானவனுக்கே என்ற பொதுப்புத்திக்கு ஆட்பட்டுள்ளனர். ஆகவே தான் 12 மணி நேரமானாலும், கேள்வியே கேட்காமல் உழைக்கிறார்கள். ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் கல்லறையில் எழுதி வைக்கப்பட்ட வாசகம், நமது உழைப்பாளர்-களுக்கும் பொருந்தும்.
நண்பர்களே, எனக்காக வருந்தாதீர்கள்
எனக்காக எப்போதும் அழவும் வேண்டாம்
ஏனெனில் நான் இனி எப்போதும், எதுவும் செய்யப் போவதில்லை.
ஏனென்றால் நான் பிணம்.
மேற்படி வரிகளைப் போல், நாம் கேள்வி கேட்காமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். சாவு மட்டுமே நமக்கு ஒய்வு கொடுக்கும் நிலை இருக்கிறது. இதற்கு முடிவு காண வேண்டுமானால், சமூகப் பாதுகாப்புடனான வேலை வேண்டும்.
ஒரு மனிதன் பிறப்பில் துவங்கி இறப்பு வரை உயிர் வாழ காற்று, நீர், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய ஐந்தும் தேவை. இதில் காற்றைத் தவிர (இப்போதைக்கு) மற்ற அனைத்தும் விலை பேசப்-படுகிறது. ஒரு மனிதனால் 18 வயது முதல் 60 வரை உழைக்க முடி-யும். எஞ்சிய வாழ்நாளுக்கும் தேவையானவற்றை இந்த சமூகம் உறுதி செய்ய வேண்டும். அதை அந்த மனிதன் வாழ்கிற சமூகம் தருகிற கல்வியிலும், சமூகப் பாதுகாப்புடனான வேலையிலும் தான் உறுதி செய்ய முடியும். இந்தியாவில் 15 சதமான மக்களுக்கே இத்தகைய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. 85 சதமான பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை உறுதியானதல்ல. எனவே சமூகப் பாதுகாப்-புடனான வேலை என்ற கோரிக்கை, இந்தியாவின், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை பெரும்பான்மை மக்கள் கொதித்தெழுந்து போராடுவது தவிர்க்க இயலாது.
வேலையின்மைப் பிரச்சனை:
வேலையின்மை என்ற நிலை சமூகத்தினை பின்நோக்கி இழுத்துச் செல்வதாக அமையும். வறுமை, பட்டினிச்சாவு, தற்கொலை, வழிப்பறி, கொள்ளை போன்றவை பெருகும். ஆள்கடத்தல் கூலிப்படை அமைத்து செயல்படுதல் போன்றவை உரமிட்டு வளர்க்கப்படும். கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் போன்ற துயரங்கள் அதிகரிக்கும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், சமூகத்தில் புறக்கணிக்கப் படுவதாலும், அங்கீகாரம் அற்றவர்களாகவும் மாறுவ-தால் எளிதில் சீர்குலைவு சக்திகளினால் ஈர்க்கப்படுகிறார்கள். இனம், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தீவிர செயல்பாட்டுக்கு உள்ளா-வதும், சில நேரங்களில் தீவிரவாதிகளாகவும் மாறுகின்றனர்.
