சனி, 30 அக்டோபர், 2010

Viva Global Workers Struggle for Justice (Gurgaon - India).: The Viva Global Workers Struggle.

Viva Global Workers Struggle for Justice (Gurgaon - India).: The Viva Global Workers Struggle.: "CLICK HERE FOR LATEST PRESS RELEASE NEW STRATEGY WAS ANNOUNCED TODAY FOR THE STRUGGLE BY THE WORKERS OF VIVA GLOBAL, GURGAON. Viva Global (..."

வியாழன், 28 அக்டோபர், 2010

அரசுக்குத் திட்டம் இருக்கிறது, திறம் இல்லை

யானை அளவு திட்டத்தினை உருவாக்கும் அரசு, பூனை அளவு கூட அதை அமலாக்குவதில்லை.
இப்படி ஒரு விமர்சனத்துடன் தான், பட்டியலினத்தவருக்கான திட்டங்களில் ஒன்றான, சிறப்பு உட்கூறு திட்டங்கள் குறித்து விவாதிக்க முடியும் இந்தியாவில், 1980-81 காலங்களில், தலித் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்புக் கூறு நிதியை ஒதுக்கீடு செய்து, பட்ஜெட் அறிக்கையுடன் இணைத்து அமலாக்குவது என முடிவெடுத்தனர். இதை சிறப்புக்கூறு திட்டம் எனவும், பின்னர், துணைத்திட்டம் எனவும் குறிப்பிட்டனர். தலித் மற்றும் பழங்குடி மக்களின், மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட் தொகையில் நிதி உருவாக்கி, அந்த நிதியை சம்பந்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது நோக்கம் என்றும் கற்பித்தனர். தலித் அறிவாளிகள் துவங்கி பலரும் வரவேற்ற திட்டமாக இருந்தது. மத்திய அரசும், மாநில அரசும் இத்திட்டத்தை அமலாக்குவதற்கான முன்மொழிவுகளையும், ஆலோசனைகளயும் நிறையவும், பலமுறை விவாதித்தும், உருவாக்கி விட்டனர். ஆனாலும் அமலாகவில்லை.

தமிழ் நாட்டில் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. 2005-06 பட்ஜெட் ல், 2104.55 கோடி ரூபாயும், 2006-07 பட்ஜெட்- ல், 3117.86 கோடி ரூபாயும், 2007-08 பட்ஜெட்-ல் 3356.88 கோடி ரூபாயும், 2008-09 பட்ஜெட்- ல், 4178.31 கோடி ரூபாயும், 2009-10 பட்ஜெட்-ல், 4602.68 கோடி ரூபாயும் திட்ட இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. 2010-11 பட்ஜெட்-லும் 3828 கோடி ரூபாய் என முதல் முறையாககூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகால அனுபவத்தில் நாம் விவாதிக்கும் சிறப்பு கூறு அல்லது துணைத்திட்ட நிதி குறித்து அறிவு ஜீவிகள் தவிர சாதாரண பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மற்றொரு புறம் கடன் அல்லது தாட்கோ நிதி என்றும் தான் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி பல பத்தாண்டுகளாக இட ஒதுக்கீடு உரிமையைப் பலரும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்களோ, அல்லது பயன் படுத்துவது புரிந்து கொள்ளப் படவில்லையோ, அது போலவே, பட்டியல் இனத்தவர்களுக்கான சிறப்பு துணைத்திட்ட நிதி ஒதுக்கீடும் சம்மந்தப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. இது அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக அமைந்துவிட்டது. எனவே தான் அரசு இந்த நிதியை வேறு பல திட்டங்களுக்கு திருப்பி விட துணிகின்றனர். மிக சமீபத்தில், மத்திய அரசு காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் செலவினத்திற்காக பட்டியலினத்தவருக்கான நிதியை திருப்பி விட்டது. மாநில அரசு, தான் ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப் பயன்படுத்தி உள்ளனர். சமத்துவபுர வீடுகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர். கேள்விகள் எழுந்த போது, பட்டையலினத்தவருக்கு தானே, தொலைக்காட்சி பெட்டி, வீடு கொடுத்தோம் என்கின்றனர். அப்படியானால் சிறப்பு ஒதுக்கீடு என்பதற்கு என்ன அர்த்தம். இதர சாதிப் பிரிவினருக்கு தனி நிதி ஒதுக்காமல், மேற்படி பொருள்களை வழங்கும் அரசு, தலித்துகள் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவது, இதுவரை புரிந்து கொள்ளப் பட வில்லை
.
பட்டியலினத்தவர் துணைத் திட்டம் உருவாக்கப் பட்ட நோக்கமான, தொழில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற நோக்கங்களில், ஆட்சியாளர்கள் முரண்பாடுகிற இடத்தை, நாம் உணரமுடியும். பட்டியல் இனத்தவர், பொருளாதார ரீதியில் முன்னேறி விடக் கூடாது என்பதற்காகவே, துணைத்திட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு செலவிட துணிவு காட்டுகிறார்களா? என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக வேலை மற்றும் தொழில் குறித்த வாய்ப்புகளை பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினத்தவருக்கும், ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதன் மூலமே, திட்டத்தின் நோக்கமான சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஒடுக்கப் பட்ட மக்கள் அடைய முடியும். வேலை அல்லது தொழில் ஆகியவை, சுயமரியாதையை உயர்த்த்க் கூடியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இந்த துறையில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட வில்லை. உதாரணத்திற்கு தமிழ் நாட்டில், 2618.56 கோடி ரூபாய் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டது. இதில், வேலை அல்லது தொழில் தேவைக்காக, 9 வகையான திட்டங்கள் அல்லது செயல் பாடுகள் மூலமாக, 144.92 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப் பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில், 5.53 சதமானம் ஆகும். இதன் மூலம் பலனடந்தவர்கள் 95742 நபர்கள். மொத்த பட்டியலினத்தவர் மக்கள் தொகையான சுமார் 1.25 கோடியில், அரசுத் திட்டத்தால் பலனைந்தவர்களை ஒப்பிட்டால் அது வெறும் 0.79 சதமானம் மட்டுமே. சமூக அந்தஸ்து படிநிலையில், முக்கியப் பங்கு வகிக்கிற, பொருளாதார முன்னேற்றத்திற்கு, வழி செய்யும் வேலை மற்றும் தொழில் வாய்ப்பை, அரசு புறக்கணிக்கிறது என்பதே, இதன் மூலம் நாம் அறிவது ஆகும்.

பலனடைந்த குறைந்த பகுதி மக்களிலும் கூட, 63295 நபர்கள் சுய உதவி குழுக்களைச் சார்ந்த தலித் பெண்கள். மூன்று வகையான திட்டங்கள் மூலம் சுய உதவிகுழுக்களைச் சார்ந்த பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர் அல்லது நிதி உதவி போன்ற கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் சிறு பலன் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ எந்த வகையில் உயர்த்துவதற்கு, மேற்படித் திட்டங்கள் உதவிடும்? மற்றொரு புறம் குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி (சிவில் சர்வீஸஸ்) கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 88 நபர்கள் மட்டுமே பயிற்சியளிக்கப் பட்டனர், என்ற செய்தி, பேரதிர்ச்சியாக இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் தகுதியை உருவாக்குவதற்கு ஏன் அரசு வடிகட்டி தேர்ந்தெடுக்கிறது? பல லட்சம் நபர்கள் எழுதும் தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு சில ஆயிரம் பட்டியலினத்தவரை தயார் செய்வது குறித்து ஏன் ஆலோசிக்க வில்லை?. ஒரு வேளை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை யென்றாலும், வேறு தேர்வுகளுக்கு பலனளிக்கும் என்பதை ஏன் மதிப்பிடவில்லை?.

இதை விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஆண்டுக்கு பல லட்சம் பணியிடங்களை அழித்தொழிக்கும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை, சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான தேர்வை இடைவெளி இல்லாமல் நடத்துவது ஏன்?. என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பொதுத்துறை மற்றும் மத்திய அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பணியிடங்கள் அழிந்துள்ளதாக கூறுகின்றனர். மத்திய அரசு இட ஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சம் தலித் இளைஞர்களுக்கும், மாநில அரசு இடஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சத்து 60 ஆயிரம் தலித் இளைஞர்களுக்குமான வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய பணியிடங்களைப் பாதுக்காக்கிற வகையில் துணைத்திட்ட நிதியைப் பயன்படுத்தி இருந்தால் கூட துணைத்திட்ட நிதி பலனுள்ள வகையில் செலவிடப்பட்டிருக்கும்.

தொழில் துறையில் படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது தவிர்க்க இயலாதது. காலம் காலமாக தன் முன்னோர்கள் செய்த வேலைகளை செய்ய வேண்டும், என எதிர் பார்ப்பது அநாகரீக சமூகத்தின் அனுகுமுறை என்றே கொள்ளப்படும்.. துணைத் திட்டம் 16 வகையான பயிற்சிகளை முன்மொழிந்திருக்கிறது. அந்த பயிற்சிகளுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்கும் பொறுப்பையும் ஏற்கும் போதுதான் இளைஞர்களுக்கு, நம்பிக்கை ஏற்படுத்த முடியும். சில விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. ஏன் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் இருந்து, படித்த இளைஞர்கள் சிலருக்கு, அறுவடை இயந்திரங்களை கடனாக கொடுக்க நடவடிக்கை எடுக்க கூடாது?. ஆனால் அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் 832 நபர்களுக்கு மட்டுமே சுய வேலைவாய்ப்பு அடிப்படையில் கடன் கொடுத்துள்ளது. 10.09 கோடி மட்டுமே இதற்காக செலவிடப் பட்டுள்ளது. இன்றைய தொழில் கொள்கை காரணமாக, சில்லரை வர்த்தகத்தில் கூட பெறும் பணக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே துணைத்திட்ட நிதியினை, மாநில அரசு தனித்தனியாக கொடுத்து சிதைக்காமல், பலரை இணைத்து, கூட்டுறவு முறையில் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப் பட்டால் அரசே, கொள்முதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
காலத்திற்கு ஏற்ற இத்தகைய அனுகுமுறையை துணைத்திட்ட நிதியைக் கையாளுவதில் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், திரைபட நகைசுவை போல் வரும் ஆனால் வராது. இது மிக சீரிய விவாதத்திற்குறிய ஒன்று, கடந்த 30 ஆண்டுகளில் அரசு இந்த துணைத் திட்ட நிதியை எப்படி பயன்படுத்தியுள்ளது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம். ஏமாற்றப் பட்டு வரும் பட்டியலினத்தவரை, தொடர்ந்து திட்டத்தின் பெயர்கள் கொண்டு, ஏமாற்றாமல், செயலுக்கு கொண்டு வர அரசு அசைவது அவசியம்.

நன்றி தீக்கதிர் 27 அக்டோபர், 2010

திங்கள், 25 அக்டோபர், 2010

அனைவருக்கும் வேலை எப்போதும் சாத்தியமே!

அனைவருக்கும் வேலை எப்போதும் சாத்தியமே!
எஸ்.கண்ணன்
அனைவருக்கும் வேலை என்ற கோரிக்கை இன்றைக்கும் பொருந்துமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கேள்வியில் நியாயம் உண்டா? என சிலர் தான் யோசிக்கின்றனர். ஆம் அரசு எத்தனை பேருக்குத் தான் வேலை தரும் என ஆட்சியாளர்கள் மீது தனது பரிதாபத்தை வெளியிடுவது, நடுத்தரத்து மக்கள் மட்டும் பரிமாரிக்கொள்ளும் கருத்தல்ல, உழைக்கும் மக்களும் இந்த அப்பாவித்தனத்திற்கு தள்ளப் பட்டு வருகின்றனர்.
உண்மை என்ன சொல்கிறது என்பதை அரசு வெளியிட்டு இருக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் நடைபெற்றுள்ள குற்றங்களின் எண்ணிக்கையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். கொலைகள் 1644ஆகும். கொள்ளைகள் 21174 ஆகும். திருட்டு, பிட்பாக்கட் உள்ளிட்டவை தனி. இதில் கூடுதல் தகவல் இளைஞர்கள் தான் இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதாகும். மேற்படி தகவல்கள் மூலம் தமிழ் சமுகம் போதுமான வேலை வாய்ப்பை பெற்றிருக்கவில்லை என்பதையும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதையும் தெரிவிக்கிறது. நல்ல வேலை, சமூகப் பாதுகாப்புடனான வேலை, ஆகிய உத்திரவாதம் இன்றைய சமுகத்தில் இல்லை. இது இளம் தலைமுறைக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
இவை போதாது என்று தமிழ் நாட்டில் அரசாணை எண் 170 பிறபிக்கப்பட்டு டி.ஒய். எஃப்.ஐ போராட்டத்திற்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிவிக்கப்படாத வேலை நியமனத் தடைச் சட்டத்தினை அமலாக்கி வருகிறது. இதுவும் படித்த இளைஞர்களிடம் அதிருப்தி ஏற்பட காரணம் ஆகும். தேர்தல் வந்து விட்டால் வாய் கூசாமல் வாக்குறுதி தருகின்றனர். நாஙகள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றிற்கு 1 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். வந்தபின் இருக்கும் வேலையைப் பறிக்கின்றனர். இவைகள் இளைஞர்களிடம் நம்பிக்கையின்மை வளர மிக்கிய காரணம் என்பதை அரசு உணரவில்லை.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தீவிரவாதம், வலது இடது என இரண்டு திசையில் இருந்தும் தாக்குதல் தொடுக்கும் சூழ்நிலை உள்ள நாடு இந்தியா என்றால் மிகை அல்ல. வேலையிண்மையை தீர்க்க முடியாததன் விளைவே இத்தகைய தீவிரவாதம் உருவாகிறது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்பு வளர்ச்சியற்ற பகுதிகளிலும், அடர்ந்த காடுகளிலும் தான் அதிகம் இருக்கிறது, என்று அரசும் ஒப்புக்கொள்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்க தயாராகவில்லை.
தமிழகத்தில் சாதிக்கலவரங்கள் நடந்தபோதும், மதகலவரங்கள் நடந்த போதும் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்கள் வேலையிண்மையும், கள்ளச்சாராயமும் கலவரங்களுக்கு அடிப்படை காரணம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறது. இத்தகைய ஆய்வுகளுக்குப் பின்னர் தான் மாநில அரசுகள் வேலை நியமன தடைச்சட்டத்தையும், ஓய்வு பெற்றோருக்கு வேலை என்ற அறிவிப்பையும் வெளியிடுகின்றன. இப்போது தமிழகத்தில் சுமார் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாகவும், நாடு தழுவிய அளவில் சுமார் 5.5 கோடி இளைஞர்கள் காத்திருப்பதாகவும் அரசு அறிவிப்புகள் சொல்கின்றன. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழியைப் போல் தான் அரசுகளின் நடவடிக்கை இந்த 63 ஆண்டுகளில் இருந்துள்ளது.