முதலாளித்துவம் உருவாக்குகிற வேலையின்மை என்ற கொள்கை நடவடிக்கை, மக்களின் நியாயமான தேவைகளுக்கான போராட்டத்தில் இருந்து, திசை திருப்புவதற்கு உதவி செய்கிறது. மற்றொரு புறம், வேலையில் இருப்போரின் உரிமைகளை பறிக்கவும் வேலையற்ற இளைஞர்கள் என்கிற படையை முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. ஆகவே வேலையின்மையை முதலாளித்துவம் திட்டமிட்டு வளர்க்-கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வறிக்கை, 21ஆம் நூற்-றாண்டில் வேலையின்மை பொருளாதாரப் பிரச்சனையாக இருப்பதை விட, பெரும் சமூகப் பிரச்சனையாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளது. அஸ்ஸாமில், பீகாரிகளுக்கு எதிரான வன்முறையும், மும்பையில் ராஜ்தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனா வின், மராத்-தியர்கள் தவிர்த்த வட இந்தியர்கள் மீதான தாக்குதலும், மேற்படி தாக்குதல்களுக்கு எதிராக, லாலு பிரசாத் யாதவ், அமர்சிங் ஆகி-யோரின் செயல்களும் உதாரணங்களாகும். அதாவது முதலாளித்துவ வேலையின்மையை தனது பொருளாதார லாபத்திற்காக உரு-வாக்கியதுடன் வேலையற்ற இளைஞர்கள் ஒன்று சேருவதை தடுக்கிற வகையில், இன மோதல்களையும் உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளவும் செய்கிறது. இறுதியில் மோதிக் கொள்பவர்களை சமரசம் செய்து வைக்கிற பெயரில், பஞ்சாயத்து உரிமையையும் முதலாளித்துவம் பெற்றுக் கொள்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
வேலையின்மை என்கிற பிரச்சனை தீர, முதலில் சமூக நலத் திட்டங்களை இன்றைய அரசு விரைவு படுத்த வேண்டும். அதன் மூலம் ஏற்படும் பணப்புழக்கம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்-கும். அதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்-பனை ஆகும். புதிய உற்பத்திக்கான தேவை உருவாகும். வேலை வாய்ப்-பும் கிடைக்கும். 2002ஆம் ஆண்டு கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டிக்கு முன்பு கையேந்தி நின்றதும், பின்னர் அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர், கல்லூரி மாணவர்-கள் ஆகியோர் கைத்தறி புடவை மற்றும் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்ததும் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
நாடு முழுவதும் விவசாய வேலை நாட்களின் எண்ணிக்கை குறைந்து, இடம் பெயர்தல் அதிகரித்த போது, இடதுசாரிகளின் வலி-யுறுத்தலால், மத்திய அரசு முன்மொழிந்த கிராமப்புற வேலை உத்திரவாதச் சட்டம் 2005 ஆகும். 2004 செப்டம்பரில் 150 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், 2005இல் சட்ட-மாகியது. 250 என உயர்ந்து, இப்போது எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்துவதாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் மூலம் கிராமப்புற குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 8 ஆயிரம் ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலைகள் செய்வதன் மூலம் கிராமத்தின் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்-படுகிறது. ஒரு குறிப்பிட்ட திட்டம் ஒரே நேரத்தில் மக்களின் வாங்-கும் சக்தியை அதிகப்படுத்துவதால், தேங்கி கிடக்கும் பொருள் விற்-பனை-யும், கிராம கட்டமைப்பு வலு பெற்றதால், வேறு பல விவசாயப் பணிகளில் புதிய வேலை வாய்ப்பும் பெருகியது, என்பதை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, கேரளா, மே.வங்கம், ஆந்-திரா ஆகிய மாநில அனுபவங்கள் நிரூபித்துள்ளன. தமிழகத்தில் இத் திட்டம் போதுமான செயலாக்க வடிவம் பெறவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி, இருப்பு இருப்பதாக, அரசு விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற சட்டங்களுக்கு, மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யுமானால், கூடுதல் நன்மையை உருவாக்க முடியும்.
சேதுகால்வாய்:
பேராசிரியர்கள் ஜெயதி கோஷ் மற்றும் சி.பி.சந்திரசேகர் ஆகி-யோர், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும், என்று குறிப்பிடுகின்றனர். 80-களில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள், சாலை வசதிகளின் வளர்ச்சி, நாட்டின் தொழில் மந்தத்தில் இருந்து விடுதலை பெற உதவி செய்-துள்ளது, என்பதை உதாரணமாக குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேறுவதன் மூலம் சில தொழில் வாய்ப்புகள் பெருகும்.
சின்னதும், பெரியதுமான துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும். கட்டமைப்பு வேலைகள் பெருகும். சில பாரம்பரிய தொழில்கள் பாதிப்பு அடைந்தாலும், கல்வியும், தொழில்திறனும் அதிகரிக்கும். கடலோரங்களில் உருவாகும், தொழிற்சாலைகள் வேலை-வாய்ப்பினை கொண்டு வரும். இவை இடம் பெயர்தலைக் குறைக்கும், என்பதுடன் முறைசார்ந்த மற்றும் முறைசாரா தொழில்கள் இரண்-டிலும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உதவி செய்யும். இதன் காரணமாக துறைமுகம் உருவாகும் மாவட்டங்களிலும், 13 தென் மாவட்டங்களிலும் பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக மதுரைக்கு தெற்கே தொழில் வளம் இல்லை என்பது, பெரும் பிரச்சனையாக உள்ள நிலைக்கு, மாற்றினை உரு-வாக்க முடியும். இம்மாவட்டங்களில் ஏற்படும் வளர்ச்சி, சமூகரீதியான பதட்டத்தை தனிக்க பேருதவி செய்யும். இதை நீதிபதி மோகன் தலை-மையிலான குழு 1997இல், தென்மாவட்ட சாதிக் கலவரத்தை ஆய்வு செய்த போது தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே சேது கால்வாய்த் திட்ட நிறைவேற்றம், வேலை வாய்ப்பிற்கான கதவுகளைத் திறந்து விடும் என்பதில் ஐயம் இல்லை.
வேலையின்மையைப் போக்கிட நிலச்சீர்த்திருத்தம் மிக முக்கியப் பங்காற்றும். நிலம் குவிந்து இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட நில உச்ச வரம்பு சட்டங்கள் சரிவர அமலாகாத காரணத்தால், நிலக்குவி-யல் தகர்க்கப்படவில்லை. தற்போது இருக்கிற உபரி நிலங்களையோ அல்லது ஒரு சதமானம் கூடுதல் நிலங்கள் எடுக்கப்பட்டு நில உச்ச-வரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டாலோ 1--0 கோடி கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்று இந்திய இடதுசாரிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலமே, முதலாளித்துவ கொள்கை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருக்க முடியும் என்பதை அமர்த்தியா சென் போன்ற பொருளாதார நிபுணர்கள் குறிப்-பிடுகின்றனர்.
இருக்கிற அரசு நிறுவனங்களையும், வேறு சில நிறுவனங்களையும் விலை பேசுகிற, நிதி மூலதனத்தின் வளர்ச்சி நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக புதிய தொழிற்சாலைகள் உற்பத்தித்துறையில் ஈடு-படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு தமிழகத்தில் மின்பற்றாக்-குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. புதிய உற்பத்திப் பிரிவுகள் துவக்கப்படாததே காரணம். அரியலூர் மாவட்டம் ஜெயங்-கொண்டத்தில் கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்தி, இன்னுமொரு நெய்வேலி அனல் மின் நிலையப் பணிகளை உருவாக்க முடியும். பல ஆயிரம் நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கிடலாம். நிதிக் கொள்கைகள், உற்பத்தித் துறையில் முதலீடுகளை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சூதாட்டப் பொருளாதாரத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் என்று சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் குறிப்பிடுகிறார். அரசு இத்தகைய தொழில் துறையை வளர்ப்பதற்கான முதலீடுகளை அதிகப்படுத்த முன்வர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
மத்திய அரசு தனது ஏற்றுமதி_இறக்குமதி (ணிஜ்வீனீ றிஷீறீவீநீஹ்) கொள்கை-களை மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரியத் தொழில்-களை, முடமாக்குகிற இறக்குமதி பொருள்களை நிறுத்த வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பெரும் நிறு-வனங்களின் வருகை போன்றவை காரணமாக, சிறுவணிகர்கள் பாதிக்-கப்படுவது நடைபெறுகிறது. இதை தடுக்கிற வகையில் கொள்கை மாற்றம் தேவை.
அரசுத்துறையில் உள்ள சுமார் 50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவதும், புதிய அரசுப் பணிகளை உருவாக்குவதும், மிக அவசிய-மான ஒன்றாகும். இதற்கு பணமில்லையே என்று சிலர் தொடர்ந்து வாதிடுகின்றனர். சமீபத்தில் குமுதம் வார இதழ், 3 லட்சம் கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்-யப்பட்டு இருப்பதாக சொல்கிறது. நமது நாட்டு முதலாளிகள் ரூ.1.3 லட்சம் கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்திய வங்கிகள் அமைப்பின் தலைவர் கூறுகையில், சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக நீடிக்கிறது. இத்தகைய கடனைப் பெற்றவர்கள் பெரு முதலாளிகள் என்கிற தகவலை தெரிவித்துள்ளார். எனவே வேலை காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்திடவோ, வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கோ பணம் பிரச்சனை அல்ல. கொள்கை தான் பிரச்சனை.