II

நமது இளைஞர்கள் இப்போது அரசு வேலையை எதிர்பார்ப்பது இல்லை மாறாக தனியார் துறை வேலைவாய்ப்பில் மிகுந்த திருப்தி கொள்கின்றனர், என்ற கருத்தை வலுவாக பரப்பிட செய்கின்றனர். வழியின்றி மேற்கோள்ளும் வாழ்க்கை தேவைக்கான் முயற்சியை அரசு பின்பற்றும் கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, கீழ்த்தர அரசியலின் விளைவு ஆகும்.
உண்மை நாம் அறிந்தது. தற்போது தமிழகத்தில் கிராம அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெள்யிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் சுமார் 2 ஆயிரம் மட்டுமே. இந்த அறிவிப்பினால் உருவான வேலைவாய்ப்பு விண்ணப்பம் அச்சிடுவது மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உருவானது ஆகும். இந்த பெருமைக்குரிய வேலை வாய்ப்பை உருவாக்கியதற்கு அரசும் அதன் சார்பாளர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் போது 1125 பணியிடங்களுக்கு 4.25 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதினர். இத் தேர்விற்காக சிறப்பு பேருந்து இயக்கியதை பெருமை பொங்க ஆள்வோர் குறிப்பிடுகின்றனர். இது போன்ற சம்பவங்களில் அரசு அம்பலம் ஆகிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத மூடர்களின் ஆட்சியாகவே நமது தேசத்தின் ஆட்சி உள்ளது.
மத்திய ஆட்சியாளர்களின் லட்சணத்தின் பகுதியே மாநில ஆட்சியாளர்களின் கொள்கைக்குக் காரணம். முந்தைய பா.ஜ.க கூட்டணி அட்சி செய்த போது வங்கிகான தேர்வாணையத்தைக் களைத்தது. சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம், என்றும் வழிகாட்டியது. விளைவு பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் நிர்ப்பப் படவில்லை. அதற்கான தேவை திடீரென முன் வந்த போது, எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 36 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்தனர். மூன்று கேள்வித் தாள்களுடன் மூன்று வாரங்கள் தேர்வு நடத்தப்பட்டது. இத்தகைய விவரங்கள் அணைத்தும் அரசு வேலை மட்டுமே பாதுகாப்பானது என்பதையும், தனியார் துறை வேலை வாய்ப்பை விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் அரசிடம் இளைஞர்கள் அரசிடம் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
இதன் மறுபுறம் அமைச்சர்களே தங்கள் துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். ரயில்வே துறையின் பட்ஜெட்டை முன்வைத்து உரையாற்றிய மம்தா பானர்ஜி ரயில்வேயில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டார். இப்போது ரயில்வேத் துறையில் அதீதமான விபத்துகள் நடைபெறுகிறது. 15 ஆயிரம் லெவெல் கிராசிங்குகளில் பணியாளர்கள் இல்லாத்தன் விளைவாகவே விபத்து நடந்தது என்பதை அறிந்திருந்தும், பணிநியமனத்தில் பலகீனம் நீடிக்கிறது. இதைப்போலவே அனைத்துத் துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நீடித்து வருகிறது. மாநில அரசுகளிலும் உள்ள நிரப்பப் படாத பணியிடங்களையும் கணக்கில் கொண்டால், சுமார் 38 லட்சம் வேலை வாய்ப்புகள் கண் முன்னால் காலியாக இருப்பதை அறியலாம்.
இதனோடு ஒப்பிட்டு விவாதிக்க வேண்டிய மற்றொரு கருத்து, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்காத அனுகுமுறையாகும். உதாரணத்திற்கு, 30 ஆண்டுகளுக்கு முந்தைய தாலுகா நிர்வாகமே இன்றைக்கும் இருக்கிறது. காவல் துறை, நீதித்துறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திலும் இதன் பிரதிபலிப்பை பார்க்க முடியும். மேற்படி துறை சார்ந்த பணியிடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடப்பது நமது விவாததிற்கு சாட்சி. இந்த உண்மைக்கு மாறாக அரசு தற்போது உள்ள பணியிடங்களையும் அழிக்க நடவடிக்கை எடுக்கிறது.
தொழில் நுட்பத்தை மனிதன் மிக கொடுமையாக வேலை வாங்கப்படுவதைத் தடுக்க பயன் படுத்தாமல், மனிதனின் பிழைப்பை அழிக்கும் வ்கையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சுரங்கம், ஒரு மின் உற்ப்பத்தி நிலையம், சுமார் 600 மெகாவாட் மின்சாரம் என்று இருந்த போது 24 ஆயிரம் தொழிலாளர்கள் பனியாற்றினர். தற்போது 3 சுரங்கம், 3 மின் உற்ப்பத்தி நிலையம், 2000 மெகாவாட் மின்சாரம் என்ற நிலையை அடந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ 17 ஆயிரமாக குறைந்துள்ளது. இப்படி அரசும், தனியார் துறைகளும் தனது லாபத்தை பெருக்க தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பதனால் வேலை வாய்ப்பு புதியதாக உருவாகவில்லை.
III
அனைவருக்கும் வேலை என்ற கொரிக்கையை முன் வைப்பவர்கள் மாற்று ஆலோசனையை முன்வைக்கப்பட வேண்டிய நிர்பந்ததில் இருப்பதை நாம் அறிவோம். நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து பலகீனங்களையும் அரசு போக்கிக்கொண்டால், புதிய வேலை வாய்ப்புகள் பல கோடி உருவாகும். பல கோடிப்பேரிடம் வருமாணம் அதிகரித்து வாங்கும் சக்தியும் அதிகரித்தால், ஜவுளி உற்பத்தி, உணவு உற்பத்தி, இதர அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தி பெருகும். இதன் காரணமாக கிராமப்புற உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகும். இதன் மூலம் கிராம உழைப்பாளிகள் நகரத்தை நோக்கி இடம் பெயர்வதும் குறையும். அது நகர்புற படிக்காத, திறனற்ற தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், பேரம் பேசும் உரிமையும் அதிகரிக்கும். இந்த வளர்ச்சி தொடர்ந்து மக்களின் வாங்கும் சக்தியையும், வருமானத்தையும் பாதுகாக்க உதவும். இவை நாம் மட்டும் கூறிக்கொண்டிருக்கும் வாக்கியங்கள் அல்ல. முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும் வலியுறுதுகிற உண்மை.
இன்றைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசு தேசிய கிராமப் புற வேலை உறுதிச் சட்டத்தை அமலாக்கிவருகிறது. கிராமப் புற மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதன் மூலமே கிராமப்புற உழைப்பாளிகளின் உயிரைப் பாதுகாக்க முடியும், என்ற அறிஞர் பெருமக்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டதனால் உருவானது என்பதை மறுக்க முடியாது. இந்த் கொள்கையை அமலாக்க சோசலிசம் தேவையில்லை, இந்த முதலாளித்துவ ஆட்சியே போதும். முதலாளித்துவம் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல் படுவதால், இந்த குறைந்த் பட்ச நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை. எனவே தான் சமூகம் மாற்றப்பட வேண்டும் என்ற முழக்கம் முன் வந்தது. நிலச்சீர்திருத்ததை அமலாக்குகிற, தொழிலாளர் நலனை பாதுகாக்கிற அரசு அமையும் போது, நாம் மேற்குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கையை விட சிறந்த பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படும். அப்போது அனைவருக்கும் வேலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.

நன்றி: எஸ்.எஃப்.ஐ மாநில மாநாட்டு மலர்

வியாழன், 21 அக்டோபர், 2010

விதையென வீழ்ந்தவர்கள்


ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்

ஆயினும் அதன் பிரகாசம்,

ஒருமலர் வாடி விடலாம்

ஆயினும் அதன்மணம்

எமது புரட்சி வீரர்கள்

இம்மண்ணிலே சிந்திய

செங்குறுதி காய்ந்திருக்கலாம்

ஆயினும் அதன் நினைவு....

எமது கொடிகளிலே

எமது நினைவுகளிலே

அழுத்தம் நிறைந்த

செவ்வண்ணமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.

சீன கவிதை

ஜாலியன் வாலாபாக் மைதானம் அமைந்துள்ள, அமிர்தசரஸ் நகரம், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 7வது மாநாடு நடைபெற்ற நேரம், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அஞ்சலியை செலுத்தி ஊர்வலமாக, மாநாட்டு அரங்கத்தை அடைந்தவுடன், அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மூன்று ஆண்டுகளில், 289 வாலிபர் சங்கத் தோழர்கள், உயிரைச் சங்கத்திற்காக அர்ப்பணித்து இருந்தனர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும், 260 தோழர்களை இழந்திருக்கிறோம் என்ற செய்தி, சற்று அதிச்சியாக இருந்தாலும், மாற்று அரசியல், ஆதிக்க அரசியலின் வன்மங்களை, எதிர்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதை புரிய வைத்தது.

1980ல் துவங்கப் பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காக கொடுத்த விலையை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத்திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்ற போது, இந்திய ராணுவதிற்கு இனையாக களப்பலி கொடுத்த இயக்கம், டி.ஒய்.எஃப்.ஐ, அரசியல் ராணுவமாக, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ்சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாணவிகளின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980 களில், இந்திய அரசியலில் திவீரம் செலுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றைய டி.ஒய்.எஃப்.ஐ இளைஞனை, ஹீரோவிற்குறிய மிடுக்கோடு, நடைபோடச் செய்தது.

பஞ்சாப்பில், காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், டி.ஒய்.எஃப்.ஐ இளைஞர்களை தற்காத்து கொள்ள வேண்டிய அளவிற்கு தாக்குதல் உச்சத்திற்கு சென்றது. எனவே சில ஆயுதங்களை வாங்கிட முடிவெடுத்து, அகில இந்திய தலைமை அறைகூவல் விட்டதும், பள்ளி மாணவனாக வசூலில் ஈடுபட்டதும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள். தியாகத்தில் புடம்போட்ட இயக்கம் என்பது மிகை அல்ல. இன்றைக்கும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள தங்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். உயிரை அச்சுறுத்தி, இயக்கத்தை அழிக்கும் பகல் கணவில் எதிரிகள் நிச்சயம் வெற்றி பெறமுடியாது. உயிர்பயம் என்ற அழித்தொழிப்பு கொள்கை வெற்றி பெற்று இருந்தால், இந்தியா ஒரு நாடாக உருவெடுத்திருக்கவோ, விடுதலை பெற்றிருக்கவோ வாய்ப்பில்லை. மாறாக வன்முறை மட்டுமே அதிகாரம் செலுத்தியிருக்கும்.

தமிழகத்திலும், 30 ஆண்டு வரலாற்றில் 19 வீரர்களை இழந்திருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் அற்பமாக தெரியும் சில காரணங்கள், கொலைக்கு அடித்தளம் அமைத்திருப்பது, தமிழ் நாட்டின் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களை, அடையாளம் காட்டுகிறது. உரிமைகள் அனைத்தும் உயிர்ப் பலி என்ற விலை கொடுத்து பெறப்பட்டது என்பதை, உரிமைகளை அனுபவிப்பவர்கள் நினைவில் கொள்வது அவசியம்.

உயிர் இழந்த யாரும் தனது சொந்த நலனை முன்னிருத்த வில்லை. கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களைக் காக்க, கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க, ரவுடிகளிடம் இருந்து, நிம்மதியான வாழ்க்கையை பொது மக்களுக்கு உருவாக்கிட, காமவெறியர்களிடம் இருந்து பெண்களைக் காத்திட, மதவெறியர்களிடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காத்திட, அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிட, உள்ளாட்சி தேர்தல்களில் ஊழலற்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாணவர் உரிமையை நிலப்பிரபுக்களிடம் இருந்து பாதுகாத்திட, பொதுச் சொத்தை அபகரித்ததை மீட்பதற்காக, என பொது மக்களின் தேவைக்காக, அவர்களைப் பாதுகாப்பதற்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்தவர்கள். தனி நபர் சாகசங்களாக இதைப் பார்க்காமல், இயக்க வளர்ச்சியைக் காக்க, தந்த விலைகள் என்று தான் டி.ஒய்.எஃப்.ஐ பார்க்கிறது. இனியும் தனது வன்முறையை, கள்ள சாராய வியாபாரத்தை, பெண்கள் மீதான ஆதிக்கத்தை தொடர முடியாது என்ற நிலையிலேயே, ஆதிக்க சக்திகளும், சமூக விரோதிகளும், வாலிபர் இயக்கத் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஸ்பார்ட்டகஸின் மரணம் அடிமை முறைக்கு முடிவு கண்டது. அது போல், நமது தோழர்களின் தியாகம், பல இடங்களில், சமூகக் கொடுமைகளை தடுத்து முன்னேற வித்திட்டது..

இன்றைய தமிழகத்தில், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கல்வி வர்த்தகம் கணஜோராக அரங்கேறுகிறது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், தங்கள் தேவைக்காக, பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவித்து, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆள் திரட்டுகிறார்கள். கல்வி தனியார் வசம் கொடுக்கப் பட்டால், இந்த கொடுமைகள் தலைவிரித்து ஆடும் என்பதை, டி.ஒய்.எஃப்.ஐ. நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. உயிர் கொடுத்தாவது, தடுப்பது என களம் கண்டிருக்கிறது. கேரள மாநிலம், கூத்துபரம்புவில், தனியார் மருத்துவ கல்லூரி துவங்க, காங்கிரஸ் அரசு முயற்சித்த நேரத்தில், நவம்பர், 25, 1995ல், நடைபெற்ற டி. ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ.யின் எழுச்சிமிக்க போராட்டம் குறிப்பிடத் தக்கது. ராஜிவ், மது, ரோஷன், ஷிபுலால், பாபு ஆகிய ஐந்து தோழர்கள், காவல் துறையின், ஆட்சியாளர்களின் கொலைவெறிக்கு ஆளாகினர். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கில் தாக்குண்டனர். கன்னூர் மாவட்டம், சொக்லி பஞ்சாயத்தில், 15 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக, கழுத்திற்கு கீழ் சிதைக்கப் பட்ட உடலாக, இருந்தாலும், வரும் தோழர்களிடம், புன்னகை தவழும் முகத்துடன், இயக்கப் பணி எப்படி இருக்கிறது என்பதை அக்கறையுடன் விசாரிக்கும் தோழனாக, புஷ்பன் வாழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகளில், 5475 நாட்களில், இழந்திருக்கும் நேரத்தை, வாழ்வின் பல்வேறு இன்பத்தைத் தொலைத்து விட்டதை நினைத்து ஏங்கவில்லை. மாறாக தொடரும் போராட்டங்கள் காரணமாக வெற்றி மீதான நம்பிக்கையுடன், தோழர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.

இயக்கம் என்பது சம்பாதிப்பதற்கல்ல, பலரைப் பாதுக்காக்க, அந்த கவசமாக இயங்கிய குற்றத்தினால் தான், எமது தோழர்கள் கொலையுண்டார்கள். அனைவரும் 17 வயது துவங்கி, 40 ஐ, தொட்டவர்கள். அம்மா, அப்பா, மணைவி, குழந்தை ஆகிய அன்பைக் கடந்து, மக்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள். அதனாலேயே மக்கள் நிம்மதிக் காற்றை சுவாசிக்க, தாங்கள் காற்றாகி போனார்கள். இவர்கள் தியாகத்தை வரலாறு நினைவில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வளரும் புதிய தலைமுறைக்குச் சொல்லாமல் தியாகிகள் விதைக்கப் படுகிறார்கள், என்று சொல்வதில் பொருளில்லை. சொல்லும் விதத்தில், தோழர். ரமேஷ் பாபு முயற்சி எடுத்திருக்கிறார். ஓரிரு நாள் பணியில் இத்தகவல்களை சேகரிப்பது சாத்தியமற்றது. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய தியாகிகள் குறித்த விவரங்களை, இன்று இந்நூலுக்காக திரட்டாமல் விட்டிருந்தால், வரலாற்றின் பக்கங்களுக்குள், புதைந்து போயிருப்பார்கள். எனவே தான் இது மிகச்சிறந்த முயற்சி.

களப்பலியாகிய தோழர்களின், தோழர்கள், நன்பர்கள், குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் இத் தொகுப்பு குறித்து அறிந்தால், மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார்கள். வாலிபர் சங்கப் பணிகளுக்கிடையில், தமிழகத்தின் அனைத்து தியாகிகள் குறித்த வரலாற்றினை, சேகரித்து தொகுத்திருக்கும், டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவர். தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு விற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற தகவல் தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.

புதன், 20 அக்டோபர், 2010

லெனின் மற்றும் பகத் சிங்





தனது விருப்பம் குறித்து ஆர்வம் கொண்டிருந்தால், அதற்காக முழுமூச்சாக உழைத்தால், அதனால் தூக்கமின்றித் தவித்தால், பின்னர் அவ்விருப்பம் நிறைவேறும் போது, உலகில் மாபெரும் பிம்பத்தைத் தான் அடைந்ததாக உணருவான் மனிதன். சோசலிசம் நமது விருப்பமா?

லெனின்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாகாது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. பொதுமக்கள் என்ற பெயரிலான அங்கலாய்ப்புகள் இப்படித் தான் விதைக்கப் படுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவர் கூட்டமோ, பொதுவான இளைஞர்களோ, அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அது ஒரு சாக்கடை, விழுந்தால் எழுந்திருக்க இயலாது, என ஏற்கனவே குறிப்பிட்ட முன்முடிவை பின் தொடருவதனால் உருவானது. மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது மட்டுமே சாக்கடை சுத்தமாகிறது. மழை பொய்த்துப் போனால், சாக்கடையின் துர்நாற்றமும், தேங்கிய சாக்கடையினால், நிலத்தடி நீரும் சேர்ந்து கெட்டுப்போவதும் இயற்கை. மனித உடலிலும் பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாவதும் இயற்கையாக நடைபெற்று வருகிறது. இயற்கை ஒருவேளை நின்று போனால், நிலமும் உடலும் பாதிக்கப் படும். அரசியலும் இளைஞர்களின் பங்கேற்பு இல்லை என்றால், மிகச் சிறந்த அரசியலாக இருந்தாலும், எதிர்காலத்தை இழந்து விடும்.

உலகில் இளைஞர்களிடம் அரசியல் பேசிய தலைவர்கள் பலர். அரசியல் உரைகள் உலகப் புகழ் பெற்றது, லெனின், மா சே துங், சேகுவேரா, ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மட்டுமே. இத் தலைவர்கள் தங்கள் நாடுகளில் புரட்சி வெற்றி பெற்ற பிறகே அதிகளவில் இளைஞர்களிடம் பேசினார்கள். இளைஞர்களின் பங்களிப்பு அதிகார மாற்றத்துடன் நின்று விடக்கூடாது. இளைஞர்கள் சமூக ஆக்கத்தில் முன்நிற்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்து தங்கள் சம்பாசனைகளை அமைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் நிகழ்த்திய உரை, வரலாற்றின் எல்லாக் காலங்களிலும், இளைஞர்களிடம் என்ன விவாதிக்க வேண்டும் என்பதற்கான, நிரந்தர சான்று. மார்க்சீயம் என்பது கடந்த காலத்தில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறையையும் கற்றதன் அடிப்படையில் உருவானது. எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரசுரம், ஆய்வுக்கட்டுரைகள், மட்டும் கற்பது போதும், என்று இருந்தால் கம்யூனிஸம் என்பது வறட்டு சூத்திரம் ஆகிவிடும். அத்தகைய கம்யூனிஸ்டுகள் தற்பெருமை நிறைந்தவர்களாக மாறிவிடுவர். பழைய முதலாளித்துவ கல்வி முறையில் நாம் அமைக்க விரும்பும் சமூகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் அம்சங்களை விலக்கி விட்டு, கம்யூனிஸத்திற்கு பலனளிக்கும் அனைத்தையும், பழைய பள்ளியில் இருந்து கற்பது அவசியம், என்பதை இன்றைய சமூகத்திற்கும் பயன் படும் வகையில் குறிப்பிட்டு இருக்கிறார். சோசலிசம் என்பது முதலாளித்துவத்தை விடவும் சிறந்தது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் சிறந்தவற்றையும், அதன் கெட்ட அம்சங்களை களைந்து புதிய உருவாக்கமும் இனைந்து எல்லாமே மொத்த சமூகத்திற்கும் பொதுவானது, என்பதை நிலைநாட்டுகிறது. அப்பணியில் கம்யூனிஸ்டுகள் முழு ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற லெனின் விடுத்த வேண்டுகோள், அரசியல் சாக்கடை என்பவராலும் மறுக்க இயலாது.

ஒரு நாடு வளர்ச்சி பெற இளைஞர்களிடம் முதலீடு செய்ய, அரசுகள் முன்வர வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.. இந்தியா உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் நாடு. இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களோ, முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களோ, இளைஞர்களைத் தொலை நோக்குப் பார்வையுடன் அனுகுவதில்லை. மாறாக இளைஞர்களின் உணர்ச்சி வேகத்தை மட்டும் பயன் படுத்துகின்றனர். காஷ்மீரத்து போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள், மாவோயிஸ்டுகள் என சொல்லிக் கொள்பவர்களின் போராட்டங்கள் ஆகிய அனைத்தும், இளமையின் வேகத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் சிந்தனையில் கருக் கொண்டதே.

இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும், சமூக மாற்றம் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்குமான வித்தியாசத்தினை தெளிவுபடுத்துகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணத்தை விதைத்து, நாற்காலிகளுடன், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வதோ எளிது, என்ற அரசியல் வியாபாரம் கண்டு, அதிருப்தி கொள்வது நியாயமே. அதிருப்தி காரணமாக அரசியல் வனவாசம் கொள்ள முடியாது. புதிய சமூகத்தை உருவாக்கும் போராட்டம் எளிதானதல்ல. இளம் அரசியல் தொண்டர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியை வலுப்படுத்துவதன் மூலமே, விவசாயி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க முடியும், என்ற விவாதத்தை பகத்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேராமலேயே முன்வைத்துள்ளார்.

இந்தியா விடுதலை பெற்றால், இர்வின் பிரபுவின் இடத்தில், சர். தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படலாம். இதனால் இந்திய விவசாயிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்ற கேள்வி முக்காலத்திற்க்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பிரிட்டிஷாருக்கு அன்றைய இந்திய மக்களை ஏமாற்ற, மண்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ் போர்டு சீர்திருத்தம் போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் போதுமானதாக இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களிடம் நலத்திட்டங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது.

23 வயதில் கொல்லப்பட்ட பகத்சிங், 1929களில், எழுதியிருக்கிறார், எனது கருத்துப் படி மேலவை என்பது முதலாளித்துவ ஆட்சியின் போலித்தனம் அல்லது சூழ்ச்சி, ஒரே ஒரு அவையைக் கொண்ட அரசாங்கமே சிறந்த ஒன்றாக செயல்பட முடியும். சட்ட மன்றத்திற்கும் விடவும், உயர்ந்த அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் ஒரு கொடுங்கோலர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த விவாதம் இன்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் மட்டுமே முன் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி முழக்கங்கள் அரியணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை என்பதாகி விட்டது. பகத்சிங்கின் தீர்க்க தரிசன உணர்வு தெளிவாக இருக்கிறது. பொருளாதார சுந்திரத்திற்கு சோசலிசம் மட்டுமே தீர்வு, என பகத்சிங் குறிப்பிட்ட நிலையில் தற்போது அரசியல் சுதந்திரத்தை பாதுகாக்கவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலகமயம், நவீன தாராளமயம் என்பது வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், இந்திய ஆட்சியைத் தீர்மானிக்கிற சர்வ சக்தி படைத்ததாக அதிகாரம் செலுத்துகிறது. ஊழல் பெருக்கத்திற்கு பன்னாட்டு நிதி மூலதனத்தின் வருகை ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. காமன் வெல்த் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல ஆயிரம் கோடி ஊழல் அம்பலப்பட்டுள்ளது. இது போன்ற திட்ட அமலாக்கத்தில், 10 சதம் கமிஷன் பேரம் பேசப்படுவது தவிர்க்க இயலாது என அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார். இப்படி லஞ்சம் மற்றும் ஊழல் நியாயப்படுத்தப் படுகிறது.