இப்படி நிறைய மாற்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்-கிறது, மாற்றம் தான் நடைபெறவில்லை. மாற்றம் ஏற்பட்ட எல்லா நாடு-களிலும் இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை சரியான முறையில் செய்துள்ளனர். இந்தியாவிலும், தமிழகத்திலும் அத்தகைய மாற்றங்கள் நிகழ இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.
சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்விமுறையே!
குழந்தைகள் சமூக வயப்படுதல் இரண்டு பிரதான நிறுவனங்கள் மூலம் நடைபெறுகிறது. ஒன்று குடும்பம், மற்றொன்று கல்வி நிறு-வனம். குடும்ப உறவுகளில் முழுமையாக வணிகக்குணம் ஆக்கிரமிக்க-வில்லை. ஆனால், அத்தகைய ஆபத்து இருக்கிறது. பள்ளி உறவுகள் முழுமையாக வணிக உறவாக மாறிவிட்டது. சமூக வயப்படுதல் என்பது, சமூகம் பின்பற்றுகிற ஒழுக்கம், பண்பாடு, வளர்ச்சி, பொரு-ளாதார கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
கடந்த 30 அல்லது 35 ஆண்டுகளாக தமிழ் சமூகத்தில் பின்பற்றப்-பட்டு வரும் கல்விக் கொள்கை, வணிக மயத்தை வளர்த்தி ருக்கிறது, பண்பாட்டின் செழுமையை பாதித்து இருக்கிறது, லஞ்சம் என்ற வார்த்தையை நன்கொடை என மொழிபெயர்ப்பு செய்து எதிர்ப்-புணர்வை மழுங்கச் செய்திருக்கிறது. இப்படி அடுக்கிக் கொண்டே இருக்கலாம். எல்.கே.ஜி அல்லது ஃப்ரி.கே.ஜி என்கிற முன்பள்ளிக் காலத்திலேயே குழந்தை, பணம் செலுத்திப் படிக்கும் மனநிலையில் வளர்க்கப்படுகிறது. இதை சமூக அநீதியாக, படித்த நடுத்தர வர்க்க குடும்பங்களும், கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களும் பார்ப்பதற்குப் பதிலாக, பெருமையாகக் கருதிட, பழக்கப்படுத்தப்பட்டது. எல்.கே.ஜி. முதல் உயர்கல்வி வரை பணம் கொடுத்துப் பழகிப்போன குழந்தை, லஞ்சம், ஊழல் போன்ற ஒழுக்கம் இல்லாத வார்த்தைகளை சாதாரண-மாக ஏற்றுக் கொள்ளத் துவங்கிவிட்டன.
இதன்காரணமாக தமிழ் சமூகத்தில் புதிய தலைமுறை உருவாகி-யுள்ளது. ஏழைக் குடும்பங்கள் துவங்கி பணக்காரக் குடும்பங்கள் வரை கல்வியை காசு கொடுத்து கற்க வேண்டும், என்ற புரிதலில் வளர்க்கப்பட்ட தலைமுறையாக இருக்கிறது. இது தமிழ் சமூகத்தை அழிக்கும் விஷத்தன்மை கொண்ட புரிதல் என்பதை, எதிர்க்கும் இயக்கங்-கள் பேசி வந்தாலும் அது சமூகக் கருத்தாக மாறவில்லை. ஏனென்-றால் தமிழகத்தில் அரசுப் பள்ளி களை விடவும் அதிக எண்ணிக்கையில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் மத் திய கல்வித் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் உள்ளன. இவைகளில் இருந்து வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கையும், வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்த எண்ணிக்கை உயர்வு சமூக கருத்தாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, என்ற உண்மை-யில் இருந்தே, நாம் மேலே சுட்டிக்காட்டிய புரிதல் ஆகும்.