இதற்கு காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பு முறையும், அது பாதுகாக்கும் வர்க்கமும் ஆகும். இதற்கு மாற்று பகத்சிங் குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் அரசியலும், லெனின் வலியுறுத்திய இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டிய சமூகமும் முன் நிறுத்தப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அரசியல் இதற்கு வலுப்பெறுவதும், இளைஞர்கள் அதை நோக்கி வருவதும் காலத்தின் கட்டாயம். இக்கட்டுரை தொகுப்பு வெளிவர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

சேதுத்திட்டமும் ஆள்வோரின் அக்கறையின்மையும்

2010 பிப்ரவரி 6 அன்று காலை, திருச்சி மாநகர் முழுவதும் பத்திரிகை களில் பரபரப்பு செய்தி. மத்திய அமைச் சர் ஜி.கே. வாசன், போக்குவரத்து நெரிச லில் கார் சிக்கிக் கொண்டதால், இரு சக் கர வாகனத்தை, வழியில் சென்ற நபரிடம் கேட்டு வாங்கி, விமானநிலையத்திற்குச் சரியான நேரத்தில் சென்றடைந்தார். அவர் அதுபோன்று முயற்சிக்காவிட் டால், அடுத்த விமானத்தில் சென்றிருப் பார். அரசுப் பணம், அநாவசியமாக, சில ஆயிரம் ரூபாய் வீணாகி இருக்கும். அவரு டைய நிகழ்ச்சிகள் சிலவும் பாதிக்கப்பட் டிருக்கும். ஜி.கே.வாசன் பொறுப்பு வகிக்கும் கப்பல் போக்குவரத்துத் துறையும், மத்திய அமைச்சரவையும், சரியான நேரத்தில் செயல்படாமல், தாமதிப்பதால், இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.2400 கோடியை பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும்.

ஆம், சேதுக் கால்வாய்த் திட்டத் தினை செயல்படுத்த நிதி ஒதுக்கி, ட்ரெ ஜிங் இயந்திரங்களை சுமார் மூன்றாண்டு காலம் பயன்படுத்தி, 300 மீட்டர் சதுர பரப்பளவைத் தவிர இதர பணிகள், அனைத்தும், முடிந்துவிட்ட சூழலில் நிதியும் செலவு செய்யப்பட்ட நிலையில் திட்டம் முழுமை பெறாமல் இருக்கிறது.

கடந்த 2009 டிசம்பர் முதல் வாரத் தில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய் துள்ளது. அதில் நீதிமன்றம் கேட்ட ஆவ ணங்களை ஒப்படைக்க ஒன்றரை ஆண்டு கால அவகாசம் வேண்டும் என, பணி நின்று ஒன்றரை ஆண்டுகள் கழித்து அது கேட்டிருக்கிறது. அதற்கடுத்த ஒரு மாதத்திற்குள் ஒரு கமிட்டி அமைத்திருப் பதாகவும், அதற்கு 18 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் புதிய வழித்தடத்தைக் கண்டறிய வேண் டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள் ளது. முன்னுக்குப் பின் முரணாக நமது மத் திய அரசும், கப்பல் போக்குவரத்துத் துறை யின் செயல்பாடும் இவ்வாறு இருக்கின்றன.

கடந்த 2007ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வழங்கிய இடைக்காலத் தடை யைத் தொடர்ந்து, சேதுக் கால்வாய்ப் பணி மந்தகதியை நோக்கித் திரும்பியது. ஆதம்பாலமா? ராமர் பாலமா? என்ற சர்ச் சையில் 300 மீட்டர் சதுரப் பரப்பு சிக்கிக் கொண்டதன் காரணமாக, மக்களின் நம் பிக்கை என்கிற விரலைக் கொண்டு, வளர்ச்சி என்கிற, மக்களின் கண்ணைக் குத்துகிற கொடுமையை சில அரசியல் கட்சிகளும், இந்துத்துவா இயக்கங்களும் அரங்கேற்றி இருக்கின்றன. இவர்கள் ஆட்சியிலிருந்தபோது, சேதுக் கால் வாய்த் திட்ட அமலாக்கத்திற்கான ஒப்பு தல் வழங்கியதை, எதிர்க்கட்சியான பின் மறந்துவிட்டார்கள்.

நமது தமிழகத்தைப் பொறுத்தளவில் வேளாண் பணி காரணமாகக் கிடைத்து வந்த வேலைவாய்ப்பும், இதர உப தொழில் களும் அழிவை எதிர்கொண்டுள்ளன. ஏறத்தாழ 15 ஆண்டுகளில் மிகக் குறை வாக இருந்த புலம்பெயர்தல், கிராம வேறு பாடின்றி இப்போது அதிகரித்துள்ளது. தமிழக உழைப்பாளிகள், வேறு மாநிலங் களுக்கும், வேறு மாநிலத்தவர் தமிழகத் தின் பெரு நகரங்களுக்கும் புலம்பெயர் வது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பஞ்சாலைகள் பெருமள வில் மூடப்பட்டு, வேலையிழப்பை உரு வாக்கியுள்ளன. நிரந்தரத் தொழிலாளர் கள் வெளியேறியபின், அதே வேலைக்கு கேம்ப் கூலி அல்லது சுமங்கலித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த, தனிப் பெண்கள் உள்ள பெண் குழந்தைகள் அதிகம் உள்ள, குடிகார அப்பாவைக் கொண்ட குடும்பத்து இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

பாஜக அல்லது இந்துத்துவா அமைப் பினர் இத்தகைய சமூக அவலங்கள், கொடுமைகளுக்கு எதிராக ஒருபோதும் போராடியதும் இல்லை. மாறாக, மும்பை போன்ற இடங்களில் இனம் மற்றும் மொழி உணர்வைத் தூண்டி கலவரங் களையும், கொலைகளையும் அரங்கேற்று கிறார்கள். இந்துத்துவா அமைப்புகள் மானுட வளர்ச்சியை மேற்படி குணாம்சத் தின் காரணமாக நிராகரிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு, பெரும் முதலாளிகளுக்குத் துணை போகின்றது. இடம்பெயர்கிற மக்கள் மீதான சுரண்டலைத் தடுக்க, தீவிர நடவடிக் கைகளை மத்திய-மாநில ஆட்சியாளர்கள் ஒரு போதும் எடுப்பதில்லை. இடம்பெயர் தலைத் தடுக்கும் விவாதத்திலும் ஈடு படவில்லை.

சேதுக் கால்வாய்த் திட்டம், சுரண் டலை முற்றிலும் தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இடம் பெயர்தலை, குடும்ப உறுப்பினர்களின் சிதைவைத் தடுக்கும் என எதிர் பார்க்க லாம். ஆண்டுக்கு சுமார் 7000 கப்பல்கள் மேற்படி கால்வாய் வழி சென்று வரும். இது தூத்துக்குடி துவங்கி கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் சிறு துறைமுகங்களை உருவாக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் காரணமாக, உட்புற மாவட்டங்களிலும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இன்றைய நிலையில் முன்னேற்றப் பாதையை நோக்கி சில மாற்றத்தை உரு வாக்கும். அந்த மாற்றத்தை உருவாக்குவ தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு ஏன் ஆர்வம் காட்டவில்லை, மந்தகதி யில் செயல்படும் காங்கிரஸ் தலைமை யை, மாநில வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு திமுக, ஏன் வலியுறுத்தவில் லை? கடந்த காலத்தில் கப்பல் போக்கு வரத்துத் துறையைத் தன் வசம் வைத்தி ருந்த திமுக, தற்போது காங்கிரசிடம் பறி கொடுத்ததால் ஆர்வம் காட்டவில்லையா? தற்போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விரயமாக்கிவிட்டு, பொதுப் பணத்தை தன் விருப்பப்படி செலவிட்டு விட்டு மக்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்?

சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேற் றத்திற்காக போராடிய அமைப்புகளில் முக்கியமான அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தமிழகத்தில் தொடர் போராட்டம், புதுதில்லியில் 2000 நவம்பர் 28 பேரணி-ஆர்ப்பாட்டம், 2007 அக்டோ பரில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் துவங்கி, இராமேஸ்வரம் நோக்கி சைக்கிள் பேரணி - பிரச்சாரம். தொடர்ந்து கடலோர மாவட் டங்களில் சைக்கிள் பிரச்சாரம். 2008 டிசம்பரில் மாநில அளவில் சென்னை நோக்கி பிரச்சாரம் என பல வடிவங்க ளில் போராடியுள்ளது. அதன் தொடர்ச்சி யாக தற்போது, மத்திய அரசின் கவ னத்தை மேலும் ஈர்ப்பதற்காக, வாலிபர் சங்கம் தலைநகர் தில்லியில், நாடாளு மன்ற வீதியில் 24 மணி நேர உண்ணா விரதத்திற்குத் திட்டமிட்டு, பிப்ரவரி 12இல் அரங்கேற்றுகிறது.

தென் மாவட்டங்களில் அமைப்பாளர் களையும், தளபதிகளையும் கொண்டிருக் கும் ஆட்சியாளர்கள், சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தயக்கமின்றி, தடைகளை எதிர்கொண்டு நிறைவேற்றுவதன் மூலமே, தென் மாவட்டங்களில் புதியவேலை வாய்ப்புகளுக்கான வழிகளைத் திறக்க முடியும்.

thanks to theekkathir published on 12 02 2010

திங்கள், 18 அக்டோபர், 2010

உலக இளைஞர் இயக்கம் குறித்து


உலக வரலாறு அனைத்தும், யுவ,யுவதிகளின் ரத்தத்தால் எழுதப் பட்டது.

-பகத்சிங்

ரோமாபுரியில் அடிமைகளைத் திரட்டி உரிமைக்கான கழகம் விளைவித்த ஸ்பார்ட்டகஸ் துவங்கி, ரத்தவாடையும், தூக்கிலிடப்பட்ட, புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, இளைஞர்களின் பிணங்கள் வரலாற்றுப் பாதைகளை நிரப்பியிருப்பதும், புதிய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய உலகம் எந்த எதிர்ப்பு அர்சியலும் இல்லாமல், பலருடைய வாழ்வை சூறையாடிய அதிகாரங்கள் ஆட்சி செலுத்தாமலும், கட்டமைக்கப் பட்டிருக்க முடியாது, என்பதற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஏழு தலைமுறைகள் நாவல் சொல்லும் கதை, மனிதனை மனிதன் சுரண்டி, பிரமாண்டங்களை கட்டமைப்பதாகும். குண்டா கிண்டே, என்ற கருப்பினத்தவனின் மீது பின் மண்டையில் தாக்குதல் தொடுத்து கடத்தியதையும், அவன் அமெரிக்க வீதிகளில் அடிமையாக ஏலம் விடப்படுவதும், அடக்குமுறைக்கு ஆளாவதும், தாக்கப்படுவதும், பின்னர் அவன் வாழ்வில் உருவாகும் திருமணம், வாரிசு, பேத்தி, பேரன், என அனைவருக்கும் தான் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து கடத்தப் பட்ட வரலாற்றை போதிப்பதாகவும், நாவல் வடிவமைக்கப் பட்டு இருக்கும். ஏழாவது தலைமுறையான, சிந்த்தியா என்கிற பெண் குழந்தைக்கும் அந்த வரலாறு போதிக்கப் படும்.

இந்த வரலாறு தாழ்வு மனப்பான்மையை உருவாக்க வில்லை, மாறாக எமது முன்னோர் அடைந்த ஏமாற்றத்தை நாம் அடையாமல் எச்சரிக்கையாக இருப்பதற்கும், முன்னோர் மீதான சுரண்டலுக்கு, காரணமான சமூக அமைப்பை, மாற்றும் வலிமையை, அடுத்த தலைமுறையான நாம் பெற்றிடவும், பயன்படுகிறது. அது போன்ற வலிமையை இளைஞர் அமைப்புகள் பெறுவதற்கு, கடந்த கால இளைஞர்களின் செயல்களையும், அந்த சமூக இளைஞர் கூட்டத்தின் வரலாறையும், பெறத்தக்க வகையில், ஏ,பாக்கியம் எழுதியுள்ள, உலக இளைஞர் எழுச்சிகளும் - இயக்கங்களும் என்ற சிறு நூல் சரியான பங்களிப்பைச் செய்யும். சுமார் 300 ஆண்டு காலத்தின், இரண்டு கண்டங்களின், வரலாற்றுத் தகவல்களை, சேகரித்து இருப்பது, இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததாக அமையும்.

நமக்கு இன்று கிடைக்கும் வரலாறு அனைத்தும், ஆளும் வர்க்கத்தினரால் எழுதப் பட்டது என்பதை, மறந்து விடலாகாது. கரிபால்டி, மாஜினி ஆகிய இத்தாலி நாட்டு இளைஞர்கள் பற்றி படிக்கிற போது, கடந்த காலங்களில், திரைப்படங்களில் கதாநாயகர்கள் தோன்றுவதைப் போன்ற உணர்வு உருவாக்கப் பட்டு இருந்தது. அப்புரிதலை இந்நூல், புரட்டி புது அர்த்தம் கற்பிக்கிறது. அவை தனி நபர்களின் சாதனை அல்ல, அங்கே பின்னிப் பினைந்திருந்த கூட்டு உழைப்பை, இருட்டடிப்பு செய்துவிட முடியாது. இரண்டாவது, போராட்டங்களுக்கு காரணமாக அரசியலும், அதை பின்பற்றும் சமூகமும் அமைந்திருந்தது. இதைத் தான் காரல் மார்க்ஸ்,நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார்என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் இத்தாலியில் மட்டும் அல்ல, ஐரோப்பா கண்டம் முழுவதும், 1700 துவங்கி, 1900ன் இறுதி வரையிலும், சுமார் 200 ஆண்டுகள் நிலபிரபுத்துவத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வீறு கொண்டு நடைபெற்று உள்ளது.