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த ரவீந்திரநாத் தாகூர், பெரியார், நேரு ஆகியோர் சொன்னதாக அரசியல் இயக்கப் பிரமுகர்கள் மேடைகளில் பேசிவந்த-னர். சோவியத் பள்ளிக் குழந்தையிடம் இரண்டு ரூபாய்க்கு உணவுப் பொருள் பெற்று அதை மூன்று ரூபாய்க்கு விற்றால் என்ன கிடைக்-கும், என்று கேட்ட தாகவும், அதற்கு அந்தக் குழந்தை இரண்டு ஆண்டு சிறைவாசம் கிடைக்கும், என்று பதிலுரைத்ததாகவும் கூறுவர்.
இந்த பதிலுரை சோவியத் நாட்டில் இருந்த பாடத்திட்டத்தை வெளிப்-படுத்துகிறது. பண்பாட்டு மேன்மையை புரியவைக்கிறது. லாபம் என்கிற சிந்தனையை குழந்தைகளிடத்தில் இருந்து தனிமைப்படுத்திய பாடத் திட்டமாக, சோவியத் பாடத்திட்டமும், பள்ளி முறையும் இருந்-தது. இன்றைக்கும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படுகிற ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளிலும் இதர வளர்ந்த நாடு-களிலும், பாடத்திட்டத்தில் சோவியத் மாதிரியைப் பின்பற்றவில்லை என்றாலும், பள்ளிக் கல்வியை அரசின் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டது. குறிப்பாக அருகாண்மைப் பள்ளி அல்லது அரு-காண்மை பொதுப் பள்ளி என்ற ஒரே முறையை இன்றைக்கும் பின்-பற்றி வருகிறது. இந்தியாவைவிட நிலப்பரப்பிலும், மக்கள் தொகையி-லும், பெரும் வித்தியாசத்தைக் கொண்ட சீனாவில் இதுபோன்ற பள்ளிக் கல்வி முறை அமலில் உள்ளது. கியூபா என்கிற சின்னஞ்சிறு நாட்டிலும், வளர்ந்து வரும் நாடுகள் என்றழைக்கப்படுகிற பிரேசில், வெனிசுலா, இஸ்ரேல், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பொதுப் பள்ளி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியத் துணைக் கண்டத்-திலும், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் மத்திய அரசு பாடத்-திட்டம், மாநிலப் பள்ளி வாரியம் ஆகிய இரண்டு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் 4 அல்லது 5 வாரியங்கள் உள்ளன.
இவை நாம் விவாதித்த சமூகவயமாதல் என்ற பண்பாட்டு வளர்ச்-சியைத் தடுக்கிறது. ஏழைக்கு அரசுப் பள்ளி, வசதியானோ ருக்கு தனியார் பள்ளி என்ற வேறுபாட்டை வளர்க்கிறது. அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் சமூக நீதியை மெல்ல மெல்ல அழிக்கிறது. உதாரணத்திற்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று பிற்படுத்தப்பட்ட இளைஞர்களிலும், தலித் இளைஞர்களிலும் உள்ள சிலர் கூறு வதை கேட்க முடிகிறது. இந்த குறிப்பிட்ட சிலர், பணம் கொடுத்து படிப்பதை பழக்கமாக கொண்டவர்களாகத் தான் இருக்க முடியும். சாதிய ஒடுக்குமுறை, சமூக வளர்ச்சியிலும், பொரு-ளாதார வளர்ச்சியிலும் பெரும்பான்மை இந்திய மக்களை பின்னுக்குத் தள்ளியது என்ற சமூக வரலாறை அறியாத இளைஞர் கூட்டத்தின் வார்த்தைகள் இவை. எனவே, இத்தகைய பாகுபாடுகள் கல்வித் துறை-யில் தொடருவது தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மக்களுக்கான கல்வி வாய்ப்பை மேலும் பின்னுக்குத் தள்ளும் நிலை இருக்கிறது. ஏனென்றால், அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்தது என்று செயற்கையாக உருவாக்கப்படும் கருத்தாக்கம், தனியார் பள்ளிகளை வளர்க்கவும், அரசுப் பள்ளிகளைப் புதைக்கவும்தான் பயன்படும். நாளடைவில் தரம்-தாழ்ந்த அரசுப் பள்ளிகளில், பொருளாதார வசதியற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த குழந்தைகளே கல்வி கற்கும். இத்தகைய சமத்துவமற்ற வாய்ப்பும் அல்லது கல்விச் சூழலும் ஒரு சமூக ஒடுக்கு முறையே ஆகும்.
ஆகவே, தற்போதைய தமிழக அரசு அறிவித்தபடி சமச்சீர் கல்விக்-கான குழுவின் பரிந்துரை குறித்து திறந்த விவாதம் நடத்த வும், வரு-கிற கல்வியாண்டிலேயே அமலாக்கத்தைத் தருவதும் நல்ல தலை-முறையை, சமூக மேன்மைக்கான இளைஞர்களை வளர்க்க உதவும். செய்யுமா தமிழக அரசு? என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்-பதை விட, செய்ய வைப்பதன் மூலம் முன்மாதிரி தமிழகத்தை உரு-வாக்குவதே அனைவரின் கடமை.
தீண்டாமை இன்னும் தொடர்வது ஏன்?
இனரீதியான ஒதுக்கல் முறையோ, சாதி ரீதியான தாக்குதலோ இன்னும் அடங்கவில்லை. நமது ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் மேற்படி தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. மஹா-ராஷ்ட்ரா மாநிலம் கயர்லாஞ்சியில், பையாலால் போட்மாங்கேயின் மனைவி, மகள், மகன் ஆகியோர் தலித் நிலம் வைத்திருப்பதா? என கேள்விக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர். காவல்துறை இது-குறித்த புகாரை ஏற்றுக்கொள்ள நான்கு நாள் வெளி உலகம் அறி-வ-தற்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி என்ற நடிகை லண்டனில் நடைபெற்ற டி.வி. நிகழ்ச்சியில் கருப்பர் என்கிற வார்த்தை மூலம் அவமானப் படுத்தப்பட்டார் என்ற செய்தி கண் இமைக்கும் நேரத்தில் தீயைப் போல் பரவியது. நாம் இந்த செய்தியை பெரிதாக சொல்ல வில்லையானால் ஒதுக்கப்பட்டு விடு-வோமோ? என்ற அச்சத்தில் ஊடகங்கள் போட்டி போட்டு, ஷில்பா ஷெட்டி படங்களை வெளியிட்டன. இந்த அணுகுமுறை தேச அளவில் மட்டுமல்ல, நமது மாநிலத்தில் நிறைய இருக்கிறது. உத்தப்புரத்தில் 600 மீட்டர் நீள சுவர் 19 வருடங்களாக கட்டி வைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்து வைத்ததையோ அல்லது 1 கி.மீ தூரம் தேவையற்று நடக்க வேண்டி இருந்த கொடுமையையோ, தமி-ழக ஊடகப் புலிகள் வெளிக் கொணரவில்லை. ஆனால் இடித்ததை எதிர்த்து மலைக்குப் போன கூட்டத்தின் ஆவேசத்தை, தொலைக்-காட்சி ஊடகங்கள் வாரக்கணக்கில் ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. இதை ஒடுக்கு முறைக்கு ஆதரவான ஊடகம் என புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவில் ஒபாமா என்ற கருப்பு மனிதன் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடுகிறோம். ஆனால் கருப்பு தோல் அடையாளத்திற்குள் இருக்கிற வேதனை நிறைந்த சாதிய பாகுபாடுகள், வெளி உலகத்தை அக்கறை கொள்ளச் செய்யவில்லை. தமிழகத்திலும், இந்திய துணைக் கண்டத்திலும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் துவங்கி 200 ஆண்டுகளாகி-விட்டது. ஆனாலும், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட்ட உணர்வு ஏற்படுத்தப்படவில்லை. காரணம் இவை அனைத்-தும் சீர்திருத்த கருத்துக்களே, மாற்றத்திற்கான கருத்துக்கள் அல்ல. அதனால்தான், இன்றளவிலும் அறிவிக்கப்பட்ட நலத்-திட்டங்கள் கூட முழுமையாகப் போய்ச் சேரவில்லை.