முதலாளித்துவம் ஐரோப்பாக் கண்டத்தில், நிலபிரபுத்துவத்தின் அழிவில் இருந்தே வளர முடிந்தது, என்பதை இடதுசாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதை இந் நூல் தெளிவாக வரையறுக்கிறது. சுமார் 200 ஆண்டுகள் மன்னராட்சி மற்றும் ஜனநாயகத் தேவைக்கான போராட்டங்களை இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்திட, அன்றைய சமூகம் காத்திருந்ததோ, என சந்தேக கண் கொண்டு பாராமல், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை சொல்லொன்னா துயரம் நிறைந்ததாக இருந்தது என புரிந்து கொள்வதே சரியானது. எல்லையற்ற அரக்கத் தனத்தை எதிர்க்கும் துணிவு இளைஞர்களுக்கு மற்ற அனைவரையும் விட அதிகமாக இருந்ததை வரலாறு பல தகவல்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

நாங்கள் யதார்த்த வாதிகள், ஆனால் அசாத்தியங்களை கனவு கான்கிறோம், என குறிப்பிட்டார் சே. அவர் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களைக் கொண்டு மட்டும் குறிப்பிடவில்லை. முந்தைய நூற்றாண்டில் தடம் பதித்த போராட்ட வரலாற்றின் தொகுப்பில் இருந்தே, அதை ஆய்வு செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டதாக கூறலாம். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும், வேகம், துணிவு, சமூக அக்கறை ஆகியவை இருக்கிறது. அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தான் இயக்கங்கள் பங்களிப்பு செய்கிறது. அந்த பங்களிப்பை, ஐரோப்பா கண்டத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கும், அன்றைய நிலையில் புதிதாக துளிர்விட்ட முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, அன்றிருந்த இயக்கங்கள் மிகச் சரியாக செய்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து இன்றைய முதலாளித்துவத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது விவாதத்திற்கு உட்படுத்தப் பட வேண்டும். இன்றைய உலக முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?, என்ற முடிவெடுக்கத் தெரியாத சமூகத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு காரணம் நேற்றைய நிலப்பிரபுத்துவத்தை அறிந்திருக்காதது எனச் சொல்லலாம். ஏனென்றால் நிலபிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில், முதலாளித்துவம் வெற்றி பெற துணை புரிந்தது, நிலபிரபுத்துவத்தின் கொடுமை. அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற தொழிலாளர் நல உரிமையை வலியுறுத்தி இளைஞர்களைத் திரட்ட முடிந்தது. இன்று அந்த உரிமை பறிபோயிருக்கிறது. முதலாளித்துவம் துளிர்விட்ட காலத்தில், கிடைத்த சில உரிமைகள் கூட, இன்று பறிக்கப்பட்டு வருகிறது. இளைய த்லைமுறைக்கு இது குறித்த உணர்த்துதலை, அதிகப் படுத்தும் போது, நவீன சுரண்டலுக்கு எதிரான, நம்பிக்கையுடன் கூடிய போராட்டம் தீவிரம் பெறும்.

ஒன்றுபட்ட ஜெர்மனி, ஒன்றுபட்ட இத்தாலி, மன்னராட்சிக்கு எதிரான ப்ரெஞ்சு மாணவர் போராட்டம், போன்றவை இளைஞர்களுக்கு இருந்த, சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் உணர்வை வெளிப் படுத்துகிறது. இந்தியாவிலும் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், ஒன்றுபட்ட இந்தியாவிற்கான தேவையையும், போராட்ட அலைகளையும் உருவாக்கியது. இந்தியாவில் இருந்த மன்னர்களும், பின்னர் வளர்ந்த முதலாளிகளும், அத்தகைய போராட்டங்களுக்குத் தடையாக இல்லை. நூல் இந்தியாவில் நடைபெற்ற, இளைஞர்கள் தலைமை தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் குறித்து, புதிய மற்றும் எழுச்சி மிக்க தகவல்களைக் கொடுத்துள்ளது. இத் தகவல்கள் இன்றைய இளைஞர் இயக்கங்களுக்கு சரியான வரலாற்றை பின்பற்றுவதற்கு உதவி செய்யும்.

இந்தியாவில் முதலாளித்துவம், நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதே அல்லாமல், அழித்து முன்னேற முயற்சிக்கவில்லை. அதன் காரணமாகவே, இன்றைய இளைஞர்களிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையோ, புதிய சமூகம் குறித்த கருத்துக்களோ தீவிர ஆதிக்கம் செலுத்த வில்லை. எனவே வரலாறு கற்போம், தீவிர அரசியல், சமூக மாற்றத்திற்கு விதையிடுவோம், என்பதே இன்றைய இளைஞர் இயக்கத்திற்கான இப்போதைய முழக்கமாக இருக்க முடியும்.

இன்றைய தேவை கருதி நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக்கும், எப்போதும் நன்றிகள் உரித்தாகும்.

அரசு வேலை வாக்குறுதி 6


சமூக நீதிக்கான போராட்டம், நவீன தாராள-மயமாக்கல் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்ளும் நிர்ப்பந்தம், மாநில முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மத்திய ஆட்சியில் கூட்டணி அமைக்கத் துவங்கிய பிறகு அதிகரித்துள்ளது. அதிகாரம் பெறுவதில் முன்னெழுகிற போட்டி, பல பிராந்திய முதலாளித்துவ கட்சிகளை, தனது கொள்கைகளை விலக்கி வைக்கும் சூழலை ஏற்-படுத்துகிறது.
அதேநேரத்தில், முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒருங்கிணைப்பைத் தடுக்கும்விதத்தில் அடையாளங்களை முன்னிறுத்-தும் அரசியல் நடவடிக்கையையும் பாதுகாக்கிறது. நமது நாட்டில் காஷ்மீர் துவங்கி, எட்டுத் திசை-களிலும் புதுப்புது அரசியல் இயக்கங்கள் அடை-யாளத்தை முன்வைத்து வளர்ச்சி பெற்று வரு-கின்றன.

உழைக்கும் மக்களாக உள்ளவர்களை சாதி, மதம், இனம் ஆகிய அடையாளங்களின் பெயரில் அதே அடையாளங்களைத் கொண்ட, முதலாளிகளுடன் இணைந்து கொண்டு, ஒரே அடையாளம். எனவே உரிமை கேட்கிறோம், என்று உணர்ச்சி வசப்படுத்-தும் அரசியலை நாம் பார்க்கிறோம். இதன் சூத்ர-தாரி உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் என்பதை உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதில் மக்கள் இயக்கங்கள் சிரமப்படுகின்றன. இந்-தியாவில் 1990-களுக்குப் பின்னர்தான் சாதிய மோதல்களும், அடக்கப்பட்டவர்களுக்கான உரிமைக்கான போராட்டமும் வலுப்பெற்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பிற்படுத்தப்-பட்ட-வர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமை-களை முன்வைத்து, பொதுமக்களைத் திரட்டுவது அதிகரித்துள்ளது.

ஆனால், இதே காலத்தில் தான் உலகமயமும், நவீன தாராளமயமும் இந்தியாவின் எல்லா திசை-களிலும் வெற்றி நடைக்கு முயற்சித்து உள்ளது. அரசுத்-துறையில் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய. மாநில அரசுகள் காலிப்-பணியிடங்களை அதிகரித்துக் கொண்டே செல்-கின்றன. நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிக-மான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்-தில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் பெருகி இருக்கும் மக்கள் தொகைக்கும் இன்றைய அரசுஊழியர், ஆசிரியர் ஆகியோரின் எண்ணிக்கைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுஊழியர், ஆசிரியர் பணி நியமனங்கள் அதிகரிக்குமானால், மத்தியிலும், மாநிலத்திலும் புதியதாக பல லட்சம் பணியிடங்கள் உருவாகும்.

இத்தகைய காலிப்-பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள், நிரப்பப்படவோ, உருவாக்கப்படவோ செய்தால் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும். இதன்-மூலமே கடந்த காலத்தில் இழந்த சமூகநீதியை மீட்-டெடுக்க முடியும். இதே நிலைதான் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது. உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் கொள்கை அமலாகத் துவங்கிய கடந்த 18 அல்லது 19 ஆண்டுகளில் அரசு கைவசம் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், அரசுத்துறைப் பங்குகள் விற்பனை மூலம் வரவு என்பதும் கணக்கீடு செய்யப்-படுகிறது. அரசுகளின் இந்த நடவடிக்கை பல லட்சம் வேலை வாய்ப்புகளைப் பறித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தொழி-லாளிகளில் 92 சதமானோர் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் என்பதையும், 8 சத-மானோர் மட்டுமே அணிதிரட்டப்பட்ட தொழி-லாளர்கள் என்பதையும் அறிய முடிகிறது.

வேலை-யின்மை ஏற்படுத்தியுள்ள மற்றொரு தாக்கம், அரசே ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்யத் துவங்கியது ஆகும். மிகக்குறைவான கூலி, கடுமையான வேலை, எட்டுமணி நேரத்திற்கும் அதிகமான உழைப்பு நேரம் போன்ற தொழிலாளர் நல உரிமைபறிப்பை அரசே முன்னின்று செய்து-வருகிறது. அரசு காலிப்பணியிடங்கள், பொதுத்-துறை நிறுவனங்களின் புறக்கணிப்பு, தொழிலாளர் உரிமைபறிப்பு ஆகிய மூன்றையும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லை.

குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்-டோர் என்ற அடையாளங்களுடன் கூடிய தொழிற்-சங்கங்களும் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் நாயகன் என்று கூறிக்கொள்ளும் மாநில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதில்லை. இந்த சமரசத்தை எட்டுவதற்கு உலகமய, தாராளமயக் கொள்கை-களும் உணர்ச்சிமயமாக்கப்பட்ட அடையாள அரசி-யலும் பங்களிப்பு செய்திருக்கிறது. முதலாளித்-துவத்தின் லாபத்தைப் பாதிக்காத அரசியல் பொரு-ளாதாரம் தெளிவாக அமலாவதைப் பார்க்க முடியும். இதுபோன்ற அமைப்புகளின் சமூக உரிமைக்கான போராட்டம், சம்பந்தப்பட்ட சமூகத்தினை பொரு-ளாதார ரீதியாக சுரண்டிக் கொள்வதற்கான லைசன்-சாக மாற்றப்பட்டு வருகிறது. சாதிய அமைப்புகளும், பெண்ணுரிமை பேசுகிற சில தன்னார்வக் குழுக்களும் இதே காலத்தில் இளம்பெண்கள் மீது நிகழ்த்துகிற உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து பெரும்-பாலும் பேசுவதில்லை. குறிப்பாக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களே சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம், கேம்ப் கூலி போன்ற பெயர்களில் இளம் பெண்-களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

நாடும், மக்களும் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்து விட்டது என சிலர் பேசுகின்றனர். ஆனால், பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வயலைச் சுற்றி அடைத்து வைக்கப்பட்ட மனிதக் கூட்டம், உழைப்பைக் காலநேரம் இல்லா-மல் மன்னர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் அர்ப்பணித்ததைப் போல், இந்த நவீன தாராள-மயமாக்கல் கொள்கை, தன் உழைப்புச் சுரண்டல் என்ற சமூகக் கொடுமையைப் பூட்டி வைத்த விடுதிகளுக்குள்ளிருந்து அமலாக்கிக் கொண்டிருக்-கிறது. இதோடு இணைத்து பாலியல் சுரண்டலையும் அரங்கேற்றி வருகிறது. இவை வேலையின்மை என்ற சமூகக் கொடுமை-யினால் பிரசவிக்கப்பட்ட அவ-லங்கள் என்பதை பல்வேறு சாதீய அமைப்புகள் ஏற்க மறுக்கின்றன. பல லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழகத்தின் பஞ்சாலைகளிலும், கோடிக்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.

வேலை கொடுப்பது அல்லது முறைப்படுத்துவது அரசின் கடமை அல்ல என்ற சிந்தனையின் வெளிப்-பாடே, மேற்படி சுரண்டல் முறைகள். ஜனநாயக நாட்டில் சொத்து சேர்க்கும் உரிமைக்கு வக்காலத்து வாங்கும் அரசுகளும், அமைப்புகளும் இதுபோன்ற மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையை மறுக்-கின்றன. அப்படி மறுப்பதற்கு சமூக இயக்கங்களைப் பயன்படுத்துகின்றன என்பதையும் கவனிக்க-வேண்டும். இதன் தொடர்ச்சியே, இன்றைய தமிழக ஆட்சியாளர்களின் மொழிப்பற்று. தாய்மொழியில் அல்லது தமிழ் மொழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முழக்கமும் முன்-னுக்கு வந்துள்ளது.
தொடரும்...