தீண்டாமை ஒரு பாவச் செயல்
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் _ ----------என்ற வார்த்தைகளைப் படிக்கிற மாணவர்கள் கூட, தீண்டாமைக் கொடுமையை பின்பற்றுவதற்கான காரணம், மேற்படி வாசகங்கள், வேஷத்திற்காக பின்பற்றப்படுபவை. உத்தப்புரத்தில் இருக்கும் சுவரில் 16 அடி அகலம் 2008, மே --_ 6ஆம் தேதி இடிக்கப்பட்டு, பாதை அமைக்கப்பட்ட பின்னரும், ஒடுக்கப்-பட்ட மக்கள் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. என்ன காரணம்? அரசு தலையிட்டு ஏற்படுத்திய பாதையை பயன்படுத்த அரசு இயந்-திரம் என்ன செய்தது? அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்கிற அளவில் தான், சீர்திருத்த சிந்தனைகளின் செயல் இருக்கிறது. மாற்றத்திற்கான சிந்தனை அரசு இயந்திரத்தில் உருவாக்கப்பட்டு இருந்தால், உத்தப்புரத்தில், 1 அக்.2008 அன்று இரவு காவல் துறை புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்காது. இறந்தவரை ஊரில் உள்ள பெண்கள் மட்டும் எடுத்துச் சென்று சவ அடக்கம் செய்த மனிதாபிமானத்தின் மீதான கொலை அரங்கேறி இருக்காது. திண்ணியத்தில் மலத்தினை திண்ண வைத்த கொடியவர்களை நீதிமன்றம் விடுவித்து இருக்காது. ராம-நாதபுரம் மாவட்டம் அருவுத்தி கிராமத்தின் கல்தூணில் கட்டி-வைக்கப்பட்டு 4 இளைஞர்களை சித்திரவதை செய்திருக்க மாட்டார்-கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், இரு தரப்பினர் மீதும் வழக்கு போடுகிற நடைமுறை இருக்காது. சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகாய்ச்சி-யேந்தல் ஆகிய ஊர்களில், 10 ஆண்டுகள் நடைபெறாத பஞ்சாயத்து தேர்தலை அரசு நடத்தி முடித்து விட்டது. இடஒதுக்கீடு கிராம ஆட்சி நிர்வாகத்தில் வெற்றிகரமாக அமலாகி விட்டது, என்று எண்ணி பூரிப்படைவதற்குள், நெல்லை மாவட்டத்தில் நக்கல முத்தன் பட்டி, மருதன் கிணறு பஞ்சாயத்து தலைவர்கள் தலித் என்பதற்காக கொல்லப்பட்டு விட்டனர். எனவே சீர்திருத்தம் மட்டும் போதாது. சிந்தனையில், அணுகுமுறையில், செயலில் மாற்றம் வேண்டும். தமிழ-கம் அதற்கு முன்னோடியாக இருக்கிற வகையில், அரசே குறிப்பிட்ட 7000 கிராமங்களில் தீண்டாமை இருக்கிறது, என்ற எண்ணிக்கை-களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரவுகள் போதாது, கண்காணிப்பு குழுக்கள் அமைத்து உறுதியாக அமலாக்க வேண்டும். எல்லா வகையான தீண்டாமையையும் மாநிலத்தில் ஒழிக்க வேண்டும்
இந்திய சுதந்திரத்திற்கு ஆபத்து?
இன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தினை நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள மின்பற்றாக்குறைக்கு அணு சக்தி ஒப்பந்தமே தீர்வு என்று வாதிடுகின்றனர். இந்தியாவில் அணு சக்தி மூலமும் மின் உற்பத்தி செய்யப் படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்-கள் இல்லை. 1969இல் இருந்தே தாராப்பூர் துவங்கி 17 மையங்களில் அணு மின் உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இப்-போது உற்பத்தி ஆகும் 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தின் அணு-மின்சார அளவு 3.8 சதம் மட்டுமே, இப்போது அமெரிக்காவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் 2026இல் தான் நிறைவேறும் அப்போது அணு மின் உற்பத்தி தேவை 2.5 லட்சம் மெகாவாட் என்றும், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் மின்-சாரத்தையும் சேர்த்து அணு மின்சாரத்தின் அளவு 7 சதம் தான் இருக்கும் என்பதையும், இந்திய அணு சக்தி நிறுவனம் ஒப்புக்-கொள்கிறது. தேவை மலை அளவு இருக்கையில் துளி அளவு மின்-சாரத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாயை, அமெரிக்க அரசிற்கு கொடுப்-பது அவசியமா? இதில் 30 சதம் ரூபாயை செலவு செய்தால், நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் அனல் மின்சாரம், நீர் மூலம் உற்பத்தியாகும் புனல் மின்சாரம் போன்றவற்றில் முதலீடு செய்தால், மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்த முடியும். இதை இடதுசாரிகள் முன்வைக்கிற போது, இதன் நியாயத்தை காங்-கிரஸ் ஏற்கவில்லை.
இரண்டாவது இந்த ஒப்பந்தம் பணம் சார்ந்தது மட்டுமல்ல. இந்திய அரசின் சுயமான செயல்பாட்டுடன் இணைந்தது. ஒப்பந்தம் அமலாகும் போது இந்திய அரசு, அமெரிக்காவின் 123 சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். 123 சட்டம், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்பவர்கள், அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இந்த சட்டம் 1956இல் அமெரிக்கா நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இடையில் அமெரிக்க செனட்டர் ஹைடு என்பவர் மேற்படி சட்டத்தினை அமலாக்காத நாடுகளுக்கு அணு ஒப்பந்தத்தின் படி கொடுக்க வேண்டிய, அணு எரிபொருள்களைக் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தின் நிறைவேற்றம் குறித்த தணிக்கை அறிக்கை முன்வைக்கப்பட்டு, ஒப்புதல் பெற்ற பிறகே, அடுத்த கட்ட உதவியை தொடர வேண்டும், என்று ஹைடு சட்டம் குறிப்பிடுகிறது. இச்சட்டத்தின் படி இந்தியாவுக்கு அமெரிக்காவின் உதவி 2026 வரை தேவை. இந்த 18 ஆண்டுக் கால இடைவெளியில், அமெரிக்-காவின் கைப்பாவையாக நமது மக்களாட்சி இருக்க வேண்டும். இது இந்தியாவின் சுயாதிபத்தியத்திற்கு ஆபத்து தரக்கூடியது.
மூன்றாவது, வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அணுசக்தி முகமை என்ற அமைப்பு. இதில் 45 நாடுகள் உறுப்பினர்கள். ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி செய்ய வேண்டு-மானால், மேற்படி கழகம் ஒப்புதல் தருவதுடன், அணுவை, ஆயுத உற்-பத்திக்கு பயன்படுத்துகிறார்களா? என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்யும்.
அதன்படி, சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவின் அணு உலைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வர். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்-தம் நிறைவேற, சர்வதேச அணுசக்தி முகமையின் ஒப்புதல் தேவை என்பதால், இந்தியா, 14 அணு உலைகளை எப்போது வேண்டு-மானாலும் பார்வையிட்டுக் கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்து விட்டதாக பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது. இந்த வெளிநாட்டு சக்திகளின் தாராள வருகை மற்றும் ஆய்வு நமது இறையாண்மையைப் பாதிக்கும்.
மேற்படி முக்கியமான மூன்று பிரச்சனைகள் காரணமாகவே இந்திய இடதுசாரிகள், காங்கிரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸ் கையெழுத்து போடுகிறதே, என்பது-தான். ஏற்கனவே பா.ஜ.க ஆட்சி இருந்த போதே எடுக்கப்பட்ட முயற்சிதான். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம். எனவே மத- வெறி கொண்ட பா.ஜ.க இந்தியாவின் சுயாதிபத்தியத்தையும், இறை-யாண்மையையும், செல்வ வளத்தினையும் பாதுகாக்காது என்பது தெளிவு.
நிறைவாக:
இந்தப் போர் எங்களால் துவக்கப்படவும் இல்லை எங்களோடு முடியப் போவதும் இல்லை, என்று தூக்குக் கயிறுக்கு முன்பு நின்று கொண்டு, சாவின் விளிம்பிலும், விடுதலைப் போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய இளைஞர்கள், பகத்சிங், ராஜ்-குரு, சுகதேவ் ஆகியோரின் வார்த்தைகள், நமது தலைமுறைக்கும் பொருந்தும். போராடுவோம், போராட்டம் இல்லாமல் உலக வரலாறு எழுதப்படவில்லை. நாமும் போராடுவோம். விடுதலையைக் காக்க, வேலை, கல்வி, சுகாதாரம் பெற, தீண்டாமை அழிக்க.