அரசு வேலை வாக்குறுதி 5

வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி-யும், வேலை இழப்பு வளர்ச்சியும், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த கொள்கை திடீ-ரென்று ஒருநாள் நண்பகலில் உதயம் ஆகவில்லை. நீண்ட திட்டத்துடன் முதலாளித்துவம் உருவாக்கிய கொள்கை என்பதை அறிவது அவசியம். முதலா-ளித்துவ கொள்கை எனும் போது அதன் அரசியல் பொருளாதாரம் குறித்தும் அறிவது அவசியம். முதலாளித்துவம் பழைய நிலபிரபுத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே விவாதித்துள்ளோம்.

எனவே முதலாளித்துவத்தின் லாபமீட்டும் வேகம் குறித்தும் நாம் தெரிந்து கொள்வது மிக முக்-கிய-மான தேவை ஆகும். அரசு நிறுவனங்களும் இதிலிருந்து விதிவிலக்காக அமையவில்லை. லாப-மீட்டுவதற்கு தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்-களிப்பை செய்து வருகிறது. இது இரண்டு வழிகளில் முதலாளித்துவத்திற்கு பயன் படுகிறது. ஒன்று தொழில் நுட்பம் ஆகும். இதன் மூலம் ஆலைகளில் ஆட்குறைப்பை அமலாக்குவது நிகழ்கிறது. அதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகப்-படுத்துகிறது. வெளியில் வேலையில்லாதோர் அதி-கரிக்கும் போது, வேலையில் இருப்போருக்கான உரிமைகளை குறைக்க முடியும். தொழிலாளர் நலச்-சட்டங்களை அமலாக்க மறுக்கலாம். இரண்டு மேற்-படி செயல்களும், தொழில் நுட்பத்தின் மூலமான உற்பத்தி பெருக்கமும் வேகமான லாபத்திற்கு வழிவகை செய்கிறது.. வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி மற்றொரு வழியிலும் உருவாகிறது. அது என்ன-வென்றால், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கா-மல், இருக்கிற தொழிற்சாலைகளை பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்குவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் நம் நாட்டிற்கு வரும். இது நாட்டின் அந்நிய செலாவணி வரவு செலவில் வருமான அதிகரிப்பை வெளிப்படுத்தும். ஆனால் புதியதாக எந்தவொரு வேலை வாய்ப்பையும் உரு-வாக்காது. வெளியில் இருந்து வந்த பணத்தின் காரணமாக ஒட்டுமொத்த வரவில் வளர்ச்சியிருப்ப-தால் பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. ஆகவே தான் இத்தகைய பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இது போன்ற கொள்கைதான் அமலாகி வருகிறது. தொழில் நுட்பத்தையும், அதன் மூலமான லாபத்தையும் அதிகரிக்க விரும்பும் நிறு-வனங்கள், வேலையிழப்புக் கொள்கைக்கும் வ்ழிவகை செய்கின்றன. பங்குச் சந்தை இந்த கொள்கையை தீவிரப்-படுத்த உதவுகிறது. எந்த ஒரு நாட்டில் வேலை-யில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருக்-கிறதோ, அந்த நாட்டில் தொழிலாளர் உரிமைகள் பெரியளவில் பறிக்கப்படும். இந்தியாவிலும், ஏனைய ஆசிய நாடுகளிலும் இது போன்ற உரிமைப் பறிப்-பையும், வேலை பறிப்பையும் பார்க்கமுடியும். இதற்கு சில உதாரணங்களையும் குறிப்பிடலாம். ஒன்று, டாடா ஸ்டீல் உற்பத்தி நிறுவனம், ஜாம்ஷெட்பூரில் உள்ள இந்த நிறுவனம் 30000 தொழிலாளர்களைக் கொண்டு செயல் பட்டபோது 50 லட்சம் டன் எக்கு தயாரிக்கப்பட்டது. இப்போது 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஆனால் உற்பத்தி 80 லட்சம் டன். இதே கொடுமையை அரசு நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது. நெய்வேலி அணல் மின் நிலையம் ஒரு சுரங்கம், ஒரு மின் நிலையம் கொண்டு 600 மெகா வாட் மின்சாரம் தயரித்த போது, 24 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. இப்போது 3 யூனிட், 3 சுரங்கம், 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிற நிலையில் 17 ஆயிரம் தொழி-லாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் லாபம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் உள்ள யதார்த்தம் என்னவென்றால், உண்மையில் தொழி-லாளர் போதவில்லை என்பதாகும். தொழிலாளர் போதாத நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நிய-மனம் அதிகரிக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டத்தை அமலாக்குவதில்லை என்பதனால், நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டிட, இந்த கொள்கைகள் நிறுவனமய மாக்கப்பட்ட முத-லாளித்துவத்திற்கு பல லட்சம் கோடிகளில் பயன-ளிக்கிறது.

அரசு நிறுவனங்களே இது போன்ற தொழி-லாளர் விரோத அணுகுமுறையை கையாளுகிற போது தனியார் நிறுவனங்களின், அநியாயக் கொள்-ளையை தடுக்க முன் வருமா? இப்போது இந்தியா-வில் இந்த தொழிலாளர் புறக்கணிப்புதான் நடை-பெற்று வருகிறது. பின் வரும் இரண்டு உதார-ணங்-களின் மூலம் மத்திய, மாநில அரசுகள் இளம் தொழி -லாளர் புறக்கணிப்பை பகிரங்கமாக கையாண்டி-ருப்பதைப் பார்க்க முடியும். ஒன்று பாரத ஸ்டேட் வங்கி, தனது நிறுவனத்தில் 11 ஆயிரம் பணியிடங்கள் தேவை இருக்கிற நிலையில், ஓய்வு பெற்ற அலுவலர்களை பணிநியமணம் செய்ய முயற்சி எடுத்தது. டி.ஒய்.எஃப்.ஐ போராட்டம் மேற்படி முயற்சியை தடுத்தது. மிக சமீபத்தில் மேற்குறிப்பிட்ட 11 ஆயிரம் பணியிடங்களுக்கு 36 லட்சம் இளை-ஞர்கள் விண்ணப்பித்து பின்னர் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டதையும் நாம் அறிந்வோம்.

இரண்டாவது உதாரணம், தமிழ் நாடு அரசு சம்மந்தப் பட்டது. கடந்த 2009 டிசம்பர் 18 அன்று வெளியிட்ட அரசாணை எண் 170 ஆகும். மேற்படி ஆணை ஒய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் தருவது குறித்தது. இதன் மூலம் அரசு தனது செலவினத்தை குறைத்து விடப்போவதாக அறிவித்தது. டி.ஒய்-எஃப்.ஐ தொடர்ந்து போராடி, கறுப்புக் கொடி காட்--டும் போராட்டத்தில் சிறை சென்று அரசை நிர்ப்பந்தித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருக்-கிறார்-கள். இருந்தாலும் லட்சக்-கணக்கில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை பூர்த்தி செய்திட எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுக்கிறது.

மத்திய அரசு ஏறத்தாழ வேலை நிய-மனத் தடை சட்டத்தை அமலாக்கி வருகிறது. இத்-தகைய புறக்கணிப்பு இன்னும் ஒரு வகையில் இந்திய மண்ணில் அரங்கேறுகிறது. அதாவது, உலகில் உள்ள இதர நாடுகளில் வெறும் வேலைப்பறிப்பை மட்டும் உருவக்குகிறது. இந்தியாவில் கூடுதலாக சமூக நீதியையும் இணைத்துப் பறிக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக கிடைத்த இடஒதுக்கீடு, மேற்படி பொருளாதாரக் கொள்கை காரணமாக பறிபோகும் அவலத்தை, தலித் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக குரல் கொடுப்-பதாக கூறுபவர்களும் ஆதரிக்கின்றனர், என்ற செய்தி வேதனையானது. இது இந்திய நாட்டில் சமூக நீதிக்கான போராட்டம், வர்க்கப் போராட்-டதுடன் இனைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தியாவில் இத்தகைய சமுக நீதி மறுப்பு குறித்து சமுகநீதிக்காக போராடிய பெருமை கொண்டதாக சொல்லிக்கொள்ளும் அரசி-யல் இயக்கங்கலும் கவலை கொள்வதில்லை. மாறாக அவர்களும் இந்த சமூகநீதி மறுப்பிற்கு துணை-போகி-றார்கள். எனவே தான் இடதுசாரிகள் முதலாளித்-துவம் அல்லாத சமூக மாற்றம் தான் இத்தகைய சமூக சுரண்டல்களை வேரறுக்கும் என வலியுறுத்து-கிறார்கள். இன்றைய இந்தியாவின் அனுபவம் சமூக நீதி என்கிற முழக்கமோ, சாதி ஒழிப்பு என்கிற முழக்கமோ சம்ந்தப்பட்ட மக்களை சிறிது காலம் இடது சாரிகளுடன் இனைவதை தடுக்கப் பயன் படுமே அல்லாது, முழக்கங்களை சாதித்-துக்காட்ட பயன்படாது என்பதை தெளிவு-படுத்துகிறது.

அரசு வேலை வாக்குறுதி 4

மனிதகுல வரலாறு அடர்காட்டில் துவங்கிய போது, அவனின் பசிக்கு தேவையானதை எடுத்தோ, வேட்டையாடியோ உண்டு உயிர்வாழ முடிந்தது. நதிக்கரையில் குடிலிட்டு, சமைத்து உண்ணத் துவங்கிய போது, தனக்கானதை தானே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. மலைகளை, காடுகளை அழித்து சமதளமாக்கி விவசாய பூமியாக பரந்த நிலத்தை உருவாக்கிய போது வர்க்கம் உருவாகிறது. ஆண்டை, அடிமை என இருகூறாக பிரிந்த நேரத்தில் தான் உழைப்புச் சுரண்டல் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை சுரண்டப்படுகிறோம். எனவே தான் கார்ல் மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என கூறுகிறார்.

அடிமைச் சமூகத்தில் உழைப்பு இருந்ததனால் அங்கே உழைப்புச் சுரண்டல் இருந்தது. சில ஆயிரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்-பட்ட அணைகள், கோயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் அனைத்தும் அடிமைகளின் உழைப்பில் உயர்ந்த பிரம்மாண்டங்கள் அன்றைக்கு அடிமை மனிதனின் தேவை _ ஒட்டிய துணி தான், ஆனால் பொழுதெல்லாம் உழைத்தான். இன்றைய நவீன தாராளமய உலகின் நாகரிகத் தொழிலாளி-யின் தேவை அதிகம். அன்று போல் பொழு-தெல்லாம் உழைக்கிறான். எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என சிலர் குறிப்பிடு-கின்றனர். இன்றைய தேவை அதிகம் எனவே அதிக உழைப்பு என்ற தர்க்கம் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஏனென்றால் தேவை அதிகம் கொண்ட நவீன தொழிலாளியின் 10 ஆண்டுகால சேமிப்பு அதிபட்சம் ஒரு வீடு, இருசக்கர வாகனம், சில வீட்டு உபயோக சாதனங்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நவீன தொழிலாளியைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை 10 ஆண்டுகளுக்குள் லாபமீட்டுகிறார்கள். உதாரணம் இன்ஃபோசிஸ். மேலும் கடந்த 7ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ந்துள்ள பெரும் கோடிஸ்வரர்-களின் நிறுவனங்கள். இவர்கள் இல்லாது பல பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உதாரணங்-களில் சேர்க்கப்பட முடியும்.

சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். இன்று பலர் ஆள்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஏன் என குரல்கொடுத்தவர்கள் பணி நீக்க அறிவிப்புக்கு ஆளாகிறார்கள். தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, போன்ற நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிற உரிமைகளைப் பறிப்பதே நவீன தொழில்களில் உள்ள நாகரிக அணுகுமுறை.

மற்றொரு உதாரணம் போபால் விஷவாயு கசிவு நடந்து 26 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள தீர்ப்பு. இத்தீர்ப்பு இரண்டு செய்திகளைச் சொல்கிறது. ஒன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இலாபத்தை மகிழ்ச்சியாக அள்ளிச் செல்லவும், விஷவாயு கசிவு போன்ற பல்லாயிரம் மனித உயிர்களைக் கொன்றால், சொற்பத் தொகையை இழப்பீடாக தருவது. இரண்டு, ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார சுரண்டலையும், அதிகாரம் இழந்த நாடுகளாக இந்தியாவும் வளரும் நாடுகளும் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஆகும்.

மேற்படி இரண்டு உதாரணங்களும் வளரும் நாடுகளில் உழைப்பாளர்களையும், அலுவலர்-களையும் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவை என்பதை விவரிகின்றன. மனிதகுல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் அனைத்துலகச் சந்தையைப் பயன்-படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஓவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும், நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. (கம்யூனிஸ்ட் அறிக்கை பக்கம் 48) என்று 1848இல் 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறியிருக்கிறார். உற்பத்திக் கருவிகள் அனைத்திலும் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லா தேசங்-களையும், வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கும் தேசங்களையும் தனது நாகரிக வட்டத்திற்குள் இழுக்கிறது. அதாவது முதலாளித்துவமயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது. நாம் மேலே கண்ட உதாரணங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரிகளுடன் ஒத்துப் போவதை புரிந்து கொள்ள முடியும்.

மேலே கண்ட கொள்கைகளை ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் பின்பற்றுகிற போது, அந்த நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. கடந்த கட்டுரையில் விவாதிக்கிற போது, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும், சீனாவின் வளர்ச்சி குறித்தும் குறிப்பிட்டது இவையோடு ஒத்துப் போவதை நாம் அறிய முடியும்.

இன்று சமூகத்தின் சுரண்டல் முறை, ஏகாதி-பத்திய நாடுகள் வளரும் நாடுகளையும், வளரும் நாடுகளில் உள்ள பெருமுதலாளிகள் சிறு தொழில்களைத் துவங்க அனுமதிப்பதும் படிப்-படியாக வேலையில்லா திண்டாட்டத்தைப் பெருக்கும். இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒரு உதாரணம் என்றால் மற்றொரு உதாரணம் வால்மார்ட், பிக் பஜார், ரிலையன்ஸ், பிரெஷ் மோர் ப்ளஸ் மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும்.

ஆம் படிப்படியாக வளர்ந்து வந்த சுரண்டல் முறை முதலாளித்துவ சமூகத்தில் தன் கோர-முகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே தன் கோர முகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வேலையின்மை, சுயதொழில் செய்து வந்தவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் திறன் கொண்ட உழைப்பாளிகள் (skilled labour) திறனற்ற உழைப்பாளிகள் (unskilled labour) என பிரிக்கப்படுகின்றன. திறனற்ற உழைப்பாளிகளில் படித்தவர்-களும் இடம் பெறுகின்றனர். மொத்தத்தில் கணினித்துறை, பொறியியல் துறை, மருத்துவ, போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகள் பல கோடித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் கொண்டதாகவும், சில லட்சம் வேலை வாய்ப்பு-களைக் கொண்ட தொழில் திறனற்றவர்-களும் பணியாற்றக் கூடியதாக உருமாற்றம் செய்யப்-பட்டுள்ளது.

இதன் விளைவு, வன்முறை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி, அரசியலில் என்றும் இல்லாத ஊழல், கல்வித்துறையை, அடிப்படை சுகாதாரத்தை, தனியாரிடம் தாரைவார்த்தல் போன்றவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலும் திறனற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்த வளர்ச்சி போக்கு உருவாகும் என்பதை 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வேறு வரிகளில் குறிப்பிட்டு உள்ளது. விரிந்த அளவில் இயந்திரங்-கள் பயன்படுத்தப்படுவதன் விளை வாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும், பாட்டாளிகளுடைய வேலையானது, தனித்தன்-மையை முற்றிலும் இழந்து விட்டது. ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணையிருப்பு போல் மாறி விடுகிறார். மிகவும் எளிமையான அலுப்பு தட்டும் படியான ஒரேவித-மான சுலபமாக பெறத்தக்கதுமான கைத்திறன் தான் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொழி-லாளியினது வருமானம் முற்றிலும் அவரது பராமரிப்பிற்கும் அவரது குடும்பத்திற்குமான பிழைப்புச் சாதனங்களுக்குமே பற்றாத அளவிற்கு குறுகி விடுகிறது. வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாக அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. இயந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் அதிகரிக்க அதிகரிக்க வேலைப் பளூவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலமோ இது நடந்தேறுகிறது என குறிப்பிடுகிறது.

இன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத இளைஞர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சுட்டிக்காட்டிய கொடுமை-களைத் தான் அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட நிலையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் இன்று அமலாக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே, நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல்வேறு சீர்குலைவு வாத கருத்துக்கள் தலைதூக்குகின்றன.

தனியார் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதே பாதையில் பயணம் செய்ய விரும்புவதால், இந்த அரசு தன்னை முதலாளித்துவ அரசு என பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்படி பாதையில் பயணிப்பதுடன், பாதை போட்டவர்களுக்கு பாதபூஜையும் நடத்துகின்றனர்.
தொடரும்.......

வியாழன், 14 அக்டோபர், 2010

தமிழில் படித்தால் வேலையா?

மொழித் தகவல் தொடர்பின் அச்சு. பண்பாட்டின் வேர். மொழிதான் ஒரு சமூகம் குறித்த தொன்மையை, வரலாற்றை முழுமை யாக ஆய்வு செய்யப் பயன்படும், ஆய்வு முறையின் பிரதான கருவி. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்கு உரிய மொழியைப் பாடமாக கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை எனப் பேசுவதும், அவசரச் சட்டம் இயற்றுவதும் ஒரு சமூகத் தில் நடந்தால், அந்த சமூகம் தன் தாய்மொழி குறித்தும், அதனுடன் இணைந்த வேலை வாய்ப்பு குறித்தும், கடந்த காலத்தில் சிந்திக்க வில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இங்கு விவாதிக்கும் இந்தப் பிரச்சனை வெளிப்பட்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம் ஆகும். சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான ஆதிச்ச நல்லூர் தொல்லியல் வரலாற்றை கொண்டிருக்கும் மாநிலம் தமிழ் நாடு. தன் தாய்மொழிக்காக தீக்குளித்ததும், உண்ணாவிரதம் இருந்து மாண்டதும், அந்நிய மொழிகளை எதிர்த்துப் போராடியதும், இந் தியாவில் தமிழ்நாடு தவிர, வேறு எங்கும் பெரி தாக நடந்ததாக அறிய முடிய வில்லை. அந்த போராட்டமே தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத் திற்கு வழிவகுத்தது என்ற பெருமையும் பேசப்படுகிறது. அவ்வளவு உணர்ச்சிகள் தமிழ்ச்சமூகத்தில் கடந்த காலத்தில் மொழிக் காக கிளரப் பட்டுள்ளன. அவை அரசியலாக வும் பயன்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இன்று திடீரென, தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதும் அரசியலுக்காகத்தானா? என்ற கேள்வி தவிர்க்க இயலாமல் முன்வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவதாக, கடந்த கால ஆட்சி, தாய் மொழி குறித்தும், வேலை வாய்ப்பு குறித்தும் அக்கறையற்றதாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்வதாக மேற்படி அறிவிப்பு வெளியீடு செய்தியாகிறது. மூன்றாவதாக, மாநில அரசு இன்றைக்குப் பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை கார ணமாக, தன்னுடைய அவசரச் சட்டத்தை அமலாக்க இயலாது என்பதை உணர வில்லை.

ஒன்று: தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் தாய்மொழிக்கல்வி குறித்த ஆர்வம் குறைந்த தற்குக் காரணம், அரசு பின்பற்றுகிற கொள்கை. நவீன தாராளமய, தனியார்மயக் கொள்கைகள், கல்வி தருகிற பொறுப்பை அரசிடம் இருந்து படிப்படியாக விலக்கி, தனியாரிடம் முழுமை யாக ஒப்படைத்துவிட்டன. தமிழ்நாடு, இந்தி யாவிலேயே மிக அதிகமான தனியார் பள்ளிக் கூடங்களைக் கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இன்றைய மாநில ஆட்சியாளர்களான திமுக விற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி, இது குறித்து எழுதுகிற போது, தனியார் பள்ளிக்கு வக்காலத்து வாங்குவேரின் கூட்டம் அதிக மாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளும், பொதுப் பள்ளிகளும் சிறப்பாக செயல்படத் தொடங்கி விட்டால், கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்ற கவலை ஆட்சியாளர்களுக்கு இருக்கி றது. எனவேதான் ஆட்சியாளர்கள் அரசுப் பள் ளிகள் குறித்தும், பொதுப்பள்ளிகள் குறித்தும் கவலை கொள்வதில்லை என அரசின் அணுகுமுறை குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். மிகச் சமீபத்தில் மாநில தி.மு.க அரசு அமைத்த நீதிபதி கோவிந் தராஜன்குழு பரிந்துரைத்த கட்டணத்தை தடை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போது, பெற்றேர்களும், மக்கள் இயக்கங் களும் மேல் முறையீடு செய்த பின்னரே, மாநில அரசு மேல்முறையீடு செய்தது. அந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் மீது அரசு பரிவு கொண்டிருக்கிறது. உண்மையில் தாய் மொழிக்கல்வி குறித்து தி.மு.க அக்கறை கொள்ளும் என்றால், இனி தமிழகத்தில் தனி யார் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இரண்டு: மாநில அரசு தனது வேலை வாய்ப்பு குறித்த கொள்கையை மாற்ற வேண் டும். உலகமயமாக்கல் கொள்கை அமலாகத் துவங்கிய போது, முதல் கட்டச் சீர்திருத்தம் அமலானது. அரசு மற்றும் பொதுத் துறை நிறு வனங்களில் பணிபுரிவேரை விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில், வீட்டிற்கு அனுப்பினர். இப்போது இரண்டாம் சீர்திருத்தம் அமலா கிறது. ஓய்வு பெற்றேரை மீண்டும் பணியில் அமர்த்தும் வேலையைச் செய்கிறது. முதலில் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் ஆள் குறைப்பு அமலானது. இரண்டாவதாக, வேலையின்மை அதிகமாக உள்ள நிலை யைப் பயன்படுத்தி, உரிமைகளற்ற வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அல் லது பணிஓய்வு பெற்றவர்களை, காலிப்பணி யிடங்களில் வேலைக்கு அமர்த்துகிறது அரசு. 2009 இறுதியில் அரசாணை எண் 170-ஐ மாநில அரசு வெளியிட்ட போது அதை எதிர்த்து போராட்டம் நடத்திய காரணத்தால், திரும்பப் பெறப்பட்டது. எனவே மாநில அரசு தாய்மொழி யில் படிப்போருக்கு வேலை என்ற அவசரச் சட்டத்தை முன் மொழியும் முன், அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவும், புதிய வேலை வாய்ப்பு களையும் அரசு உருவாக்க வேண்டும். கூடவே இனி எப்போதும் ஓய்வு பெற்றேரை பணி அமர்த்தும் செயலில் ஈடுபட மாட்டோம் என்ற கொள்கை அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.

மூன்று: தற்போதைய நிலையில், இந்திய அளவில் அரசுத் துறையில் பணியாற்றுவதை விடவும் தனியார் துறைகளில் பணிபுரிவே ரின் எண்ணிக்கை அதிகம் என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது. மாநில அரசு தனது தொழிற் கொள்கையை 2007ம் ஆண்டில் அறி வித்த போதும், அதன் பின்னர் பல்வேறு புரிந் துணர்வு ஒப்பந்தங்களை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்கிற போதும், பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப் பயன்படும் திட்டம் என்று கூறுகின்றனர். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் இப்படித்தான் உருவாகும் என்று, மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. இதற் கும் ஆதாரம் கொடுக்கப்படவில்லை. தாய் மொழியை மையப்படுத்திய வேலைவாய்ப்பு இத்தகைய தனியார் துறைகளில் எப்படி உரு வாகும் என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. ஒரு அரசு தன்னைவிட வலிமையான தனியா ரிடம் தன் ஆட்சியதிகாரத்தை வெளிப்படுத்த இயலாது. உலக வங்கியிடம் கடன் பெற்றதற் காக கைகட்டி நிற்கிற மூன்றாம் உலக நாடு கள், அந்த உலக வங்கி அதிகாரத்தை கை வசம் வைத்திருக்கும் பெரும் முதலாளிகளி டம் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்தி விட முடியும். தமிழகத்தில், தகவல் தொழில் நுட்பத்துறை, புதிய மின் உற்பத்தி நிறுவனங் களின் வருகை, செல்ஃபோன் உற்பத்தி நிறு வனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏராளமான சலுகைகளை வாரிவழங் கும் அரசு, தமிழில் படித்தால் வேலை வாய்ப் பில் முன்னுரிமை என அவசரச்சட்டம் கொண்டு வருவதனால் என்ன பயன்? தனி யாருக்கு வழங்கும் சலுகைகளை அனுப விக்க முடிகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத் தர மக்கள் பயன் பெற வேண்டிய இடஒதுக் கீடு உள்ளிட்ட பல்வேறு உரிமைகள், தனியார் துறைக்குப் பொருந்துவதில்லை. எனவே தனியாருக்குக் காட்டும் தாராளத்தை முழு மையாக மாற்றிக் கொள்ளாமல், அரசின் அறி விப்பு காகிதப் பூவாகத்தான் இருக்கும். மேற்படி மூன்றும் தாய்மொழிக் கல்விக் குத் தடையாக உள்ளன. இக்கொள்கை அம லாக்கத்தில், தி.மு.க அரசு மற்ற மாநிலங்களை விடவும் முனைப்புக் காட்டுகிறது. உலகப் பொருளாதாரத்துடன் மூன்றாம் உலகப் பொரு ளாதாரம் இணைக்கப்பட்டதே, மூன்றாம் உலகச் சமூகங்களைப் பின்னோக்கி இழுத் துக் கொண்டிருக்கும் பிராந்திய வாதம், பிரி வினைவாதம் மற்றும் தனிமை வாதம் தலைத் தோங்க காரணம். நவீன காலனியாதிக்க மானது ஒரு நாட்டில் இனக்குழு மேன்மை வாதம், பிராந்திய மேன்மைவாதம், சமய மேன்மைவாதம் ஆகியவை தலைத்தோங்கு வதற்கான சூழலை உருவாக்குகிறது. இப்படிப் பட்ட சூழலினால் உருவான பிரிவினைவாத சக்திகளை மோசமானவை என வர்ணித்துக் கொண்டே, அவைகளைத் தங்கள் நோக்கத் தை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்து கின்றனர் என்று பேரா. பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறார். இத்தகைய பொருளாதாரக் கொள்கையுடன் சமரசம் செய்து கொண் டுள்ள மாநில அரசு, வேலை வாய்ப்பினை உருவாக்க முடியாது என்று தெரிந்த பின் னரும், தமிழில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற அவசரச் சட் டம் வெளியிடக் காரணம், செம்மொழி மாநாடு குறித்த விமர்சனம் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் சுமார் 68 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர் களில் 90 சதமானோர் தமிழில் படித்தவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறுக்க முடியாது. எனவே மீண்டும் மீண்டும் பொருளில்லா காலிப் பாத்திரத்தை முன்னால் வைத்து விட்டு, கரண்டியை எல்லேருக்கும் கொடுத்த கதையைப் போல், கொள்கையை மாற்றாமல் வேலை வாய்ப்பு உருவாகாது என்பதை மாநில ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

Thanks to theekkathir on 14.10.2010

புதன், 13 அக்டோபர், 2010

கோயபல்ஸ் பிரச்சாரமும் வேலைவாய்ப்பும்

ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கோயபல்ஸ்,தொடர்ந்து செய்து வந்த பொய்ப் பிரச்சாரம் உண்மையைப் போல் நம்புவதாக இருந்தது,அதனால் தான் பொய்ப் பிரச்சாரம் செய்வோரை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்யாதேஎன்பார்கள் ஒரு பொய் பலமுறை திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது,மெய் போல் தோற்றமளிக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள திமுக வின் ஆட்சி இதே பிரச்சாரத்தை மேற்கொள்வது தமிழகம் எங்கும் நடைபெறுகிறது .சமீபத்தில் விழுப்புரம் சென்ற முதல்வரை வரவேற்க தமிழகத்தில் 3லட்சம் பேருக்கு வேலை தந்த முதல்வரே,வருக வருக என பிரம்மாண்ட கட்டவுட்டுகளை வைத்திருந்தனர் அடுத்து கலைஞர் 86, என்ற பெயரில் அவர் மகள் கனிமொழி நடத்தி வரும் வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் 73ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தது என்கிற தகவல்.குமரி,விருதுநகர்,நீலகிரி,கடலூர் ,திருச்சி மாவட்டங்களில் இந்த முகாம் நடந்ததாகவும், அதில் 73 ஆயிரம் இளைஞர்கள் பயனடைந்ததாகவும் செய்திகள் வெளிவருகின்றன. மேலே கண்ட இரு தகவல்களும் இளைஞர்களை ஏமாற்றும் பொய்ப் பிரச்சாரத் தகவல் என ஆணித்தரமாகக் கூறலாம் முதலில் அரசு கொடுத்ததாகச் சொல்லப்படும் வேலைகளில் 80 சதமானம், நிரந்தரமற்றது ,பணிப்பாதுகாப்பு அற்றது சமூகப் பாதுகாப்பு இல்லாதது 20சதம் வேலைகள் மட்டுமே தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டது என்பதை பல முறை கூறியுள்ளோம் .

இரண்டாவது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த இளைஞர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தில் இருந்து 62 லட்சமாக உயர்ந்துள்ளது2006ல் இருந்த எண்ணிக்கையில் 61 சதமானம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பெருக்கத்தை ஒப்பிடும் போது யானை பசிக்கு சோளப் பொறி கொடுத்த கதை தான் நினைவுக்கு வரும்.இதிலும் சத்துணவு,மக்கள் நலப்பணி,கிராம டேங்க் ஆப்பரேட்டர் போன்றவர்கள் முதல்வர் கூற்றுப்படி முழுநேரப்பணியாளர்கள் அல்ல.இந்த அரைகுறைப் பணி வாழ்க்கைத் தேவையை நிறை வேற்றாது.

மூன்றாவதாக, 2010,ஜனவரியில்,கவர்னர் உரையின்போது சுமார் 2இலட்சம் காலிப்பணியிடங்கள் அரசுத் துறையில் இருப்பதாக ,மாநில முதல்வர் ஒப்புக் கொண்டு இருக்கின்றார்.இது நீண்ட நாள்களாக காலியாக உள்ளது .இதற்கான வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கு பதிலாக கனிமொழி மூலம் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது ஏன்? அதுவும் தனியார் நிறுவனங்களில் யார் சென்று அணுகினாலும் கிடைக்கிற வேலைக்கு ,திமுக கட்சி மூலம் ஏற்பாடு செய்வது,ஏன்? இப்படி கேள்வி மேல் கேள்விகள் பொது மக்களால் வினவப்படுவதற்கு ,மாநில அரசு எப்போதும் போல் காதுகளை இறுக மூடிக்கொள்கிறது ஏனென்றால் மேற்படி அரசு தந்த வேலைகளோ கனிமொழி நடத்திய முகாம்களோ,மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்பதை பல்வேறு விவரங்கள் உறுதி செய்கின்றன.

சுய வேலை வாய்ப்பும் - ஏமாற்றமும்.

கடந்த பிப்-25 அன்று சென்னை விருந்தினர் மாளிகை முன்பு சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்ட எண்ணற்ற இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர் அதில் ஒரு இளைஞர் ,திருமணமானவர் இருந்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்த விரக்தியில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,என் சடலத்தின் மீது நின்று போராடுங்கள் நீங்களாவது நல்லாயிருங்கள் என பேசிக் கொண்டிருந்தார் இவருடைய ஏமாற்றத்திற்கு காரணம் 3ழு இன்ஃபோடெக்என்கிற பெரும் நிறுவனமும் அரசும் ஆகும். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் சகாஜ் என்ற நிறுவனத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருந்தனர் வேறு மாநிலங்களிலும் இந்த நிலை இருக்கலாம் என்றே தெரிகிறது .

இது தகவல் தொழில் நுட்ப உலகம், இன்னும் வரிசையில் காத்திருக்கலாமா? கம்ப்யூட்டர் உலகில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சேவைகளைப் பயன்படுத்துங்கள் என பஸ் நிலையத்தில் லேகியம் விற்பவனைப் போல்,பன்னாட்டு ,இந்நாட்டு நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளும் விளம்பரம் செய்கின்றன.இந்தியா முழுவதும் கிராமங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப் போகிறோம் என்றார் பிரதமர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் மோசம் போய் உள்ளனர்.
அரசு அறிவிப்பின் படி,கிராமங்களில் பொதுச் சேவை மையம்என்பதை துவக்கினார்கள். தமிழகத்தில் சமார்5400 மையங்கள் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது ஒரு மையத்தை செயல்படுத்த படித்த இளைஞர் ஒருவர் அந்த மையத்திற்கு பொறுப்பாக்கப் பட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்ய வேண்டும். இளைஞர் ஒருவர் ரூ1.25லட்சம் முதலீடு செய்தால் நிறவனம் ரூ60ஆயிரம் பெறுமானமுள்ள சாதனங்களைத் தருவார்கள் கிராமத்தில் நீ அரிசி எடுத்துவா ,நான் உமி எடுத்து வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதித் தின்னலாம்என்று சொல்வார்கள் அது போல் தான் இந்த ஞ.ஞ.ஞ. (ஞரடெஉ, யீசஎயவந, யீயசவநேசளாயீ. )என்ற முறையும். இதில் சில அரசுத்துறை வங்கிகள் கடன் தருவதால் பப்ளிக் அந்தஸ்தில் இணைகிறார்கள் மேலே கூறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து கடைதிறந்தால் கொள்வார் யாரும் இல்லை. சேவை மையத்தில் தொலைபேசி பில்,டுஐஊ பிரீமியம்,சிட்டா,அடங்கல்,செல்போன் ரீசார்ஜ் என பல்வேறு சேவைகள் நடைபெறும் ஒவ்வொன்றிற்கும் சேவைக் கட்டணம் உண்டு. எனவே,முதலீட்டை குறுகிய காலத்தில் மீட்டுவிடலாம், சுய வேலைவாய்ப்பு முறையில் காலமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம், என கற்பனை சிறகசைத்த அனைவரும் சிறகொடிந்து நிற்கின்றனர்.

ஒரு பொதுச் சேவை மையப் பணியாளர் எங்கள் மையத்தில் செல்போன் ரீசார்ஜ் அதிகம் நடைபெறுகிறது.இதில் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4 சதம் சேவை மையத்தை நடத்துபவருக்கும் 4சதம் நிறுவனத்திற்கும் செல்கிறது இந்த ஒப்பந்தப்படி எந்த விதமான பெரும் முதலீடுகளையோ, உழைப்பையோ செலுத்தாமல் சம்பாதிப்பதற்கு, சகாஜ் மற்றும். 3ழுஇன் ஃபோடெக் ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.பொதுத்துறை வங்கிகளை நேரடியாக இது போன்ற சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் ஈடுபடுத்தி இருந்தால் சம்பந்தப்பட்ட இளைஞர் கூடுதல் பலனடைய முடியும் மறுபுறம் மக்களின் பயன்படுத்தும் திறன் அதிகரிக்கச் செய்ய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், கம்ப்யூட்டரை அறிமுகம் செய்வது எந்த வகையிலும் பலனளிக்காது,என்பதையும் மேற்படி திட்டங்களில் பார்க்க முடிகிறது. 6மாதங்களுக்கு மேலான பின்னரும், சேவை மையத்தில் வெறும் செல்போன் ரீசார்ஜ் மட்டுமே நடைபெறுவது,மிகப்பெரிய ஏமாற்று வேலை எல்லா கடைகளிலும் ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனையாகும் போது பொதுச்சேவை மையத்தை எத்தனை பேர் தேடி வருவார்கள்? இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுவது போல், வாங்கும் சக்தி அதிகரிக்காமல், இது போன்று நுகர்வுப் பொருள்கள் அறிமுகம் செய்யப்படுவது, விற்பனையாகாது, அல்லது அத்தியாவசிய தேவைக்கு பணம் ஒதுக்காமல், ஆடம்பரத்திற்கு பணம் ஒதுக்குவது அதிகமாகும் என்பதை நமது அரசுகள் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றன. நமது நாட்டில் செல்போன் இன்கமிங் -கிற்கு மட்டுமே கிராமங்களில் பயன்படுகிறது. ஆயுள் காலா சேவையைப் பெற்றவர்களே அதிகம் என்ற தகவலை சமீபத்திய ஆய்வு வெளியிட்டுள்ளது. அதே போல் மிஸ்டு கால் கொடுப்பவர்களும் கிராமங்களில் அதிகம் என்ற தகவல் இருக்கிறது.

இந்நிலையில் சிராமப் பொதுச் சேவை மையம், சுயவேலை வாய்ப்பை எந்த வகையில் அதிகரிக்கும்? இது போன்ற உண்மைகளின் காரணமாகத்தான் , நாம் மேலே குறிப்பிட்ட இளைஞன் தற்கொலை செய்து கொள்வதாக அறிவிப்பு வெளியிடுகிறான்.

சுயமரியாதை என்ன விலை?

நாம் மேலே பட்டியலிட்டுள்ள 1, தரப்பட்ட அரசு வேலைகளில் 80 சதம் சமூகப் பாதுகாப்பு அற்றது. 2.கனிமொழி வேலைவாய்ப்பு முகாம். 3.அரசு தனியார் இணைந்த சுயவேலை வாய்ப்பு ஆகிய மூன்று வேலைகளுமே சுயமரியாதையை நேசிப்பவர் பின்பற்றுபவர் செய்யக் கூடிய வேலைகளல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமெர்த்தியா சென், வேலை என்பது 3. அடிப்படை குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
1.உற்பத்தி சார்ந்தது.
2.உழைப்புக்கான அங்கீகாரத்தை தருவது .
3.வருமானத்தை உறுதி செய்வதாக இருப்பது.
அமெர்த்தியா சென் குறிப்பிட்ட குணாம்சங்களுடன் ஒத்துப்போக வில்லை. முதலாளிகள் தனியார் நிறுவனங்கள், சுரண்டலை மேம்படுத்தி, லாபத்தை மையமாகக் கொண்டவை அப்படித்தான் இருக்கும். அரசும் இதே முறையை மேற்கொள்வது, நிச்சயமாக ஏற்புடையதல்ல.மக்கள் நலன் காக்கும்அரசு என சொல்லிக்கொள்ள இயலாது. இத்தகைய பணி நியமனங்களின் மூலம் மக்கள் வயிறு பிழைத்திருக்கிறார்களே அல்லாது வாழ்க்கையாக வாழவில்லை. இப்படித்தான் பா.ஜ.க ஒரு கோடிப் பேருக்கு வேலை கொடுத்தோம்! இந்தியா ஒளிர்கிறது,என பிரச்சாரம் செய்தது.மக்கள் மரண அடி கொடுத்தார்கள் என்பதை திமுக நினைவில் கொள்வது அவசியம் .

நன்றி தீக்கதிர் 2009 march